Kadhambam July 2023

Page 1

ஜூலை - 2023

July - 2023

இந்த இதழ்

சிறப்பிதழ்

- ஜூலை 2023

1

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ஒளிரும் நட்சத்திரங்கள்... நாளைய தமிழ் வானில் நம்பிக்கை நட்சத்திரங்கள்..!


- ஜூலை 2023

2


அறங்காவலர் குழு

தலைவரிடமிருந்து...

உள்ளே... தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் ப�ோட்டி நிகழ்வு

11

லேனா தேர்வு செய்த ‘பேனா’க்கள்.. மாணவர் கட்டுரைகள் நீங்கள் பெண்ணியவாதியா? - வழக்கறிஞர் அஜிதா

20

காப்பீட்டு முகவருடன்... ஒரு நிகர்நிலை சந்திப்பு

22

சிறுகதை: கனவு

24

கவிதை: கணேஷ்பிரியா சிவசெல்வம்

27

நம் தமிழ்ப் பள்ளிகள் வெற்றிகரமாக கால அட்டவணையின்படி வகுப்புகள் நடத்தி, தேர்வுகள் மற்றும் ஆண்டு விழாக்கள் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், மாணவ செல்வங்கள் தங்கள் கல்விப்பாதையில் த�ொடர்ந்து வெற்றி நடை ப�ோட எனது மனங்கனிந்த வாழ்த்துகள்.

மார்ச் வாசிப்பு மாதம்

29

Fetna-வின் தமிழ்த் தேனீ ப�ோட்டி

30

கவிதை: செந்தில்ராஜ்

31

சிறுகதை: அம்மா நகை

32

கடந்த ஓராண்டு காலம் தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் செயற்குழு நம் சங்கத்திற்காக ஆற்றிவரும் எண்ணற்ற பணிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். செயற்குழுவில் தற்சமயம் காலியாக உள்ள சில இடங்களை நிரப்ப அனைத்து முயற்சிகளும் நடைபெற்றுக் க�ொண்டிருக்கின்றன. இனி வரும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நம் சங்கத்தின் வரலாறு, க�ொள்கை, க�ோட்பாடுகள் குறித்த அறிமுக வகுப்புகள் நடத்த அறங்காவலர் குழு முயற்சிகள் எடுத்து வருகிற�ோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் க�ொள்கிறேன்.

வெற்றிக் கனியை தக்க வைக்கும்

முக்கியமாக நம் சங்க உறுப்பினர்கள் உணர வேண்டிய ஒன்று, தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளும், தமிழ்ப் பள்ளிகளும் நம் உறுப்பினர்கள் செலுத்தும் கட்டணங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகின்றன. கால மாற்றங்கள், ப�ொருளாதார நெருக்கடிகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தினாலும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாகப் பங்கேற்று நம் ஆதரவை அளிக்க வேண்டும். எளிமையிலும் இனிமை காண்பது நம் தமிழ் பண்பாடு அல்லவா!! நாம் அனைவரும் தன்னார்வத் த�ொண்டர்கள்தான் என்பதை உணர்ந்து, ஒற்றுமையாக சங்கத்தை நடத்தி செல்வோம் என்பதில் எனக்கு ஐயமில்லை. மீண்டும் உங்கள் அனைவரையும் க�ோடை சுற்றுலா நிகழ்ச்சியில் கண்டு அளவளாவ ஆவலாக உள்ளேன். அன்பு வணக்கங்களுடன்

கல்பனா ஹரிஹரன் டிராய், மிச்சிகன்

நம் தமிழ்ப் பள்ளிகள்!

34

கவிதைப் பூக்கள்: செ.உதயசங்கர், செந்தில்குமார் பழனிச்சாமி, சரண்யா இராமகிருஷ்ணன்

37

நிகழ்வுகள்...

40

மாணவர் கதம்பம்

43

மாணவர் திட்டப்பணிகள்

48

இவர்கள் சந்தித்தால்..! - கட்டுரைகள் 50 பேசும் ப�ொற்சித்திரமே!

58

எனக்குப் பிடித்த புத்தகம்

60

3 - ஜூலை 2023

ன்பு மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் அறங்காவலர் குழுவின் சார்பாக எனது வணக்கங்கள். க�ோடைப் பருவம் த�ொடங்கும் இந்த இனிய நாட்களில் மிச்சிகன் மாகாணத்தின் இயற்கை அழகும் சுற்றுலாக்களும் நம் வாழ்க்கையை மேலும் இனிதாக்குகிறது என்பதில் ஐயமில்லை.

12-19


C4D MORTGAGE COMPANY LLC CHINMAY DESHPANDE

100 E BIG BEAVER RD, STE 940

MORTGAGE BROKER

TROY, MI 48083

NMLS: 161464

(347) 266-1550 DIRECT (800) 494-4975 OFFICE

PURCHASE, REFI, OR CASHOUT BEST IN BUSINESS SINCE 2003 GUARANTEED CLOSING IN 30 DAYS LOWEST RATES IN THE MARKET CALL US A FREE CONSULTATION

- ஜூலை 2023

4 NMLS: 151261 LICENSED IN: MI, NC, SC, PA, FL, GA, CO WWW.C4DMORTGAGE.COM


செயற்குழு

தலைவரிடமிருந்து...

ன்பார்ந்த மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே! வணக்கம்!

நமது மிச்சிகன் மாகாணத்தில் க�ோடை என்றாலே க�ொண்டாட்டம்தான்!

குறளமுதத்தில் உழவுக்கென்று ஒரு அதிகாரம் உள்ளது. ‘த�ொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.’

இந்த இரு திருக்குறள்களும் நம்மைப்போன்ற வீட்டிலேயே த�ோட்டம் அமைப்பவர்களுக்கும் சில யுக்திகளை தெரிவிக்கின்றன! அவற்றை கடைபிடிக்க முயன்றால் நலம் கிட்டும்! சத்தான உணவு மட்டுமல்லாமல் த�ோட்ட வேலைகள் செய்வதால் உடலும் மனமும் உற்சாகம் அடையும்! வெளியில் த�ோலில் வெயில் பட வேலை செய்வதால் ‘வைட்டமின் டி’ யை உடல் நிறைய உற்பத்தி செய்யும். மிச்சிகனில் வெயில் அடிப்பது குறைவான நாட்களே என்பதால் நம்மை ப�ோல் அடர் நிற த�ோல் க�ொண்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு வந்து விடுகிறது. இதனால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இந்தக் க�ோடையில் உங்களுக்கு ‘வைட்டமின் டி’ மட்டுமின்றி நல்ல விளைச்சலும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்;

-என்ற கவிமணியின் வரிகளுக்கேற்ப, இந்தக் க�ோடையில் விளையாட்டு மற்றும் உடல் நலன் பேணும் நடவடிக்கைகளில் ஈடுபட அனைவரும் முயற்சி செய்வோம்! இதை வலியுறுத்தும் ப�ொருட்டு நம் சங்கத்தின் க�ோடை க�ொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்த உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடுகிற�ோம்! இந்த இதழ் மிச்சிகன் தமிழ்ச் சங்கப் பள்ளிகளைப் பற்றிய சிறப்பு இதழ்! உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அவர்களின் வீட்டு மாணவச் செல்வங்களை அடுத்த கல்வியாண்டில் நமது பள்ளிகளில் சேர்க்க ச�ொல்லுங்கள்! இந்த வருடத்தைய எனது மனப்பூர்வமான அமெரிக்க சுதந்திர தின (ஜூலை 4) மற்றும் இந்திய சுதந்திர தின (ஆகஸ்ட் 15) வாழ்த்துகள்! இந்த நான்காவது கதம்பத்தையும் சிறப்பாக வெளியிட்டுள்ள கதம்பம் இதழின் ஆசிரியர் திருமதி. மீனா முருகனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அவரின் சீரிய பணிக்கு நன்றி! அனைவரும் தமிழில் த�ொடர்ந்து எழுதுங்கள்! வாசியுங்கள்! வளமடையுங்கள்! என்றும் அன்புடன்....

முனைவர். சுரேஷ் செல்வராஜ் பழனியாண்டி

5 - ஜூலை 2023

பச்சைப் பசேலென்று மிச்சிகனே பசுமை ப�ோர்த்தி விடும். பல வெளிப்புற நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும்! அதில் குறிப்பாக வேளாண்மையில் ஆர்வமுள்ள நமது தமிழ் மக்கள் த�ோட்டத்தை செப்பனிட்டு, வண்ண வண்ண மலர்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழ வகைகள் என வளர்ப்பது வாடிக்கை!


EXCELLENCE THROUGH

ENGINEERING

NOW HIRING

FULL-TIME POSITIONS AVAILABLE

OPEN POSITIONS REQUIRED TRAINING WILL BE PROVIDED MACHINE/ ASSEMBLY OPERATORS $14/HOUR FORKLIFT/ HILO DRIVER $16-20/HOUR

PLASTIC INJECTION MOLDING EXPERIENCE REQUIRED DIE / MOLD SETTER $17-21/HOUR PROCESS TECHNICIAN $25-30/HOUR PROCESS ENGINEER $25-28/HOUR MAINTENENCE GENERAL $22-24/HOUR TOOLING TECHNICIAN/MOLD MAKER/REPAIR $25-27/HOUR MAINTENANCE TECHNICIAN $30-35/HOUR FIXTURE TECH $18-22/HOUR AUTOMATION TECH $18-22/HOUR

SHIFT PREMIUMS : 2nd Shift +$.50 3rd Shift +$1.25

- ஜூலை 2023

6

CALL/TEXT 734-293-3350 EMAIL YOUR RESUME TO

HARMINDER.NAGRA@NYXINC.COM

BENEFITS FREE SHUTTLE SERVICE SIGN-ON BONUS REFERRAL BONUS PAID TRAININGS FOR ALL ON THE JOB POSITIONS PAID BREAKS FOR ALL FLOOR EMPLOYEES EDUCATION REIMBURSEMENT PROGRAMS AVAILABLE BLUE CROSS PPO/HSA MEDICAL PLANS DELTA DENTAL INSURANCE EYEMED VISION INSURANCE FREE 20K BASIC LIFE INSURANCE 401(K) WITH COMPANY MATCHING PAID TIME OFF (PTO) PAID HOLIDAYS FSA AND DEPENDENT CARE AFTER 1 YEAR CAREER PATHING EMPLOYEE ASSISTANCE PROGRAM SHORT & LONG TERM DISABILITY OPTIONS

Scan our QR Code with your phone's camera app to apply straight from your phone in under 5 minutes!


ஆசிரியர்

தலையங்கம்...

அனைவருக்கும் வணக்கம்! செஞ் ஞாயிற்றுச் செலவும், அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் நம் மிச்சிகனில் சூழ்ந்திருக்கும் இத்தருணத்தில் க�ோடை மழையாக இத�ோ மற்றும�ொரு கதம்பம். இந்த இதழில் இளமை புதுமை என 50 மிச்சிகன் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது நமது “கதம்பம்” இதழின் புதிய மைல்கல்.

அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு நடுவர் பரிசு பெற்ற மாணவர் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் கட்டுரைப் ப�ோட்டியில் “இவர்கள் இருவரும் சந்தித்தால்” தலைப்பில் மாணவர்கள் அசத்திய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்தும் தட்டச்சு செய்ய உதவிய திருமிகு.

அகவிருள் அகற்றி அறிவ�ொளி வீச உதவிய

தேர்வுகள், ஆண்டு விழா ப�ோட்டிகள் முடித்து சற்று இளைப்பாறும் நமக்கு க�ோடை விழா, இந்திய சுதந்திர தினம் என வரிசையாக க�ொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. சென்ற இதழ் படித்து ஆதரவாக கருத்துகளையும் பாராட்டுக்களும் அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் புது இதழும்

சரண்யா ராமகிருஷ்ணன், திருமிகு. ராதிகா

உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்

வேலாயுதம், திரு. கண்ணன் பாலசுப்ரமணியன்

என நம்புகிறேன். கற்றதும் பெற்றதும்

அவர்களுக்கு நன்றி.

இப்பொறுப்பில் அதிகம். இந்த நல்ல வாய்ப்பை

சிந்தைக்கும் நற்கருத்துக்களை பகிர்ந்துள்ள பிரபல வழக்கறிஞர் திருமிகு. அஜிதா அவர்களுக்கு நன்றி. திருமிகு. கற்பகம் ரகுநாதன் அவர்களின் “காப்பீட்டு முகவருடன் சந்திப்பு” உரையாடல், நம் அனைவரும் அவசியம் தெரிந்து க�ொள்ள வேண்டிய பாடம். இந்த இதழை சிறப்பாக வடிவமைக்க என்னுடன் மதிப்பாய்வு செய்த திருமிகு. ராதிகா அவர்களுக்கு அனைவருக்கும் நன்றி

நல்கிய மிச்சிகன் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி. கதம்பம் - உங்களால்..! உங்களுக்காக..!! உங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும் kadhambam@ mitamilsangam.org மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். நன்றி.

மீனா முருகன்

7

ஆசிரியர், கதம்பம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம்.

- ஜூலை 2023

மேலும் இவ்விதழில் நம் சிந்தனைக்கும்

மற்றும் திரு. பாலாஜி ராதாகிருஷ்ணன்

தமிழில் எழுத ஊக்குவித்த பெற்றோருக்கும்,

பரபரப்பாக முடிந்த தமிழ்ப் பள்ளி

கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன்

திரு. ஞானதேசிகன், திரு. மன�ோஜ் குமார்

ஆசிரியர்களுக்கும், த�ொடர்ந்து பிள்ளைகளை

ஆசிரியர்களுக்கும் நன்றிகள் பல.

இவ்விதழில் கதம்பம் கட்டுரைப் ப�ோட்டியில்

நன்றி. மாணவர் கதம்பம் உயிர் பெற உதவிய

அவர்களுக்கும் தமிழ்ப் பள்ளி தலைமை


- ஜூலை 2023

8

28974 Orchard Lake Rd, Farmington Hills, MI 48334 www.ramcreations.com | info@ramcreations.com | 248.851.1400


மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் தலைவர்கள் மடல்...

ண்டன், ஃபார்மிங்டன் மற்றும் டிராய் நகரங்களில் செயல்பட்டுவரும் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளிகள், மார்ச் முதல் ஜூன் வரையிலான மூன்றாம் பருவத்தினை (TERM) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இந்த காலகட்டத்தில் எங்கள் பள்ளிகள், மார்ச் வாசிப்பு மாதம், வட அமெரிக்க தமிழ்ப் பேரவையின் (FETNA) தமிழ்த் தேனீ ப�ோட்டிகள், மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் கட்டுரைப் ப�ோட்டி, கவிதை வாசிக்கும் ப�ோட்டி என பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பள்ளி மாணவர்கள் தமிழ்த் தேனீ ப�ோட்டிகளில் அனைத்து நிலைகளிலும் (தேனீ 1 முதல் தேனீ 5 வரை) மண்டல அளவிலான ப�ோட்டிகளில் வெற்றி பெற்று, கலிப�ோர்னியா மாகாணம் சாக்ரமண்டோ நகரத்தில் நடைபெற இருக்கும் இறுதிப் ப�ோட்டிகளில் பங்குபெற தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பள்ளிகளிலும் இப்போட்டிகளுக்கென தன்னார்வலர்களை நியமித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து மாதிரிப் ப�ோட்டிகள் நடத்தி வழி நடத்தியுள்ளோம். தமிழ் “தானே” என்று கருதாமல், தமிழைத் தேனாகப் பருகுபவர்கள் எங்கள் தமிழ்ப் பள்ளி மாணவர்கள். மேலும் எங்கள் தமிழ்ப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு விழா ப�ோட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். மழலைப் பாடல்கள், மாறுவேடப் ப�ோட்டிகள், ஆத்திசூடி திருக்குறள் கதைகள், சிலப்பதிகாரப் பாடல்கள், மேல்நிலை வகுப்புகளுக்கான பேச்சுப் ப�ோட்டிகள் என அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப ப�ோட்டிகள் நடத்தி, மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை கண்டு வியந்து, வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நடுவர்கள் சற்றே சிரமத்திற்கு உள்ளாகினர். மூன்று பள்ளிகளும் தனித்தனியாக ஆண்டு விழாவினை ஜூன் மாதம் மூன்றாம் நாள் (வைகாசித் திங்கள் 20 ஆம் நாள்) சிறப்பாக க�ொண்டாடின�ோம்.

அன்றைய விழாவில் ஆண்டு விழா ப�ோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பினை முடித்தமைக்கான சான்றிதழ்களும் (Course Completion Certificate) வழங்கப்பட்டன. இவ்விழாவில் அனைத்து வகுப்பு மாணவர்களும், கலை நிகழ்ச்சிகளையும், பல்சுவை நிகழ்ச்சிகளையும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் உதவியுடன் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் இவ்விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தின�ோம். முத்தாய்ப்பாக ஜூன் 10-ம் (வைகாசித் திங்கள் 27ஆம்) தேதி அன்று மூன்று பள்ளிகளும் இணைந்து திகட்டாத தமிழ்க் கல்வியை எங்கள் பள்ளிகளில் வெற்றிகரமாக முடித்து வெளியேறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு (Graduation) விழாவினை ஓரியன் பார்க் நகரத்தில் திட்டமிட்டு நடத்தின�ோம். அன்றைய தினத்தில் செவிக்கு விருந்தாக, பட்டம் பெறும் அனைத்து மாணவர்களின் பட்டமளிப்பு உரை அமைந்தது சிறப்பு. உடனே சிறிதே வயிற்றுக்கும் விருந்து அளித்து அனைவரையும் உபசரித்தோம். இந்தக் கல்வியாண்டை சிறப்பாக நிறைவு பெற உதவிய பெற்றோர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் க�ொள்கிற�ோம். நாம் கற்ற நற்றமிழை நம் அடுத்த தலைமுறையினருக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்க பள்ளிகளின் வாயிலாக க�ொண்டு செல்வதில் பெருமிதம் க�ொள்வோம். அன்புடன்,

ஆனந்த் பாலசுப்ரமணியன், ஃபார்மிங்டன் ஹில்ஸ் தமிழ்ப்பள்ளி

கார்த்திகேயன் பாலசுப்ரமணியன், கேண்டன் தமிழ்ப்பள்ளி

கலையரசி சிவசுந்தரப்பாண்டியன், டிராய் தமிழ்ப்பள்ளி

9 - ஜூலை 2023

கே


- ஜூலை 2023

10


சேர்ந்த நண்பன்’ தலைப்பு கட்டுரைகளில் உவமையாக சங்க கால நட்பு பிசிராந்தையார், க�ோப்பெருஞ்சோழன் நட்பினை கையாண்டிருந்தனர், அநேகர். கட்டுரைகளை தேர்வு செய்வதற்கு, தங்களது இல்லத்தில் அனைவரையும் வரவேற்று சிற்றுண்டியுடன் அந்த மாலை நேரத்தினை பயனுறச் செய்த திரு செல்வா ஆனந்தவேல், திருமதி கிருஷ்ணவேணி அவர்களுக்கும் மற்றும் தங்களது நேரத்தை செலவிட்ட தேர்வுக்குழுவினருக்கும் நன்றி. கலைமாமணி முனைவர் திரு,லேனா தமிழ்வாணன் அவர்கள், நமது மிச்சிகன் மாணவர்களின் கட்டுரைகளை படித்து 9-12 மற்றும் 13-16 வயதினருக்கான பிரிவுகளில் 6 நடுவர் சிறப்பு பரிசாக தேர்ந்தெடுத்தார். மேலும் சிறந்த கையெழுத்து, சிறந்த ஆக்கச் சிந்தனை, சிறந்த விவரிப்பு நடை, சிறந்த கருத்துக்கள் பதிவு என ம�ொத்தம் இருபது மாணவச் செல்வங்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்களின் கலந்துரையாடலுடன் வெற்றியாளர்களின் அறிவிப்பு

கட்டுரைப்

மிச்சிகன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான

‘மெல்ல தமிழ் இனிச் சாகும் அந்த

மேற்கு ம�ொழிகள் புவியிசை ஓங்கும்... சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் க�ொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ -என்ற பாரதியின் வார்த்தைகள் தந்த உந்துதலினால�ோ மேற்குத் திசையில் பயிலும் மாணவ செல்வங்களிடையில் கட்டுரைப் ப�ோட்டி நடத்தலாமே என்னும் ஆர்வத்தில் ஆரம்பித்ததே மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் கதம்பம் கட்டுரைப் ப�ோட்டி.

மார்ச் மாதம் 17ம் தேதி இணையம் வழி நேரலையாக இனிதே நடைபெற்றது. சிறப்பு விருந்தினர், தான் மாணவ பருவத்தில் ப�ோட்டிகளில் பங்கேற்ற அனுபவம், கட்டுரையின் விதிமுறைகளை உள்வாங்கி எழுதுதல், எழுத்து நடை ப�ோன்ற பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தார். அதிகாலை இந்திய நேரப்படி 4:30 மணிக்கே நம் பிள்ளைகளின் தமிழ் கேட்க, பிள்ளைகள�ோடு பிள்ளையாய் சேர்ந்து, அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் இறுதிவரை இடைவேளையின்றி இணையத்தில் இணைந்த இந்த இளைஞரின் ஆர்வத்தை என்னவென்று ச�ொல்ல.! சிறப்பு விருந்தினர் ஒருங்கிணைப்புக்கு உதவிய திரு. ராம்லக் ஷ்மணன் லேனாதமிழ்வாணன் அவர்களுக்கும் நன்றி.

கலைமாமணி முனைவர். திரு லேனா தமிழ்வாணன் M.A. M.Litt, அவர்களின் வழிகாட்டுதலுடன், க�ொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு நாங்களே எதிர்பாராத அளவில் கட்டுரைகள் இந்நிகழ்ச்சியில் இணைந்த தலைமை ஆசிரியர்கள் குவிந்த வண்ணம் இருந்தன. ‘நான் பள்ளி கல்வி உரையில் - திரு. ஆனந்த் பாலசுப்ரமணியன் (ஃபார்மிங்டன்) கண்காணிப்பாளர் ஆனால் க�ொண்டு அவர்கள் இது ப�ோன்ற பல ப�ோட்டிகள் நடத்தப்பட தமிழ்நாட்டில் வர விரும்பும் மாற்றங்கள்’ என்னும் வேண்டும், அது மாணவர்களை ஊக்குவிக்கும் என்றார். த�ொப்பியும் தலைப்பில் அதிக எண்ணிக்கையில் கண்ணாடியும் திருமதி. கலையரசி ராமநாதன் (டிராய்) அவர்கள் கட்டுரைகள் பெற்றோம். மாணவர்கள் தெரியாதவங்க ‘சுடர் விளக்காயினும் தூண்டுக�ோல் வேண்டும்’ கிடையாது. சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை என உற்சாகப்படுத்தினார். உதவி தலைமை எவ்வாறு சரி செய்யலாம் என்று ஆசிரியர். திரு.பாலாஜி இராதாகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை நடையில் படித்து (கேண்டன்) பட்டம் பெற்ற மாணவர்கள் பிரமித்தோம். அதிலும் ‘இவர்கள் அனைவரும் புதிய மாணவர்களுக்கு இருவரும் சந்தித்தால்’ என அவர்களின் உதவ வேண்டும் என Hats off கற்பனையில் இருவரை சந்திக்க வைத்து அறிவுரை வழங்கினார். இவ்வாறு நிகழ்ச்சி அவர்களின் உரையாடலை நிகழ்த்திய விதம் இனிதே நிறைவு பெற்றது.  மிக அருமை. ‘எனது முதல் பிற நாட்டை - ராதிகா வேலாயுதம், ஃபார்மிங்டன் ஹில்ஸ் திரு லேனா தேர்வு செய்த ‘பேனா’க்கள்...

திரு லேனா தமிழ்வாணன் அவர்களால் ‘நடுவர் சிறப்பு பரிசு’ பெற்ற மாணவர்களின் 6 முத்தான கட்டுரைகள் அடுத்து வரும் பக்கங்களில்...

11 - ஜூலை 2023

ப�ோட்டி


இவர்கள்

சந்தித்தால்

ஹேரியட் டப்மண் முன்னுரை: ஹேரியட் டப்மண் ஒரு கருப்பினப் ப�ோராளி. அவர் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என ப�ோராடினார். அவர் நிறைய அடிமைகளை புகைவண்டி செல்லும் சுரங்கப்பாதை வழியாக தப்பிக்க வைத்தார். அவர் இப்போது அமெரிக்காவின் துணை

நந்தனா சுரேஷ் நான் நந்தனா சுரேஷ். டிராய் தமிழ்ப் பள்ளியில் ஏழாவது படிக்கிறேன். எனது பெற்றோர் மற்றும் அண்ணாவுடன் டிராய், மிச்சிகனில் வசிக்கிறேன். எனக்கு படம் வரைய, பரதநாட்டியம் ஆட, தமிழ்த் திரைப்படங்கள் பார்க்க பிடிக்கும்

- ஜூலை 2023

12

கமலா ஹாரிஸ்

அதிபராக உள்ள கமலா ஹாரிசை சந்தித்தால் இருவரும் இப்படித்தான் பேசிக் க�ொள்வார்கள். ஹேரியட்டின் தைரியமும் சேவையும்: கமலா, ஹேரியரட்டிடம் நீங்கள் ஒரு கருப்பினப் பெண்ணாக இருந்து க�ொண்டு எந்த வசதியும் இல்லாமல் எப்படி நீங்கள் மற்ற அடிமைகளுக்கு உதவினீர்கள் என்று கேட்டிருப்பார். ஒரு கருப்பின பெண்ணடிமையாக 1800ல் இருந்து க�ொண்டு உதவுவது கடினமாகத்தான் இருந்தது. அடிமை உரிமையாளர்கள் நிறைய வேலைகளை வாங்கியும் தண்டனைகளை க�ொடுத்தும் துன்புறுத்தியதால் அடிமைகளை எப்படியாவது காப்பாற்ற நினைத்தேன். நான் நிறைய அடிமைகளை சுரங்கப்பாதை வழியாக வரவழைத்து பாதுகாப்பான ரயில் நிலையங்களில் இறக்கி மெழுகுவர்த்தி எரியும் நல்ல மனிதர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன். அடிமைத்தனத்திற்கு எதிரான ப�ோரில் சமையல்காரராகவும், செவிலியாகவும், உளவாளியாகவும் இருந்தேன் என ஹேரியட் ச�ொல்லி இருப்பார். கமலாவின் பணிச்சூழல்: கமலா, ஹேரியட்டை அவரின் தைரியத்திற்காகவும் சேவைக்காகவும் பாராட்டி இருப்பார். கமலாவிடம் உங்களுடைய துணை அதிபர் பணி எப்படி செல்கிறது என ஹேரியட் கேட்டிருப்பார். நீங்கள் அடிமையாக இருந்த காலத்தை விட இப்போது கருப்பின பெண்கள் மேம்பட்டிருந்தாலும் இன்னும் அவ்வளவு எளிதாக மற்றவர்களைப் ப�ோல் குறிப்பாக ஆண்களுக்கு சமமாக நடத்தப்படுவது இல்லை என ச�ொல்லியிருப்பார் கமலா. துணை அதிபர் பதவி ப�ொறுப்பு மிக்கது. எனவே நான் கவனமாக பணியாற்ற வேண்டும் எனவும் கூறி இருப்பார். கமலாவின் வாக்குறுதிகள்: கடைசியாக கமலா ஹேரியட்டிடம் சில வாக்குறுதிகளை கூறியிருப்பார். அவை என்னவென்றால் இனிவரும் காலத்தில் எல்லா பெண்களுக்கும், வேலையில் எல்லா உரிமைகளும் பாதுகாப்பும் வழங்க ஏற்பாடு செய்வேன். எல்லா சிறுமிகளுக்கும் நல்ல கல்வியளித்து தைரியமும், தலைமைப் பண்பு வளரவும் வழி செய்வேன். உங்களைப் ப�ோன்ற சாதனைப் பெண்களை முன்மாதிரியாக வைத்து சமூகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட அறிவுறுத்துவேன். உங்களைப் ப�ோல் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணமும் வளர்த்துக்கொள்ள அமெரிக்காவில் வளரும் எல்லா சிறுமிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்க உழைப்பேன். கடந்த காலத்தை விட பெண்கள் முன்னேறி இருப்பது மகிழ்ச்சி கமலா. உங்கள் நல்ல முயற்சிகள் கைகூட எனது ஆசிகள் என ஹேரியட் வாழ்த்தியிருப்பார். மிக்க நன்றி ஹேரியட்! உங்களை சந்தித்து உங்கள் சேவையையும் தைரியத்தையும் நீங்களே ச�ொல்லி கேட்பது மகிழ்ச்சி என கமலா கூறியிருப்பார். முடிவுரை: பல நல்ல செய்திகளை பகிர்ந்து க�ொண்டு கலந்துரையாடியதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றிருப்பார்கள்.


நான் பள்ளிக் கல்வி கண்காணிப்பாளர் ஆனால்! நான் கேண்டன் தமிழ்ப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து, இந்த வருடம் பட்டம் பெற ப�ோகிறேன். எனக்கு சதுரங்கம் விளையாடுவது பிடிக்கும். கர்நாடக இசையில் தமிழ் பாடல்கள் பாடுவதிலும், புல்லாங்குழல் வாசிப்பதிலும் எனக்கு ஆர்வம்.

ள்ளி என்பது கற்றல், கற்பித்தல�ோடு கல்வி அறிவையும் பெரும் இடம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளுக்கு ஏற்ப “கற்கும் எல்லா மாணவருக்கும், கற்றலில் வாய்ப்பும், உரிமையும் சமம்” என்பதே எனது குறிக்கோள். அதே ப�ோல் மாணவர்களிடம் ஒழுக்கமும் நட்பும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

எனது மாற்றங்கள் பின்வருமாறு

திறமை: மாணவர்களின் கற்கும் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் திறன் அறிந்து அவர்களின் நிலைக்கு ஏற்ற கல்வி அளிக்கப்படும். இதனால், அவர்களுக்கு இடையே தேவையற்ற ப�ோட்டியும் ப�ொறாமையையும் தவிர்க்கலாம். ஒழுக்கம்: மாணவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் ப�ொழுது, ஒழுக்கம் தானாகவே வரும். இது அவர்களிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி தடைகள் இல்லாத கற்கும் சூழலை உருவாக்கும். ஒற்றுமை: வெவ்வேறு விதமான கல்வி அறிவை பெற்றாலும் அவர்களை குழு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஒருங்கிணைத்து அவர்களிடையே நல்ல உறவையும் நட்பையும் மேம்படுத்துவேன். தேர்வு முறை: பகுத்து ஆராயும் திறனின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். மன அழுத்தம் ஏற்படாத வகையில், மாணவர்களின் நிலை மற்றும் விருப்பம் அறிந்து எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்துவேன். தேவைகள்: செயல்வழி கல்வி முறையின் மூலம் கற்பதற்கான அனைத்து வசதிகளையும், அனைவருக்கும் ஏற்படுத்தி தருவேன். நவீன த�ொழில்நுட்பத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்கும் முறையை மேம்படுத்துவேன். கற்பதில் தடுமாற்றங்கள் வரலாம், ஆனால் மேற்கூறிய மாற்றங்களின் மூலம் கற்பிக்கும் முறையில் தடுமாற்றங்கள் வராமல் பார்த்துக் க�ொள்வேன். கசப்பாக அல்லாமல் கசடற கற்பிப்பது எனது விருப்பம். 

13 - ஜூலை 2023

சாய்கிருஷ் பாலாஜி


மு

கநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு!!

நல்ல நட்பு என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒரு பெரிய பாக்கியம். வாழ்க்கை பயணத்தில் நாம் பலரை சந்திக்கிற�ோம். ஆனால் ஒரு சிலரை மட்டுமே எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியும். அப்படி ஒரு நட்பு எனக்கு கிடைத்தது.

அன்று எனக்கு அமெரிக்காவில் பள்ளியின் முதல் நாள். அனைத்து புதிய முகம் மற்றும் அனுபவம். நான் எப்படி எல்லோருடனும் பழகுவேன் என்று என்னை விட என் பெற்றோர்கள் பதட்டமடைந்தனர். நான் இரண்டாவது வரிசையில் அமர்ந்து ஆசிரியர் ச�ொல்வதைக் கேட்டுக் க�ொண்டிருந்தேன். எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு அழகான புன்னகை மற்றும் ஹைஃபை வந்தது. அவள் என் பெயரைக் கேட்டாள், நான் சேன்ட்ரா என்றேன். அவள் தெரேசா. ஆம்! அவள் தான் என் முதல் அமெரிக்க த�ோழி!! நானும் தெரசாவும் பள்ளியில் ஒன்றாக இருந்தோம். நாங்கள் ஒன்றாக விளையாடின�ோம், அவளை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்த, நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். மணி அடித்ததும் என் புதிய த�ோழியை பற்றி ச�ொல்ல அம்மாவிடம் ஓடி வந்தேன். ஆனால் என் அம்மா யாரிடம�ோ பேசுவதை

- ஜூலை 2023

14

என் முதல் அமெரிக்க நட்பு! பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் வேறு யாரும் இல்லை தெரேசாவின் அம்மாதான். நானும் தெரசாவும் எப்படி நண்பர்களான�ோம�ோ, எங்கள் அம்மாக்களும் இப்போது நண்பர்கள்!! நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம். எங்களிடையே பல விஷயங்களை பகிர்ந்து க�ொள்வோம். அவள் மிகவும் என்னை புரிந்துக�ொண்டு நடந்து க�ொள்வாள். அவளுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அன்று, அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் புதிய இடத்திற்கு வந்ததால் அவர்கள் எங்களுக்கு நிறைய உதவினார்கள். எங்களிடம் கார் இல்லாததால், என் அம்மா என்னை பள்ளியில் அழைத்து செல்வதில் சிரமப்பட்டார் எனவே தெரேசாவின் பெற்றோர் எங்களுக்கு உதவ முன்வந்தனர். அவர்களுடைய வீடு எங்களிடமிருந்து வெகு த�ொலைவில் இருந்தது, ஆனாலும் அவர்கள் எங்களுக்கு உதவ விரும்பினர்.

எனக்கு தங்கை பிறந்த ப�ொழுது என்னை கவனித்துக் க�ொண்டார்கள். என் தாத்தா பாட்டி எங்களை சந்தித்தப�ோது, தெரேசாவின் குடும்பத்தை எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். சேன்ட்ரா ஸ்டீபன் அவர்கள் என் பாட்டி தயாரித்த இந்திய உணவுகளை மிகவும் விரும்பினர். நாங்கள் இப்போது ஒரு நான் தமிழ்ப்பள்ளியில் குடும்பமாக உணர்கிற�ோம்.தெரேசா எப்போதும் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். இந்தியாவிற்கு வர விரும்புவாள்.நான் இந்தியாவை எனக்கு ஓவியம் வரைவது பற்றியும் அங்கு பார்த்த இடங்களை பற்றியும் மற்றும் என் தங்கையுடன் அவளிடம் ச�ொல்வேன். ஒரு நாள் நான் நடனமாட மிகவும் பிடிக்கும். நிச்சயமாக அவளை இந்தியாவுக்கு அழைத்துச் என் த�ோழிக்கு நன்றி சென்று என் உறவினர்களிடம் காண்பிப்பேன். ச�ொல்லும் விதமாக இந்தக் அவர்கள் எப்போதும் எங்களுடன் இருக்க கட்டுரையை எழுதினேன். வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த புதிய நாட்டில் எங்களுக்கு யாரும் இல்லை என்று நாங்கள் நினைக்கவே இல்லை.அவர்களின் நட்பு வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்புகிறேன். நாங்கள் முடிந்த உதவியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு செய்ய வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து நான் கற்றுக் க�ொண்டேன். எப்போதும் நட்புடன் சேன்ட்ரா! 


முன்னுரை: த�ொண்டைமானுக்கும் நெடுமான் அஞ்சிக்கும் நடுவில் ப�ோர் நிறுத்துவதற்காக தூது ப�ோனார் ஒளவையார். ஒருவேளை அதே காரணத்திற்காக தூதினை இப்போது ஒளவையார் செய்தால் ரஷ்யா-உக்ரைன் ப�ோரை ஆரம்பித்த விளாடிமிர் புட்டினுக்கு என்ன ச�ொல்வார் என்னும் கற்பனையே இந்த கட்டுரை. தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் புடின் உரை: ஒவ்வொரு அரசனுக்கும் இருந்த அமைச்சரவையை ப�ோல ஒவ்வொரு அதிபருக்குமான அவை ‘தேசிய பாதுகாப்பு குழு’. ‘ஒரு நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் மற்றும் அயல் நாட்டுக் க�ொள்கைகள் ஆகியவை த�ொடர்பான வேலைகளை செய்வது இக்குழுவாகும். அந்த குழுவின் கூட்டத்தில் ரஷ்யாவின் அதிபர் புடின், உக்ரைனில் ரஷ்ய படை முன்னேறி வருவதாகவும், உக்ரைன் நாட்டின் சில பேச்சு வார்த்தைகளுக்கு உடன் படுவதாகவும் தெரிவித்தார். மனிதாபிமான உதவிகள் மற்றும் ப�ொதுமக்களை வெளியேற்ற உதவுதல் ப�ோன்றவை அதில் அடங்கும். ப�ோர் குறித்து உலக நாடுகளின் எண்ணம் பற்றி சிந்திக்கும் நேரம் என்று பேசினார். உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் வேறு வேறு இல்லை என்று கூறும் அதே நேரம், ப�ோர் முடிய சில காலம் ஆகும் என்று அறிவித்தார். உக்ரைனில் ப�ோர் விளைவுகள்: நாட்டிற்குள் குடிமக்கள் வாழும் இடங்கள் தகர்க்கப்பட்டன.ப�ொதுமக்களுக்கு உதவி செய்தவர்களை ரஷ்ய ராணுவம் பயமுறுத்தியது. புடின் தனது மாளிகையில் பாதுகாப்பாக இருந்தப�ோது, உக்ரைனில் மக்கள் தங்கள் அதிபருடன் ப�ோர்க்களத்தில் நின்று

ப�ோராடிக் க�ொண்டிருக்கின்றனர். எளிய மக்களும், வேற்று நாட்டவரும்,மாணவர்களும் குண்டு பட்டு இறந்தனர். ஒளவையாரின் தூது: இந்த நிலையில் ப�ோர் நிறுத்தம் வேண்டும் என்று உக்ரைனுக்காக ஒளவையார் விளாடிமிர் புடினை சந்திக்கிறார். “வாழ்த்துக்கள் புடின்! உங்கள் உரையை கேட்டு நான் மெய் சிலிர்த்து ப�ோனேன். பாதுகாப்புதான் முக்கியம். தவறில்லை. ஆனால் ப�ோருக்கு சம்பந்தம் இல்லாத மக்கள் மடியவும், குழந்தைகள் பாலுக்கு ஏங்கவும், வெளிநாட்டவர் வெளியேற்ற படுவதற்கு முன்பே குண்டு வீசி எல்லாவற்றையும் தகர்த்து விட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே பெரிய நாட்டிற்கு, அசச்சுறுத்தும் மிகச் சிறிய எதிரி கட்டாயம் இருக்கக்கூடாது இல்லையா! இந்த உலகம் இதற்கு முன்பே பல ப�ோர்களை சந்தித்து விட்டது. ப�ோரை விரும்பிய அச�ோகர் பின்னாளில் துறவி ஆக வில்லையா? அப்படி ஒருநாள் நீங்களும் தியாகியாக கூட ஆகி விடலாம். பிறகு என்ன? ப�ோர்! ப�ோர்! என்று முழங்கலாம். யானை எத்தனை எறும்புகளையும் மிதிக்கலாம். ஏனென்றால் அது வலிமையானது இல்லையா? நான் வந்தவுடன் நீ எனக்கு உணவு தந்தாய். நீயும் நலமாக சாப்பிடுகிறாய். இங்கிருந்து நான் உக்ரைனுக்கு தான் ப�ோகிறேன். மக்கள் பசியில் உண்ணாமல் இருப்பதையும் இன்னும் உன்னுடைய சாதனைகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டாமா? வருகிறேன்.” என்பதாய் அந்த சந்திப்பின் உரையாடல் இருந்தது என்று செய்தி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முடிவுரை: புடின் அவர்களின் மறும�ொழி இந்த கட்டுரையில் இல்லை. அது படிப்பவரின் கற்பனைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் மனிதனை மனிதன் அதிகாரத்தால் அவமதிப்பது குடியரசு தத்துவத்திற்கு எதிரானது. 

மிருதுளா கண்ணன் நான் ஃபார்மிங்டன் ஸ்டீம் அகாடமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன்,

ஒளவையார்

தமிழ்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு எழுதுவதற்கு பிடிக்கும். நான் படித்து முடித்த பிறகு வழக்கறிஞராக விரும்புகிறேன். பரதநாட்டியம், சங்கீதம், வயலின், கூடைப்பந்து, கைப்பந்து கற்றிருக்கிறேன். சிறு வணிகமாக கம்பிளி ப�ொம்மைகள், சாக்லேட் நான் கற்றுக்கொள்ள இன்னும்

விளாடிமிர் புடின்

இவர்கள்

நிறைய இருக்கிறது என்று

சந்தித்தால் நம்புகிறேன்

15 - ஜூலை 2023

பாம் விற்பனை செய்கிறேன்.


- ஜூலை 2023

16


நான் பள்ளி கல்வி கண்காணிப்பாளர் ஆனால்..! முன்னுரை: “அள்ளக் குறையும் பணம்; அளிக்க நிறையும் படிப்பு” என்பதற்கேற்ப கல்வியே நிறைசெல்வம். கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பாம்!! எண்ணமும் வண்ணமும்: எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க பள்ளியிலேயே சீருடை வழங்கி எல்லாரும் ‘நாம் அனைவரும் சமம்’ என்று எண்ணச் செய்வேன். நீல நிறம் ஆண்களுக்கானது, பிங்க் பெண்களுக்கானது மற்றும் மாற்றுப் பாலினத்தவர்க்காண கலவை நிறங்கள் என்பதை நீக்கி எல்லா நிறங்களும் எல்லோருக்குமானது என்ற க�ோட்பாட்டை அமைப்பேன். உற்சாகமும் ஊக்கப் பரிசுகளும்: மாணவர்களின் பிறந்தநாளை அவர்களே நெகிழும் படி இன்ப அதிர்ச்சிகள் தர ஏற்பாடுகள் செய்து அவர்கள் சாதிப்பதில் சாதிப்பதின் முக்கியத்துவத்தை உணரச்

செய்வேன். ஆசிரியர்கள் மாணவர்கள் நல்லுறவிற்கு வார இறுதி சந்திப்புகளை ஏற்பாடு செய்து, அவர்களை பழகச் செய்வேன். த�ொடக்கநிலை கல்வியில் இருந்தே ஒழுக்கம், பண்பு, கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு புதுமையாகவும் தனித்துவமாகவும் எளிய முறையில் பாடங்கள் மற்றும் பிற கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாதம் த�ோறும் ஊக்கப் பரிசுகள் தந்து உற்சாகப்படுத்துவேன். புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றை செயல்படுத்துவேன். உடலும் மனமும் உறுதி: எந்த பாடத்திலாவது மாணவர்கள் பின் தங்கினால் அவர்களின் அன்றைய விளையாட்டு வகுப்பை நீக்காமலும், உணவு இடைவேளையின் நேரத்தை குறைக்காமலும், அன்றைய பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடுவேன். அதற்காக சிறப்பு ஆசிரியர்கள் பலரை வேலைக்கு சேர்ப்பேன். மன வருத்தத்தோடு பள்ளிக்கு வருபவர்க்கு மனநல ஆல�ோசகரின் வழிகாட்டுதலை அன்றே அளிக்கச் செய்து, அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராதவாறு பார்த்துக் க�ொள்வேன். இதனால் அவர்களின் வகுப்பு கவனம் சிதறாது. யாரும் யாரையும் உருவக்கேலி செய்யாமலும், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமலும் இருப்பதற்குப் பாடத்திட்டம் உருவாக்கி நல்ல எண்ணத்தை நீதி ப�ோதனை கற்றல் வகுப்புகள�ோடு உருவாக்குவேன். அவற்றிலும் குழுச் செயல்பாடுகளை தயாரித்து நல்ல மாற்றத்திற்கு வித்திடுவேன்.

அன்றாட ஆர�ோக்கியம்: பள்ளியில் தினமும் தண்ணீர் குடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நினைவு மணி அடிக்க ஆணை இடுவேன். சுழற்சி முறையில் வகுப்புகளில் பழங்கள் உண்பதற்கும், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும் இடைவேளை நேரமும் கட்டாயமாக்கப்பட்டு அதை கண்காணிப்பேன். சுத்தம் சுகாதாரமான சூழலில் அவசியத்தை வகுப்பில் வலியுறுத்த செய்வேன். அதற்கும் முன்னெடுப்பை உருவாக்கி, முன்னேற்றம் காண வழி செய்வேன். அமைதிக்கான அவசிய நடவடிக்கைகள்: சஹானா ஜானகிராமன் துப்பாக்கி, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் நான் பள்ளியிலும், ப�ோதை மருந்துகள் பயன்படுத்துவதை தமிழ்ப் பள்ளியிலும் எட்டாம் நிறுத்த ஆணை பிறப்பிக்க, அரசுடன் வகுப்பு படிக்கிறேன் எனக்கு இணைந்து செயல்படுவேன். பிடித்த ப�ொழுதுப�ோக்கு அவற்றை ச�ோதனையிடும் கருவியைப் நடனமாடுதல் புத்தகம் பள்ளிவாயிலில் வைத்து, தினமும் வாசித்து விமர்சனம் செய்தல் பரிச�ோதனை செய்து, வன்முறை இசை கேட்பது மற்றும் இல்லாத வழியில் வாழ்வதற்கு, வாழ்க்கை வரைதல் கல்வியை தருவேன்.

17 - ஜூலை 2023

முடிவுரை: மதிப்பெண்ணிற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத பள்ளிக்கல்வி கண்காணிப்பாளராய் விளங்குவேன். இரக்கமும், கருணையும், ஒழுக்கமும், க�ொடைத்தன்மையும், மனதுள் மனிதம் நிரம்பிய இளம் தலைமுறையை உருவாக்குவேன். அவர்களது வாழ்வில் எது வந்தாலும் தைரியத்துடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைய செய்வேன். பல்கலையிலும் மிளிரச் செய்து அவர்களை பெருமையுடன் உலக அரங்கில் அறிமுகப்படுத்தி சாதனையாளர் ஆக்குவேன். 


Detroit Engineered Products

Engineering Innovation & Excellence

PRODUCTS

SOFTWARE

SERVICES

For queries contact us at email@depusa.com

- ஜூலை 2023

18

Visit our website: www.depusa.com HQ: Detroit Engineered Products, 850 East Long Lake Road, Troy, Michigan – 48085, USA. I Ph: +1 (248) 269 7130


முன்னுரை: நான் ஐந்து வயதில் அமெரிக்கா வந்தேன். அப்போது நான் ஒன்றாம் வகுப்பு படித்து க�ொண்டு இருந்தேன். என் தந்தையின் வேலை மாற்றத்தால் நாங்கள் அமெரிக்கா வந்தோம். எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருந்தனர், ஆனால் எனக்கு இங்கே யாரையும் தெரியாது. ப�ொருளுரை: புதிய சூழலுக்கு பழகுவது மிகவும் கடினமாக இருந்தது. புதிய ம�ொழி, புதிய கலாச்சாரம், புதிய பள்ளி மற்றும் புதிய ஆசிரியர். நான் ‘வாட்டில்ஸ் த�ொடக்கப் பள்ளியில்’ ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போதுதான் எனது முதல் அமெரிக்கா நண்பனை சந்தித்தேன். அவன் பெயர் நீல்.

அமெரிக்க

நண்பன்

பிரணய் வெங்கட் ஞானதேசிகன்

நான் பேக்கர் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனக்குப் பிடித்த ப�ொழுதுப�ோக்குகள் த�ொலைக்காட்சி பார்ப்பது, வீடிய�ோ கேம் விளையாடுவது, டென்னிஸ் விளையாடுவது.

“உடுக்கை இழந்தவன் கைப�ோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” அவன் பள்ளியில் எங்கு சென்றாலும், நானும் அவன் உடனே செல்வேன். பள்ளி கழிவறைகள், நூலகம், சிற்றுண்டி சாலை மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அவன் எனக்கு காட்டினான். எங்கள் விருப்பு வெறுப்புகள் எல்லாமே ஒன்றாகவே இருந்தன. பள்ளி இடைவெளியில் ஒன்றாக கூடைப்பந்து விளையாடுவ�ோம். அவன் என் மீது காட்டிய அக்கறை எனக்கு பிடித்திருந்தது. அந்த நேரத்தில் அவன் என் நண்பன் என்று நான் நினைத்தேன். நாங்கள் ஒன்றாக பிறந்தநாள் விழாக்களுக்கு, திரை அரங்கத்திற்கு, திருவிழாவிற்கு சென்றோம். நான் தவறு செய்தால் அவன் எனக்கு அறிவுரை ச�ொல்வான். அவனுக்கு நானும் ச�ொல்வேன். இரண்டு வருடத்திற்கு முன் அவன் தன் குடும்ப விழாவிற்காக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து சென்றான். எனக்கு அவனைத் தவிர மற்ற நண்பர்கள் இருந்தாலும், நான் தனியாக இருப்பது ப�ோல் இருந்தது. அவனும் என்னைப் ப�ோலவே உணர்ந்தான் என்பதை அவன் திரும்பியதும் அறிந்தேன். அந்த தருணத்தில் இவன் என்னுடைய மிக சிறந்த நண்பன் என்று த�ோன்றியது. முடிவுரை: எங்கள் நட்பு கடந்த ஏழு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பிசிராந்தையார் மற்றும் க�ோப்பெருஞ்சோழன் ப�ோல எங்கள் நட்பை த�ொடர விரும்புகிறேன். பெற்றோருடன் பகிர்ந்து க�ொள்ள முடியாத விஷயங்களை, நம் நண்பர்களுடன் பகிர்ந்து க�ொள்ளலாம். நம் பெற்றோரைய�ோ, உறவினர்களைய�ோ நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நண்பனை தேர்வு செய்யலாம். அதனால் உங்கள் நண்பனை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள். 

19 - ஜூலை 2023

எனது முதல்

வகுப்பறையில் தற்செயலாக அவன் மீது ம�ோதி விட்டேன். பிறகு எங்களை அறிமுகபடுத்தி க�ொண்டோம். நான் அமெரிக்காவிற்கு புதியவன் என்பதால் அவன் எனக்கு நிறைய உதவி செய்தான். ஆரம்பத்தில் மற்ற நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலத்தை என்னால் புரிந்து க�ொள்ள முடியவில்லை. அதனால் அவன் எனக்கு புரியும் வகையில் மெதுவாக ஆங்கிலம் பேசி எனக்கு உதவினான். அந்த நேரத்தில் எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது.


சிறப்பு விருந்தினர் கட்டுரை

வழக்கறிஞர் அஜிதா

லகம் முழுவதும் உள்ள பெண்கள் அவர்களுடைய வர்க்கம், வாழிடம் ஆகியவை காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். இப்படிக் கூறுவதன் மூலம் ஆண்களுக்கு பிரச்சினையே இல்லையா என்ற ஐயமும், ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை என்ற பார்வை இருப்பதாகக் கருதுவதும் பிழையானது. உலகம் முழுவதும் உள்ள ப�ொருளாதார ஏற்றத்தாழ்வு, உழைப்பு சுரண்டல், அடிமைத்தனம், அசமத்துவம் மற்றும் பாகுபாடுகள் ஆகியவை நீக்கமற நிறைந்துள்ளதால் பல்வேறு அநீதிகளுக்கு ஆளாகின்றனர். பெண்ணியம் என்பது, பெண்களின் பார்வையில் உலகத்தை பார்ப்பது என எளிமையாக கூறலாம். அதென்ன பெண்களின்

சென்னை

அந்த கற்பனையை விடுத்து மருத்துவராக பணிபுரியும் அம்மா, வேலைக்கு ப�ோகும் அம்மா, பட்டாளத்தில் நாட்டை காக்கும் பணி செய்யும் அம்மா, தன் பணி சார்ந்த விஷயங்களை மட்டும் பகிர்ந்து க�ொள்ளும் ஒரு வழக்கறிஞர்(அ) கணினி வல்லுநர் அம்மா எனக் கருதுவ�ோம். உணவு தயாரிக்க நேரமல்லாதவர். எனவே பிள்ளைகள் பாட்டியிடம�ோ அல்லது சமையலரிடம�ோ உணவு ப�ொருட்டான தேவைகளை பெற்று வாழ்ந்த பிள்ளைகள் எங்களுக்கு அவ்வளவாக தாய் பாசம் கிடைக்கவில்லை என்று ச�ொல்வார்கள். இதே மேற்கண்ட உதாரணத்தில் தாய்க்கு பதில்

பார்வை? ஆம் நண்பர்களே, நம் ச�ொந்த

தந்தையை வைத்துப் பார்ப்போம். வேலைக்குப்

அனுபவத்தின் வாயிலாக இதை புரிந்து க�ொள்வதே

ப�ோகும் அப்பா, பட்டாளத்தில் நாட்டைக்

எளிமையானதாக அமையும் ஒவ்வொருவரும்

காக்க பணி செய்யும் அப்பா, தன் பணி சார்ந்த

அம்மா என்று கற்பனை செய்து க�ொள்ளுங்கள்;

விஷயங்களை மட்டுமே பகிர்ந்து க�ொள்ளும்

உங்களுக்கு என்ன த�ோன்றுகிறது? அன்பு,

அப்பா, உணவு தயாரிக்க நேரமில்லாதவர்.

பாசம் என்கிற உணர்வு. சரியா? குறிப்பாக, நாம்

பசிக்கும்போது தாயிடம�ோ, பாட்டியிடம�ோ

பசியாற வேண்டும் என்று நமக்கு ருசியான உணவு

சமையலரிடம�ோ கேட்டு பெற்றுக் க�ொண்டு

தயாரித்துக் க�ொடுத்தது தான் முதலில் நினைவுக்கு

வாழ்ந்த பிள்ளைகள் அப்பாவைப் பற்றி என்ன

வருகிறது.

ச�ொல்வார்கள் எனில், எங்கள் அப்பா எப்போதும் எங்களுக்காக உழைத்துக் க�ொண்டிருந்தார்.

- ஜூலை 2023

20


மிகுந்தவர் என்று ச�ொல்வார்கள். எனவே ஒரே வீட்டில் அதே பிள்ளைகளுக்கு தாயை பற்றியும், தந்தையைப் பற்றியும், ஒரே மாதிரியான வேலை செய்யும் பெற்றோராக இருப்பினும் முற்றிலும் எதிரெதிரான கருத்து உருவாக்கி வைத்திருக்கும் நிலையை தான் பெண்ணியம் அசமத்துவம் என்றும், கட்டமைக்கப்பட்ட பாகுபாடு என்றும் கூறுகிறது. பெண் என்பதாலேயே அவரைப் பற்றி எதிர்மறையான கருத்து உருவாக்கம் சமூகத்தில் தன் ச�ொந்த பிள்ளைக்கே இருப்பதுதான் பெண்ணுக்கு எதிரான சமத்துவமற்ற பாகுபாடான மதிப்பீடுகள் த�ொடர்ந்து அநீதியை இழைப்பதற்கான அடிப்படையாகிறது. அதை மாற்றுவது குறித்தும் சமத்துவம், சமத்துவமான செய்வதற்கான கருத்தியலே பெண்ணியம் ஆகும்.

பேசி, பகிர்ந்து சிரித்து மகிழ்வதே. அது பெண்ணின் பார்வையில் அந்த விழா நாளில் கூடுதலாக ஓரிரு மணி நேரங்கள் உழைத்து உணவு தயார் செய்து, தானும் அதில் கலந்துக் க�ொண்டு மகிழ்வது. எனவே ஒரு விழா அல்லது கூடுகை ஆகியவற்றில் பெண்ணின் உழைப்பு மட்டுமே மறைப�ொருளாக வைக்கப்பட்டு, அவள் உழைப்பால் பெறக்கூடிய மகிழ்ச்சி, ஆரவாரம், அன்பு, பகிர்தல் ஆகியவற்றில் மட்டும் ப�ொதுவானதாகவும். ஆண்கள் அதில் பங்கேற்பதும் இயல்பாக நிகழும். இந்த சமத்துவம் மற்ற “இயல்பை”

உலகெங்கும் உழைப்பில்

பெண் உழைப்பாளர்கள் தான். அதாவது ப�ொருள் ஈட்டாத குடும்ப இந்த உழைப்பாளர்களை ஐ.நா கணக்கெடுக்கிறது. அதாவது பெரும்பாலான பெண்கள்

பராமரிப்பு பணிகளை செய்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. 65% உழைப்பாளிகளாக உள்ள பெண்கள், உலகத்தில் உள்ள தனியார் ச�ொத்துக்களில் 5% கூட ச�ொந்தமாக வைத்திருக்கவில்லை என்னும் எதார்த்தம், எவ்வாறு ஒட்டும�ொத்த பெண்களும் சான்று. பெண்ணியம் என்று பல தளங்களில் பெண்கள் மீதான பாகுபாடுகளை கண்டறிந்து சமத்துவத்திற்கான சக மதிப்புக்கான முழக்கங்களும் முன்வைக்கப்படுகின்றன. நாம் புரிந்து க�ொள்ள வேண்டியது என்னவென்றால், இதில் பெண்கள் மட்டுமே பெண்ணியவாதிகள் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும், வரலாறு முழுவதும் பெண்ணுரிமைக்காக குரல் க�ொடுத்தவர்களும் ப�ோராடியர்களும் பலர். நம் நாட்டில், தமிழ் சமூகத்திலும் நாம் அறிந்த தந்தை பெரியார், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜ�ோதிபாய் பூலே மற்றும் ராஜாராம் ம�ோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ப�ோன்றவர்களே பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகளை எதிர்த்து, சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் ப�ோராடியவர்கள். அவர்கள்தான் நாம் அறிந்த முதல் பெண்ணியவாதிகள்! இப்போது ச�ொல்லுங்கள் சமத்துவத்தை பேணும் ஒவ்வொரு நாகரிக மனிதனும் மனுஷியும் கூட

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் பெண்ணியவாதி தானே! நீங்கள் பெண்கள் குறித்த இளைப்பில்லை உங்களுடைய மதிப்பீடுகளை பெண்ணியக் காண்

மூன்றில் இரண்டு பங்கு

உழைப்பையும் சேர்ந்துதான்

செய்கிற (unpaid care work) ஊதியமற்ற குடும்ப

21

கண்ணாடி அணிந்து பாருங்கள்; அதில் அனைத்து

பாலினத்திற்குமான சமத்துவ அறம் புலப்படுகிறதா? என்று பாருங்கள். நீங்கள் அறம் சார்ந்து உங்களை ஒரு பெண்ணியவாதி என எப்போது நெஞ்சுரத்துடன் ச�ொல்லப்போகிறீர்கள்? வாருங்கள் விரைந்து, சமத்துவ உலகை படைப்போம். நம் வருங்கால சந்ததிக்கு நீதியான உலகை விட்டுச் செல்வோம்.

- ஜூலை 2023

ஒரு விழா என்றால் மகிழ்ச்சி, களிப்பு,

ஈடுபடக்கூடிய மக்களின்

நான் வளரும் ப�ோது ஒரு உருவம், நான் கூட்டை விட்டு வெளியே வரும் ப�ோது ஒரு உருவம், நான் வளர்ந்த பிறகு ஒரு உருவம், நான் யார்? - கணேஷ்பிரியா சிவசெல்வம்

தற்போது கலாச்சார பெண்ணியம், சுற்றுச்சூழல்

ஆனந்தம். பலரும் ஒன்று கூடி, உண்டு,

பெண்ணியம்.

நான் பிறக்கும் ப�ோது ஒரு உருவம்,

பாகுபடுத்தப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு துல்லியமான

அங்கீகாரம் ஆகியவை பெற

கேள்விக்குள்ளாக்குவது

விடுகதை

பதில்: வண்ணத்துப்பூச்சி

வெளியில் ச�ொல்லாவிட்டாலும் பாசம்


நேர்முகம் செய்தவர்கள்:

வாங்க, பேசலாம்..!

வணக்கம் கற்பகம்! சமூக பாதுகாப்பு (அ) ச�ோஷியல் செக்யூரிட்டி என்றால் என்ன? வணக்கம்..! சமூக பாதுகாப்பு என்பது ஓய்வூதியம், ந�ோய், இயலாமை, இறப்பு அல்லது வேலையின்மை ப�ோன்றவற்றின் ப�ோது தனி நபர்களுக்கு, வருமானம் மற்றும் சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு ப�ொதுத் திட்டமாகும். 1937 -ல் அமெரிக்க அரசாங்கம் அனைத்து குடிமக்களுக்கும் சமூக பாதுகாப்பு அடையாள அட்டைகள் SSN வழங்கி, தனித்துவமான unique எண் வழங்கி, இதன் பயன்பாட்டை அமூல்படுத்தியது. சரி இந்த திட்டங்களால் நமக்கு என்ன பயன்? 11.சமூகப் பாதுகாப்பு என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாட்சித் திட்டமாகும், இது தகுதிவாய்ந்த நபர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு வருமானத்தை வழங்குகிறது. 22.இதன் முழுப்பயனைப் பெற குறைந்தபட்சம் 62 வயதாக இருக்க வேண்டும் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பலன் களுக்கு தகுதி பெற 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பணம் செலுத்தியிருக்க வேண்டும். 33.70 வயது வரை சமூகப் பாதுகாப்பை சேகரிக்க காத்திருக்கும் பயனாளர்கள் அதிக மாதாந்திர பலன்களைப் பெறுவார்கள்.

- ஜூலை 2023

22

மீனா மற்றும் ராதிகா

44.அந்த பலன்களின் அளவு, உங்களின் அதிக வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் Average Indexed Monthly Earning (AIME) அடிப்படை யில் கணக்கிடப்படுகிறது, எனவே இந்தத் த�ொகை நபருக்கு நபர் மாறுபடும். அட அப்படியா.. விசா வைத்திருப்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் என இந்த பலன்கள் வேறுபடுமா? அமெரிக்காவில் SSN வழியாக w2 மற்றும் 1099 பதிவுசெய்யும் நபர்கள் 40 கிரெடிட் அதாவது சுமார் 10 ஆண்டுகள் இங்கு வேலை செய்தவர்கள், அனைவரும் ச�ோஷியல் செக்யூரிட்டி பலன்கள் பெற தகுதியுடையவர்கள். இதில் குடியுரிமை மற்றும் விசாதாரர்கள் என்று பாகுபாடு கிடையாது. அடுத்த கேள்விக்கு வரேன். இங்கு இருக்கும் பெரும்பாலான�ோர் உள்ள குழப்பம், ரிடையர்மெண்ட் இந்தியாவுக்கு ப�ோயிடலாமா இல்லை அமெரிக்காவிலேயே இருக்கலாமா? ச�ோஷியல் செக்யூரிட்டி வருமானம், நமக்கு ஓய்வூதிய செலவு களில் கிட்டத்தட்ட 40% செலவுக்கு மட்டும் தான் சரியாக இருக் கும். மீதம் 60% வரையான செலவுகளுக்கு நமது மற்ற முத லீடுகள் தான் உதவியாக இருக்கும். எனவே உங்கள் மூதலீடு கள் எங்கு உள்ளத�ோ அங்கே நீங்கள் ரிடையர்மெண்ட் வடி வமைச்சா சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. உங்கள் முதலீடுகள் இந்தியாவில�ோ அமெரிக்காவில�ோ வைத்திருக்க வேண்டிய முடிவுகளை நீங்கள் தான் தேர்வு செய்யனும்.

காப்பீட் டு முகவருடன்... ஒரு நிகர்நிலை சந்திப்பு


நீங்க வேலைக்கு சேர்ந்த முதல் மாத வருமானத்திலிருந்தே ஆரம்பிக்கிறது தான் புத்திசாலித்தனம். உங்க வருட வரு மானத்தில் 15% ஓய்வூதிய திட்டங்களில் சேமிக்கிறது மிகவும் நல்லது. இந்த ரிடையர்மெண்ட் சேமிப்பில் நம்மவர்கள் செய்யும் சில தவறுகள் என்னனு ச�ொல்லுங்களேன். பலர் செய்யும் ப�ொதுவான விஷயம், முதலீடுகளை பிரித்து கையாளாமை (investment diversification). இதனால் பணம் ஒரே முதலீட்டில் முடங்கி விடுகிறது. மேலும் ஆண்டு த�ோறும் மருத்துவ பரிச�ோதனை செய்து க�ொள்வது ப�ோல், அவர்கள் தம் நிதிநிலை குறித்த ஆய்வையும் (Financial Wellness Check) மேற்கொள்ளாமல் விடுவது. இதை தவிர்க்க நீங்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ்? நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்கள் 401K பங்களிப்பு களுக்கு சரிநிகர் பங்களிப்புகள் தர வில்லை என்றால், அதை தவிர்த்து ROTH IRA அல்லது ஸ்டாக் மற்றும் குறியீட்டுப் பத்திரங்களில் (Index bonds) முதலீடு செய்யலாம். ஆயுள் காப்பீடுகள் எடுக்கும் ப�ோது இறப்பு, பிற கடன்கள் மற்றும் குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றை உள்அடக்கத்தோடு கணக்கிட்டு எடுக்கலாம். நாம் பணிபுரியும் நிறுவனங்களே ஆயுள் காப்பீடு அளிக்கிறதே பின் எதற்காக வேறு ஒன்று எடுக்க வேண்டும்? நான் பெரும்பாலும் பணி புரியும் நிறுவனங்களில் Term life Insurance மட்டுமே வழங்கப்படுகிறது. அதாது அது குறிப்பிட்ட 20 ஆண்டுகளுக்கு மட்டுமே அது ப�ொருந்தும், அதுவே நீங்கள் எடுக்கும் Permanent life insurance என்றுமே இருக்கும். நான் டெர்ம் இன்ஷீரன்ஸ் விட பெர்மனென்ட் இன்ஷீரன்ஸே பரிந்துரைக்கிறேன். அதுவும் குறிப்பாக cash value life insurance policy பரிந்துரைக்கிறேன். இதில் கூடுதல் பயன்களாக குடும்பத்தேவைகளுக்காக பண உதவி பெற முடியும் மற்றும் காப்பீட்டுக்கு செலுத்தும் கட்டணத் த�ொகை, பணவீக்கம் ஏற்பட்டாலும் மாறாது.

ரிடையர்மெண்ட், இன்ஷூரன்ஸ் என நிறைய கேட்டுட்டோம், அடுத்தது உயில் எழுதுவது பற்றியும் ஒரு கேள்வி. அமெரிக்காவில் ச�ொத்து வைத்திருப்போர் வயசுவித்தியாசம் இல்லாமல் உயில் வச்சிருப்பது அவசியமாமே? சரியா ச�ொன்னீங்க. நம்ம ஊர் மாதிரி தாத்தா ச�ொத்து பேரன்பேத்திகளுக்கு, அப்பாவுக்கு பின் பிள்ளைகளுக்குனு ச�ொத்து களை மரபுரிமையாக எடுத்துக்க முடியாது. அதனால் உயில் எழுதி வைத்துத்திருந்தால் தான் உரிமை க�ோர முடியும். உயில் இல்லா ச�ொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படும். பின் பாத்தியப்பட்டவர்கள் Probate court சென்று, வழக்கு த�ொடர்ந்து தான் ச�ொத்துகளை பெற முடியும். அட என்ன இப்படி ச�ொல்லிட்டீங்க. பிள்ளைகளுக்கு நேர்முகமான உரிமை இல்லையா? பிள்ளைகள்னு நீங்க ச�ொன்னதும் தான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் ச�ொல்லனும். உங்க பிள்ளைகள் 18 வயதுக்கு உள்பட்டவர்கள் என்றால், நீங்க கண்டிப்பா “ப�ொறுப்பாளர்" (guarantor) நியமித்து அதை பதிவு செய்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு சூழலில் தாய், தந்தை இருவருக்கும் இறப்பு நிகழ்ந்தால், அந்த ப�ொறுப்பாளரே குழந்தைகளின் ப�ொறுப்பு என்று நிர்நினைத்து வைப்பது அவசியம். ப�ொறுப்பாளர் இல்லாத குழந்தைகளை அரசு தத்தெடுத்து சென்றுவிடும். இந்தியாவில் இருக்கும் தாத்தா, பாட்டி என பிற ச�ொந்தங்கள�ோ கூட பிள்ளைகளின் உரிமை க�ோர முடியாது.எனவே உங்கள் குழந்தைகளுக்கு ப�ொறுப்பாளர் பதிவு செய்வது மிகவும் அவசியம். அட இவ்வளவு விஷயங்களா!! ஆமாம் அது மட்டுமல்ல, நீங்கள் எழுதி வைத்திருக்கும் உயில், ப�ொறுப்பாளர் பற்றிய தகவல்களை உங்கள் பிள்ளைகளிடமும் பகிர்ந்து க�ொள்ளுங்கள். உங்கள் நெருங்கிய நண்பரிடம் உங்கள் உயிலின் நகல்களை க�ொடுத்து வையுங்கள். மேலும் உங்கள் சேமிப்பு, வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள், முதலீடுகள் பற்றிய ஆவணங்கள் முதலானவற்றை உங்கள் மனைவி/கனவரிடம் கட்டாயம் பகிர்ந்து க�ொள்ளுங்கள். மிகத்தெளிவான விளக்கங்கள், மிக்க நன்றி கற்பகம். 

23 - ஜூலை 2023

சரியா ச�ொன்னீங்க. த�ோராயமா எந்த வயசில இருந்து இந்த ஓய்வூதியத்திற்காக சேமிக்க ஆரம்பிக்கலாம்?


சிறுகதை

லக்ஷ்மன் தசரதன்

ஃபுள�ோரிடா

கனவு

வரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. ச�ொல்லப்பட்ட தகவல்களை வைத்துப்பார்த்தால், இவரைப்போல் இவர் மட்டும் தான் இருக்க வாய்ப்பு உண்டு. வேறு எவரும் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றை பல வருடங்களாக செய்து க�ொண்டிருப்பதாக அலுவலகத்தில் எல்லோரும் ச�ொல்லிக்கொண்டார்கள். யாரிடமும் முகம் க�ொடுத்து பேசாத நான், அவரிடம் பேசப்போகும் ஆசை வழிந்து க�ொண்டிருந்தது. அலுவலக நண்பர்கள் வேண்டாமே

என்றுதான் அறிவுறுத்தினார்கள்.

- ஜூலை 2023

24 வேண்டாம் என்று ச�ொல்லும் அளவுக்கு அவர் என்னை

அவமானப்படுத்திவிடப்போவதும் இல்லை, நேரத்தை வீணாக்கி விடப்போவதுமில்லை. சென்று தான் பார்க்கிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, அவர் விலாசத்தை குறித்துக்கொண்டு அன்று இரவு என்

அறைக்குப் ப�ோய் தூங்கினேன். அன்றிரவு தூக்கத்தில், கனவெல்லாம் அலறலாகவே இருந்தது. ஒரே கூச்சல். மண்டை உடைந்து ப�ோகும் அளவுக்கு குமுறல். ஒரு ந�ொடி துளி கூட அமைதி இல்லை. அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். மண்டைக்குள் இருந்த கனவு கூச்சல் எல்லாம் வெளியில் இருந்த கூச்சலுக்கு முன் பரந்து விரிந்திருந்தது. மண்டையை நாலு முறை உலுக்கியத்தில், சில கூச்சல்கள் கீழே சிதறியதை காண முடிந்தது. அதில் ஒன்று அலுவலகத்தில் எப்போதும் சண்டை ப�ோட்டுக் க�ொண்டிருக்கும் மேலாளர். இன்னொன்று, சின்ன அத்தையின் புலம்பல் கூடிய கூச்சல். இவை இரண்டும் தான் இறங்க வேண்டிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது. மற்றதெல்லாம் அடர்த்தி நிரம்பி மூளைக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது ப�ோலும். அடுத்த நாள் இரவை எண்ணி இப்போதே தலை வலிக்க ஆரம்பித்தது. சரி, அவரை பார்த்துவிட்டு பிறகு இதையெல்லாம் பைசல் பண்ணி க�ொள்ளலாம் என விரைந்து சென்று, இரண்டு நிமிட குளியலை ப�ோட்டுவிட்டு, இருப்பதிலேயே சாந்தமாக இருந்த ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, அதற்கு சாந்தமாக இருந்த பேண்ட்டையும் ப�ோட்டுக்


வீதியில் குப்பை அள்ளும் அண்ணனை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தார். அந்த அண்ணன் திரும்ப வசைகளை அலங்கார படுத்தி,

அது சாத்தியமா? ஆமா உங்க மனைவி கிட்டயும் அப்படித்தானா?

வசைகளுக்கெல்லாம் ராஜாவான உறவின் முறை

ஆமா

வசவையும், உறுப்பு முறை வசவையும் அள்ளி

முதல்ல இருந்தேவா?

தெளித்து க�ொண்டிருந்தார். கணக்கு பார்த்தால், இவர்களின் கனவு கூச்சல் இன்னைக்கு இரவு என்னை விட அதிகமாக இருக்கும் ப�ோல இருந்தது. 18-B பிடித்து, சேர வேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்தேன்.

ஆமா அவரின் கடைசி நான்கு வார்த்தைகள், ஆமா என்பதை தாண்டி ஒரு மாத்திரை கூட அதிகமில்லை. அதற்கு பிறகு மூச்சு கூட விட மாட்டேன் என்கிறார். மிகச் சீரான, மெதுவான, ஆழ்ந்த முகம். அதற்கேற்றார் ப�ோல், சுவாசமும்

அவருக்கு த�ொலைபேசினேன்.

கூட. அந்த அறையில் நீக்கமற சூரிய வெளிச்சம்

சார், உங்க அலுவலகத்துல குமாஸ்தாவா

இருந்தது. அவ்வளவு ஜன்னல்கள். வீட்டுக்கு

சேர்ந்திருக்கேன். உங்களை பார்த்து சில விஷயங்களை கத்துக்கிட்டு ப�ோகலாம்னு வந்திருக்கேன். இங்க காலேஜ் பஸ்ஸ்டாப்பிலே இருக்கேன். உங்க வீடு எங்க இருக்குன்னு ச�ொல்றீங்களா? ச�ொல்றேன். பக்கமா, தூரமா? தூரம்.

சிமெண்ட் வேலை மிகக் குறைவு. நீங்க நேர்முகத் தேர்வு எடுக்கும் ப�ோது எப்படி சமாளிச்சீங்க? எழுதிட்டேன். எழுதியே, தேர்வாகிட்டீங்களா? ஆமா என்னை ச�ொல்ல வேண்டும். அவரை ஆமா ச�ொல்ல வைக்காத அளவுக்கு கேள்வி கேட்க

ப�ோனுக்கு மெசேஜ் அனுப்பறீங்களா?

எனக்கு தெரியவில்லை. இன்னும் பயிற்சி

அனுப்பறேன்.

வேண்டும்.

விரைந்து சென்றேன். அந்த வீடு நான்கு ராட்சச வீடுகளுக்கு மத்தியில் எலியின் ப�ோந்து

எதுக்கு இந்த ஒரு வார்த்தை பழக்கம்? இந்த கேள்விக்கு மாட்டிக்

ப�ோல இருந்தது. இந்த வீட்டினர் மூச்சு விட்டால்

க�ொண்டு விட்டார் என

அந்த ராட்சச வீட்டினரின் முதுகில் தான் ப�ோய்

நினைத்தேன். பதில் வந்தது,

ஓய்வெடுக்கும். அதற்குப்பின் தான் வெளியில் கலக்கும். அவ்வளவு நெருக்கம். சார், சார், நான்தான் வந்திருக்கேன். வாங்க. உட்கார வசதி இருந்தது. பள்ளிக்கூட பெஞ்சுகள் ப�ோல. வீட்டுக்கு வந்தவர்களை அடக்கி வைத்து பாடம் எடுப்பார் ப�ோல. காபி? வேண்டாம் சார். வரும்போதே குடிச்சிட்டு

பழக்கம்.

மனிதர்களில் தான் எத்தனை வகை. சரியா ச�ொன்னீங்க லக்ஷ்மண்

எங்க இருந்து? அப்பா, அம்மா அவங்களும் இப்படித்தான் பேசுவாங்களா? இல்ல. பின்ன எப்படி? பேசவில்லை.

தான் வந்தேன். உங்க கிட்ட சில கேள்விகள்

ஓ.. மன்னிக்கணும். அவங்க ஊமையா?

கேட்கலாம்னு ய�ோசிக்கறேன். கேக்கலாமா?

ஆமா.

கேளுங்க.

அப்போ நீங்க நிறைய பேசி இருக்கணுமே?

நீங்க ஒரு வார்த்தை மட்டும் தான்

தேவையில்லை.

பேசுவீங்கன்னு ச�ொன்னாங்க. ஆமா

நீங்க இப்படி பேசி, மத்தவங்களுக்கு க�ோபம் வருமே சார், எப்படி சமாளிக்கிறீங்க.

25 - ஜூலை 2023

க�ொண்டு கீழே இறங்கினேன். வீட்டு முதலாளி



வராது.

குறையாத க�ோபம். இவரின் குரங்கு வார்த்தை,

உங்க கிட்ட பேசின க�ொஞ்ச நேரத்துலயே

அமைதிக்குள் இருக்கும் ச�ொல்லப்படாத கெட்ட

எனக்கு க�ோபம் வருதே சார்.

வந்து எனக்குள் க�ொட்டிவிட்ட உணர்வு வந்தது.

வரட்டும். அப்புறம் திட்டிட்டேன்னா என்ன பண்ணுவீங்க? திட்டுவேன்.

சரி சார், எல்லாத்தையும் விட்டுடலாம். சரி. எப்பவ�ோ ஒரு முறைய�ோ, இரண்டு முறைய�ோ

திட்டுவீங்களா? எப்படி, அதுவும் ஒரு

உங்களுக்கு உச்சகட்ட உணர்ச்சிகள் வந்து

வார்த்தையிலா?

பேசிய ஆகணும்னு இருந்திருக்கும். நாமெல்லாம்

ஆமா.

மனுஷ ஜென்மமாச்சே, அதெல்லாம் இல்லாம இருந்திருக்க முடியாது. அது காதலாகவும்

திட்டிக்காட்டுங்க..

இருந்திருக்கலாம், இல்ல உங்க பிள்ளைங்களை

குரங்கு.

முதல் முறை குழந்தையாக பார்த்த ப�ொழுதா

அவ்வளவு தானா?

இருந்திருக்கலாம். அப்போ எப்படி?

ஆமா. அவரின் குரங்கு என்ற வார்த்தை பிரய�ோகம், அந்த சூழ்நிலைக்கு, அவரின் முன் எனக்கு மிகப்பெரிய பாரமாக இருந்தது. ஒரு முறை எனக்கும் நண்பனுக்கும் வார்த்தை தகராறு முற்றிப்போய், நான் பேசவே மாட்டேன் என நினைத்திருந்த கெட்ட வார்த்தை எல்லாம் அருவியாய் க�ொட்டியது. இரண்டு வாரங்களுக்கு

காதல

கண்ணீர். ஏன் சார், இப்படி? சிரித்தார். நான் கேட்க வேண்டியதை கேட்டு விட்டேன் என நினைத்த நேரத்தில் ஒரு காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தார். வேகமென்றால் அவ்வளவு வேகம். வார்த்தைகள் ப�ொழிந்து க�ொண்டு இருந்தன. கையில் க�ொடுத்தார். உங்கள் வருகைக்கு நன்றி. நான் நம்பும் ஒரு க�ொள்கை, வார்த்தைகள் நம் புலன்களில் இருந்து வரும் ப�ோது வெளிப்படும் உணர்ச்சிகள் க�ொந்தளிப்பு உடையவை. அது காதலாகட்டும், பாசமாகட்டும், சினமாகட்டும். நம் புலன்களுக்கு

ம�ௌனமாய்

அவ்வாறு ஒரு வடிவத்தை நம் முன்னோர்களும்,

பேசும் கண்ணுக்கு தெரியாது..

நம் சுழலும் க�ொடுத்திருக்கிறது. வார்த்தையின் பின் இருப்பது ம�ொழி மட்டும்

- கணேஷ்பிரியா சிவசெல்வம்

மிச்சிகன்

அல்ல. ம�ொழி தாங்கி வரும் உணர்ச்சி. அந்த உணர்ச்சி ஏன�ோதான�ோ என்றெல்லாம் வராது. ப�ொங்கி எழுந்து தான் வரும். அது தான் அதன் நியதி. அது இன்னொருவரை கையகப்படுத்தும், இல்லை, கைவிட்டு விலக வைக்கும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ எனக்கு பிடித்தம் இல்லை என்றெல்லாம் ப�ொய் ச�ொல்ல மாட்டேன். அதை செய்ய எனக்கு பயம். என் வார்த்தைகள் மீது நான் ஏற்றி வைக்கும் உணர்ச்சி. நீங்களும் இதை முயன்று பாருங்கள். வாழ்க்கை தெளிவாகும். கதவை திறந்து நடையை கட்டினேன். இந்த இரவுக்கு எந்த கனவு எனக்கு வாய்த்திருக்கிறத�ோ?

27 - ஜூலை 2023

நான் உறங்கும் ப�ோது மட்டும் என் ம�ௌனம் கலைப்பாய் என்று..!!!!

வார்த்தைகளை எல்லாம் துணைக்கு க�ொண்டு


The World's 1st Largest Range of Certified Organic Telugu Snacks

* No Artificial Colors * Minimum Oil Residue * Low Sodium

Organic Tamil Snacks

* No Artificial Preservatives * Certified Organic Ingredients

AahaSnacks www.aahasnacks.com

“ Made with cold pressed Organic Peanut Oil“ ThalaivaaSnacks www.thalaivaasnacks.com

To Give You The Best Organic Food that is pure & honest HappyLeafOrganic www.organichappyleaf.com

- ஜூலை 2023

28

For all orders & door delivery within US Contact

(980) 333-4003


னிதர்கள் பலவிதமான வாசிப்பை நிகழ்த்திக் க�ொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான வாசிப்பு தேவை சார்ந்த வாசிப்பாக, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் முடிந்து விடுகிறது. ஒரு மனிதனை மனிதனாக்குவதும், தலைவனாக்குவதும், ஒரு தலைவன் தலைமைத்துவ பண்புகள�ோடு இருப்பதற்கும் காரணம், புத்தக வாசிப்பு மட்டுமே! புத்தக வாசிப்பு வெறும் ப�ொழுதுப�ோக்கு அல்ல! அது ஒரு தவம்! நம் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் வாசிப்பின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அதுவும் இளம் வயதில் வாசிப்பு, மாணவர்களின் ம�ொழிப் புலமையை மட்டுமன்றி, அவர்களின் வருங்கால வளர்ச்சிப் பாதையையும் தீர்மானிக்கிறது. பெரும் தலைவர்கள் கூட தங்களது அயராத பணிச் சுமைக்கு இடையிலும் தங்களது வாசிக்கும் பழக்கத்தை, ஒருப�ோதும் ஒரு புத்தகம் கைவிடவில்லை. 100 நல்ல

கேண்டன் தமிழ் பள்ளியில்,

இம்முறை பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பளு ம். சேர்க்காமல் புது முயற்சி செய்தோம். வாசித்தால் வாழ்க்கை வளம் பெறும். நண்பர்களுக்குச் சம ாம் கல ல் எழுத்தோ, ச�ொல்லோ, வாக்கியம�ோ, பத்திய�ோ, – அப்து வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சிறுகதைய�ோ, நாவல�ோ, கவிதைய�ோ, கட்டுரைய�ோ வகையில், அமெரிக்காவில் மார்ச் மாதம் தேசிய எதுவாயினும் அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு, வகுப்பில் வாசிப்பு மாதமாக பின்பற்றப்படுகிறது. மேலும், தாய் படிக்கும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தோம். ம�ொழியில் வாசிப்பது நம் கற்பனைத் திறனைப் பன்மடங்காக்கும். வாசிப்பின் அவசியத்தையும் அதன் பலன்களையும் மாணவர்கள் அறியும் வண்ணம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பள்ளிகளில் (கேண்டன், ஃபார்மிங்டன் மற்றும் டிராய்) மார்ச் மாதம், தமிழ் வாசிப்பு மாதமாக அறிவிக்கப்பட்டது.

வகுப்பின் கடைசி பத்து நிமிடங்கள் ஆசிரியர்களிடம் மார்ச் மாதம் அனுமதி பெற்றுத் தன்னார்வலர்களின் உதவிய�ோடு படிக்கும் மாதத்திற்கான அனைத்து செயல்பாடுகளையும் நடத்தின�ோம். க�ொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து அதில் விடுபட்ட ச�ொற்களை தேர்ந்தெடுத்து எழுதுதல், வீட்டில் படித்த புத்தகத்தை வகுப்பில் ஒரு சிறிய பத்தியாக எழுதுதல், நினைவக விளையாட்டு என்று மார்ச் மாதம் முழுதும் களைகட்டியது எங்கள் தமிழ் பள்ளி. கலந்து க�ொண்ட அனைத்து மழலை செல்வங்களும் வெற்றியாளர்களே! ஆயினும் ப�ோட்டியில் ஆர்வமுடன் த�ொடர்ந்து பங்களிப்பு செய்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அதிர்ஷ்ட எண் பரிசு வழங்கப்பட்டது. அதிகப்படியான பங்களிப்பு அளித்த வகுப்பு மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆண்டு விழா அன்று சிவப்புக் கம்பளம் விரித்து, ப�ோட்டியில் வென்ற மாணவர்களை பரிசுக்கோப்பை வழங்கி க�ௌரவப்படுத்தின�ோம்.

மாதம்

29 - ஜூலை 2023

வாசிப்பு

மார்ச்


ஃபார்மிங்டன் தமிழ்ப் பள்ளியில், மாணவர்கள் உற்சாகமாக வாசிப்பில் பங்குபெற பல்வேறு வார்த்தை விளையாட்டுகள் அடங்கிய பட்டியல், வகுப்பு வாரியாக வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் கதை விவாதம். உனக்குப் பிடித்த புத்தகம், கதை உருவாக்குதல் ப�ோன்ற நடவடிக்கைகள் அடங்கும். மாணவர்கள், தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியத�ோடு, காண�ொளிகள் பதிவேற்றி இருந்தார்கள். மாணவர்களின் கடின உழைப்பை சிறப்பிக்கும் ப�ொருட்டு, ஊக்கப் பரிசுகள் வழங்கின�ோம். மேலும் அவர்களின் வாசிப்பின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக, வெற்றிக் க�ோப்பையை அவர்களுடைய புகைப்படம் க�ொண்டு வடிவமைத்தது எங்கள் நூலகக் குழு. இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது, எங்கள் அனைவருக்கும் இம்முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

டிராய் தமிழ் பள்ளியில், “ஹெலன் கெல்லர்” பெயரில் மார்ச் வாசிப்பு ப�ோட்டியை நடத்தின�ோம். கிட்டத்தட்ட நானூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகங்களை அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து முடித்திருந்தார்கள். ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடித்த பின்னர், அந்த புத்தகம் அளித்த அனுபவங்களையும், தங்களுக்கு பிடித்தவற்றையும், ரசித்தவற்றையும் மழலை ம�ொழியில் பேசி காண�ொளிகளாக அனுப்பி இருந்தார்கள். குழந்தைகள் தங்களுக்கு விருப்பப்பட்ட ம�ொழியில் புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தரப்பட்டது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து சில குழந்தைகள் இந்தி, ஸ்பானிஷ் ம�ொழி புத்தகங்களையும் படித்து தமிழில் அழகாகப் பேசி காண�ொளிகளை அனுப்பி இருந்தனர். வயது மற்றும் வகுப்பை கணித்து மூன்று குழுக்களாக பிரித்து ப�ோட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் அதிக புத்தகங்களை வாசித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு காச�ோலைகளும், வாசிப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கின�ோம்.

- ஜூலை 2023

30

வாசிப்பு கற்பனை வளத்தை அதிகரிக்கும், தத்துவ ந�ோக்கில் உங்களை சிந்திக்க வைக்கும். ஒரு மனிதன் கற்பனை செய்யவும் சிந்திக்கவும் பயிற்சி தேவை, பரந்துபட்ட வாசிப்பு அத்தகைய பயிற்சியைத் தரும். நாம் கற்ற கல்விய�ோ அல்லது அடைந்த ஞானம�ோ எது சரி, தவறு என்பதற்கான புரிதலை வாசிப்பு க�ொடுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கேற்ப, ‘தமிழால் வளர்வோம்! தமிழை வளர்ப்போம்!’

- ‘மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் நூலக குழு’

Fetna-வின்

தமிழ்த்தேனீ

ப�ோட்டி

- ஆதிலட்சுமி சந்திரன், ந�ோவை

டஅமெரிக்க அளவில் நடைபெற்ற ஃபெட்னா தமிழ்த்தேனீ- மண்டல அளவிலான ப�ோட்டிகளில், நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கேண்டன், ஃபார்மிங்டன் மற்றும் டிராய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல சுற்றுகளில் வென்று, நமது மிச்சிகன் மாகாண தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் ப�ோட்டி தமிழ் ஆர்வம் க�ொண்ட வடஅமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகளுக்கு, தங்கள் தாய்மொழி திறனை நிரூபிக்க மிகப்பெரிய தேசிய மேடையை அமைத்து தருகிறது. இந்தப் ப�ோட்டி ஆண்டுத�ோறும் வயதுவாரியாக ஐந்து நிலைகளில் நடத்தப்பட்டுவருகிறது. 

தேனீ - 1 (அரும்பு - படமும் வார்த்தையும்),

தேனீ - 2 (மலர் - ம�ொழிமாற்றிக் கூறவும்),

தேனீ - 3 (கனி - படமும் கதையும்),

தேனீ - 4 (விதை - ம�ொழிமாற்றி எழுதவும்)

தேனீ - 5 (செடி - வார்த்தை தேடல்)

சபாஷ் தேனீக்களா

முதலில் நம்முடைய நமது மிச்சிகன் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வட்டாரச் சுற்றில் (Regional) இருவர் க�ொண்ட குழுவாக பங்கேற்று வெற்றி பெற்றனர். பின் வட்டாரச் சுற்றின் முதல் இரண்டு வெற்றியாளர்கள் மண்டல அளவிலான (zonal) சுற்றில் பங்குபெற தகுதி பெற்றனர். மண்டல அளவிலான சுற்றில் ஆறு மாகாணங்களில் (IL, IN, MI, MN and MO) இருந்து மாணவர்கள் பங்கேற்றார்கள். இதிலும் நமது மிச்சிகன் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வெற்றிப் பெற்று ஜூன் 30 மற்றும் ஜூலை 1 அன்று சாக்ரமென்டோவில் நடைபெறும் அரை இறுதிச் சுற்றுக்கு 10 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பதில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சார்பாக பேருவகை க�ொள்கிற�ோம்.

ப�ோட்டியில் வெற்றி பெற்ற நமது ‘தமிழ்த்தேனீக்கள்’ கேண்டன் தமிழ்ப் பள்ளி: வேதா விஜய்ராஜ் தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - முதல் இடம் பத்ம பரத் தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - முதல் இடம்


சாய்சரண் சிவப்பிரகாஷ் தேனீ 2 - மலர் மண்டல அளவில் - முதல் இடம்

தர்ஷிகா பிரதாப் தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - இரண்டாம் இடம்

அர்ஜுன் தக்க்  ஷின் ஹரிஹரன் தேனீ 2 - மலர் மண்டல அளவில் - முதல் இடம்

நிமல் ராமசாமி தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - இரண்டாம் இடம்

ஆராதனா சிவக்குமார் கார்த்திகா தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - முதல் இடம்

ப�ோட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் மற்றும் வழி நடத்திய ஆசிரியர்களுக்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் க�ொள்கின்றது. மேலும் சாக்ரமென்டோவில் நடக்கவிருக்கும் அரை இறுதி ப�ோட்டியில் பங்கு பெறப்போகும் நமது மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிற�ோம்.

நேத்ரா சண்முகவேலு தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - முதல் இடம் அஸ்வத் ஆனந்த் தேனீ 4 - விதை மண்டல அளவில் - இரண்டாம் இடம் யாழ்விழி ரமா பரணீதரன் தேனீ 4 - விதை மண்டல அளவில் - இரண்டாம் இடம்

நித்திலா ராமலிங்கம் தேனீ 5 - செடி மண்டல அளவில் - முதல் இடம்

ஃபார்மிங்டன் தமிழ்ப் பள்ளி: ரியா அச�ோகன் தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - முதல் இடம் ரித்விகா அச�ோகன் தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - முதல் இடம் கீர்த்தனா னிவாசன் தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - இரண்டாம் இடம் ஷஸ்வின் அருளரசன் தேனீ 1 - அரும்பு மண்டல அளவில் - இரண்டாம் இடம்

டிராய் தமிழ்ப் பள்ளி: நந்தன் சிவசெல்வம் தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - இரண்டாம் இடம் வருண் கிருஷ்ணா ல�ோகரத்தினம் தேனீ 3 - கனி கால் இறுதிச் சுற்று - இரண்டாம் இடம்

ர் வுகள்! ககாத

வரவேற்பும் விடைபெறுவதுவும் -

ஆரம்பம் என்னவ�ோ என்னிடம்தான், கணவன் மனைவியின் சண்டையின் தன்மை என்னுடன் உரையாடும் ஓசையை ப�ொறுத்தது, நல்ல பாடலை நலமற்ற பாடலாய் உன் குரல் மாற்றினாலும் – வெளியிருப்போர் நலனை காக்கும் மருத்துவர், நீ தூய்மைய�ோ இல்லைய�ோ, வெளி கழிவுகளை – அண்டவிடாமல் பாதுக்காக்கும் சுவர்கள், எனக்கு ஒரு வேண்டுக�ோள் தினமும் தியானம் செய்வீர், என்னை கனிவாய் நடத்த, தினமும் தியானம் செய்வீர், உடல் நலம் காக்க – இருவருக்கும், இத்துடன் கதவுகள் மூடப்படுகிறது! நன்றி, மீண்டும் வருக!!

புத்தாண்டு

- செந்தில்ராஜ்,

உறுதிம�ொழிகள்!

ஒரு நாள் மட்டும்,

ஒரு ய�ோக்கியன் பிறந்து, மறுநாளே அய�ோக்கியன் ஆகிறான் புத்தாண்டு உறுதிம�ொழிகள்!

க்ராண்ட்ராபிட்ஸ்

31 - ஜூலை 2023

தன்யா ஹரிகிருஷ்ணன் தேனீ 5 - செடி மண்டல அளவில் - முதல் இடம்


சிறுகதை

“அ

மீனா

மிச்சிகன்

ப்பா! அம்மாவ�ோட காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சது. உங்க கைக்கு மீறி செலவு செஞ்சு நல்லபடியா நடத்தி முடிச்சிட்டீங்க. நான் ஊருக்கு கிளம்பறேன். அதுக்கு முன்னாடி, அம்மாவ�ோட நகைகளை எல்லாம் எனக்கும் தம்பிக்கும் சரிசமமா பங்கு பிரிச்சு தந்திடுங்க. நான் கணக்கா கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. ஏத�ோ அந்த நகைகளாவது அம்மாவ�ோட ஞாபகமா என்னோட இருந்தா நல்லா இருக்குமேன்னு த�ோணிச்சு. அதான் கேட்டேன்“, வராத கண்ணீரைத் துடைத்தபடி பவித்ரா கேட்க, அம்மா இறந்த ச�ோகத்திலும், தன் பங்கு நகைகளைப் பிரிப்பதிலேயே குறியாய் இருக்கும் மகளைக் கண்டு சேகருக்கு மனம் கனத்து தான் ப�ோனது.

அப்பட்டமாக தெரிய, ரம்யா மனதுக்குள் வெறுப்பாக உணர்ந்தாள். ராகவன் பவித்ராவை விட எட்டு வயது சிறியவன், இருந்தாலும் ப�ொறுமையும் ப�ொறுப்பும் மெச்ச இருந்தான் இன்று அக்காவின் இந்த அநியாயமான செயல் வேதனை தந்தாலும், “நீ பார்த்து எதைக் க�ொடுத்தாலும் சரி தான் கா” என்றபடி

இது ப�ோன்ற நாடகமெல்லாம் கட்டாயம் அரங்கேறும் என்று தெரிந்திருந்ததால், சலனமின்றி எழுந்து சென்று பீர�ோவில் இருந்த நகை பெட்டியை எடுத்து வந்தார் சேகர். நடப்பது எதுவும் தனக்கு சம்பந்தம் இல்லாதது ப�ோல் ம�ௌனமாக நின்றிருக்கும் மகன் ராகவனிடம், “ராகவா! நீயும் வாப்பா” என்றபடி, நகைப் பெட்டியை திறந்தார். நாலு அடுக்கு வளையல் செட்டும், மாட்டலுடன் சேர்ந்த வைரத் த�ோடும், சிவப்பு கல் நெக்லசும், க�ோதுமை மாடல் சங்கிலியும், மாங்கல்யத்துடன் கூடிய தாலிக் க�ொடியும், முகப்பு வைத்த இரட்டை வடச் சங்கிலியும், வெள்ளைக் கல் சங்கு ம�ோதிரமும், ஆயிரமாயிரம் நினைவுகளைத் தூண்டிவிட, அவற்றையெல்லாம் பாங்காய் அணிந்திருந்த பத்மாவின் முகத்தை மனத்திரையில் ஓட்டிப் பார்த்தார் சேகர். “அம்மாவ�ோட மாங்கல்யத்தை மகன் தான் எடுத்துக்கணும்னு ச�ொல்வாங்க. அதனால, மாங்கல்யத்தை பிரிச்சு நீ எடுத்துக்க ராகவா. இத�ோ இந்த சிவப்பு கல் நெக்லசும், சங்கு ம�ோதிரத்தையும் கூட நீயே எடுத்துக்கோ. நான் எங்க இந்த மாட்டலெல்லாம் ப�ோடப் ப�ோறேன். அதனால அதையும் நீயே எடுத்துக்கோ“, தம்பிக்கு விட்டுக் க�ொடுப்பது ப�ோன்ற பேச்சில், சற்றே பழைய நகைகளை ராகவனிடம் தள்ளிவிட்டு, இரட்டை வடச் சங்கிலியையும், தாலிக் க�ொடியையும், வைரத் த�ோடையும், க�ோதுமை சங்கிலியையும் கையில் எடுத்தபடி, “மத்த எல்லா நகையையும் நீயே எடுத்துக்கோ ராகவா. அம்மா ஞாபகமா இதை மட்டும் நான்

- ஜூலை 2023

32

வச்சிக்கிறேன்” என்று, நீலிக் கண்ணீர் வடித்தாள் பவித்ரா. பவித்ரா சிறு வயதிலிருந்தே தன் ப�ொருட்களை யாருடனும் பகிர்ந்து க�ொள்ள மாட்டாள். தன் விளையாட்டு சாமான்களையும், தின்பண்டங்களையும் கூட, தனக்கு ப�ோக மிச்சம் தான் தன் தம்பிக்கு என செல்லமாக வளர்ந்த பெண். சின்ன வயதில் இவளின் இந்த குணத்தை படு கெட்டிக்காரி என்று மெச்சிய சேகருக்கும் பத்மாவுக்கும் அவள் வளர வளர, அவர்கள் வளர்ப்பின் அழுத்தம் புரிந்தது. ராகவன் - ரம்யா திருமணத்தன்றே பவித்ராவின் நாத்தனார் கெடுபிடிகள்

அம்மா நகை


மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் வாயை மூடிக் க�ொண்டான் ராகவன். ராகவன் மறுப்பேதும் ச�ொல்லிவிடுவான�ோ என்று நினைத்த பவித்ராவுக்கு, அவனது பேச்சு நிம்மதியைத் தர, “சரிப்பா! அப்போ நான் பெங்களூருக்கு கிளம்பறேன். ராகவா! அப்பாவை நல்லா கவனிச்சுக்கோ. ரம்யா! அப்பாவுக்கு நல்லா சமைச்சு ப�ோடு. அவரை நல்லபடியா வெச்சிக்கோங்க ரெண்டு பேரும்” என்று நாட்டாமை ப�ோல் கூறினாள் பவித்ரா.

“இல்லப்பா! பாகப் பிரிவினைன்னு வந்துட்டா பிரிக்கிறது சமமா இருக்கணும். அதை விட்டுட்டு இந்த மாதிரி இருக்க கூடாது. பவித்ரா, எல்லா நகைகளையும் மூணு பங்கா பிரி. முக்கியமா அந்த இரட்டை வடச் சங்கிலியை என்கிட்ட க�ொடுத்திடு. அவ நினைவா அதை நான் வெச்சிக்கிறேன்” என கறாராய் கூறிய தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தவளாய், நகைப் பெட்டியை அவரிடம் நீட்டினாள் பவித்ரா.

“அம்மாடி! ஒரு நிமிஷம்” என்றபடி அமைதியான குரலில் சேகர் இடைமறிக்க, கேள்வியுடன் அவரை ந�ோக்கினாள் பவித்ரா.

நகைகள் யாவும் மூன்று பங்குகளாய்

“இருக்குற எல்லாத்தையும் அம்மா ஞாபகமா

சரிசமமாகப் பிரிக்கப்பட்டன. அதில் இரட்டை

எடுத்துக்கறேன்னு நீயே எடுத்துக்கிட்டா, அவ

வடச் சங்கிலியையும், வைரத் த�ோடையும் தன்

நினைவா எனக்கு எதுவும் வேணாமா? இந்த

பங்கு என்று கேட்டு வாங்கிக் க�ொண்டார் சேகர்.

நகைகளை எல்லாம் அவ கழுத்திலும் காதிலும்

அவரது செயல் வின�ோதமாகத் த�ோன்றினாலும்,

வாங்கிப்போட்டு தினமும் பார்த்துப் பார்த்து

அமைதி காத்தான் ராகவன். முகத்தில் தெரிந்த

பூரிச்சவன் நான். எனக்கும் அவள் நினைவா

அப்பட்டமான ஏமாற்றத்துடன், திருப்தியற்றவளாய்

எதையாவது விட்டு வைக்கணும்னு உனக்கு த�ோணலையா? அதெப்படிம்மா அம்மா உயிர�ோட இருந்தப்போ வேலை, டென்ஷன், குழந்தைகள் ஸ்பெஷல் கிளாஸ், வெக்கேஷன், லீவ் இல்லை... இப்படி பல சாக்கு ச�ொல்லி, வாரம் ஒரு

அவளை கவனிச்சிக்கிட்டது ராகவனும் ரம்யாவும் தான். ஆனா ஏத�ோ பேருக்கு சின்னச் சின்ன

க�ொண்டும் பவித்ரா கண்ணில் காட்டிடாதே.”

மாதிரி க�ொடுத்துட்டு, மத்த எல்லாத்தையும் நீயே

சேகர் த�ொடர்ந்தார் ”மகளான பவித்ரா

எடுத்துக்க நினைக்கிறது எந்த வகையிலம்மா நியாயம்?” என ப�ொறுமையாகக் கேட்டார் சேகர்.

தெரிந்தவனாய் ராகவன் கூற, “இல்லப்பா! பாகப் பிரிவினைன்னு வந்துட்டா பிரிக்கிறது சமமா இருக்கணும். அதை விட்டுட்டு இந்த மாதிரி இருக்க கூடாது. பவித்ரா, எல்லா நகைகளையும் மூணு பங்கா பிரி. முக்கியமா அந்த இரட்டை வடச் சங்கிலியை என்கிட்ட க�ொடுத்திடு. அவ நினைவா அதை நான் வெச்சிக்கிறேன்” என கறாராய் கூறிய தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்தவளாய், நகைப் பெட்டியை அவரிடம் நீட்டினாள்

உங்கம்மா கிட்ட காட்டாத பாசத்தையும் அன்பையும், மருமகளா வந்த ரம்யா காட்டியதில் உங்கம்மாவுக்கு க�ொள்ளை சந்தோஷம் பா. மருத்துவ செலவு, திருப்பதிக்கு ப�ோய் வந்த செலவு முதல் ம�ொபைல் ரீசார்ஜ் என எல்லாமே நீ

எனக்கும் நகை என்றால் ர�ொம்ப பிடிக்கும்.

பண்ணினது தான் ராகவா. இப்படி கடைசி காலத்தில் எங்களுக்கு எல்லாமா இருந்த உனக்கும் ரம்யாவுக்கும் தான் நகைகள் ப�ோய் சேரனும். அது தான் சரி. அது தான்

நியாயம். இந்தா இதை பிடி” என்று நகையை மகனிடமும் மருமகளிடமும் நீட்டினார். இதை சற்றும் எதிர்பாராத ரம்யா ஒரு கணம் ய�ோசித்தாள். “மாமா! தயவு செஞ்சு அப்படி ச�ொல்லி, எங்க அன்பை அந்நியமாக்காதீங்க. இந்த நகைகளை எங்களுக்குனு நீங்க எடுத்து க�ொடுக்கிறது தான் உங்களுக்கு

33 - ஜூலை 2023

உரிமையா” பவித்ராவின் பிடிவாத குணம்

ராகவன் வீட்டிற்கு வந்தபின் சேகர் “இந்தாப்பா! இந்த இரட்டை வடச் சங்கிலியும், வைரத் த�ோடும், இது உனக்குச் சேர வேண்டியவை. எக்காரணம்

நகைகளை அவங்களுக்கு விட்டுக் க�ொடுக்கிற

வீட்டு ப�ொண்ணு. அக்காவுக்கு இல்லாத

வந்தால் க�ொடுத்தனுப்பும் மளிகை சாமான்களும்,

விட்டுவிட்டு வந்தான் ராகவன்.

வாழணும்னு ஆசைப்படற? பார்த்துப் பார்த்து

விடுங்க. ஆயிரம் தான் இருந்தாலும் அவ நம்ம

அக்காவுக்கு, அம்மா முன்பெப்போதும் வீட்டுக்கு

அடுக்கி அவனே தூக்கிச் சென்று ரயில் ஏற்றி

அவ இறந்து ப�ோனதும் அவ ஞாபகத்தோட

அக்காவுக்கு என்ன வேணும�ோ எடுத்துக்கட்டும்

பவித்ரா விடை பெற்றாள்.அம்மாவின் பதினாறாவது நாள் ஈமக்கிரியை முடிந்து வீடு திரும்பும்

வடகம், வத்தல், மிளகாய் ப�ொடி என அத்தனையும்

முறை ப�ோன் கூட செஞ்சு பேசாத நீ, இப்போ

“அப்பா! ப்ளீஸ் எதுவும் பேச வேண்டாம்.

பவித்ரா.


வெற்றிக் கனியை தக்க வைக்கும்

சரியானதாகவும், நியாயமானதாகவும் த�ோணுது. அது தப்பில்ல. பவித்ரா அண்ணிக்கு பிடிவாதமும், க�ோபமும் க�ொஞ்சம் அதிகம் தான், ஆனால் அதைவிட நம்ம மேல அவங்களுக்கு கண்மூடித்தனமான பாசமும், அக்கறையும் இருக்கிறது. நேரம் எடுத்து உங்ககிட்ட ப�ோன் பேசலனு நீங்க வருத்தப்பட்டாலும், அவங்களுக்கு கல்யாணமாகி கடந்த 17 வருஷமா, இப்ப வரைக்கும், பெங்களூரில் அவர்கள் பெரிய குடும்பமாக இருந்தாலும், அங்க வீட்டுப் பிரச்சனை,

நம் தமிழ்ப் பள்ளிகள்! தமிழா! தமிழால் நமக்கு கிடைக்கிறது

அது சரியில்லை, இவங்க சரியாயில்லைனு, ஒரு

இரு ம�ொழி முத்திரை!

நாளும் நம்ம கிட்ட வந்து நின்னதும் இல்லை, யாரையும் எதுவும் ச�ொன்னதும் இல்லை. இதை புரிஞ்சிக்க எனக்கும் சில வருஷங்கள் ஆச்சு. தான் பிறந்த வீட்டில் சில உரிமைகள் உண்டு. அம்மா

ஆங்கிலம் தவிர்த்து பிறம�ொழிகளிலும் புலமை

காலத்திற்கு பிறகு அது அண்ணன்-தம்பி வீடாக

பெற்றவர்கள் என்பதைக் குறிப்பதுதான் இந்த

தான் மாறிப் ப�ோகுது. அங்கு முன்ன மாதிரி உரிமை

இரு ம�ொழி முத்திரை! இதனை வழங்குபவர்கள்

எடுத்துக்க முடியாது. இவருக்கோ கூடப்பிறந்த

அமெரிக்காவின் ம�ொழித்திறன் க�ோட்பாடுகளை

ச�ொந்தம்னு இருக்கிறது பவித்ரா அண்ணி மட்டும்

வகுக்கும் ACTFL (American Council on the

தான்.

Teaching of Foreign Languages) என்ற

இந்த நகையை நான�ோ என் மகள�ோ ஏதேனும்

அமைப்பு. இந்த முத்திரை நமது மாணவர்கள்

வேறு விசேஷத்துக்கு ப�ோட்டுட்டு ப�ோனா அண்ணி மனசுல ஏத�ோ ஒரு மூலையில மனக்கசப்பு இருக்கத் தான் செய்யும்.

பல்கலைக்கழக கல்லூரிகளில் சேருவதற்கு கூடுதல் தகுதியாகவும், கல்லூரிகளில் உலக ம�ொழிக்கான மதிப்பீடு புள்ளிகளை (world Language

நீங்க அன்பா க�ொடுக்கிறத வேண்டாம்னு

Credits) மூன்று முதல் நான்கு பருவங்களுக்கு

ச�ொல்லல. இது எல்லாம் நீங்க எங்க மேல

பெற முடிவதால் இவர்கள் கல்லூரிக் கட்டணத்தில்

வச்சிருக்கிற பாசத்தோட வெளிப்பாடு தான்.

கணிசமான பணத்தைச் சேமிக்கவும் உதவுகிறது

ஆனா காசு, நகை விஷயத்தில முன்ன பின்ன ச�ொந்தங்கள�ோடு அனுசரித்து ப�ோவது

என்பது மகிழ்ச்சியான செய்தி.

தப்பு இல்லைன்னு நினைக்கிறேன். இந்த

இத்தனை பயனுள்ள அந்த முத்திரையை எப்படி பெறுவது? அது மிகவும் கடினமா? யாரால் இதற்கு உதவ முடியும்? இந்த மாதிரியான கேள்விகள் உங்களுக்குள் எழுகிறதா?

நகையை தாய்மாமன் சீராக ஷிவானி சடங்குக்கு செஞ்சிடுற�ோம். அம்மா நகை மகளுக்கு இல்லைனாலும் அம்மா வழி நகைன்னு பேத்திக்கு இருக்கட்டும். எங்களுக்கு அண்ணியும் குழந்தைகளும் அந்நியப்படாமல் எப்போதும் ப�ோல நம்ம வீட்டுக்கும் விஷேசத்துக்கும் உரிமைய�ோட வரப் ப�ோக இருப்பதே பெரிய ச�ொத்து. இதுவே நியாயம்னு எனக்கு படுகிறது, இப்படி இருக்கிறது தான் சரின்னு படுது” என்று ரம்யா ச�ொன்னது நிதர்சனம் என ராகவனுக்கும் பட

34 “அப்படியே இருக்கட்டுமே அப்பா” என்றான். - ஜூலை 2023

ரு ம�ொழி முத்திரை என்றால் என்ன?

எல்லா மகள்களுக்கும் அம்மா இருக்கும் வரை

மகளாகப் பிறந்தவள் அந்நியமாகி ப�ோவதும், மருமகளாய் வாழ வந்தவள் அன்பைப் ப�ொழிவதும் இங்கே பல குடும்பங்களில் இயல்பாகிப் ப�ோய்விட, மருமகளின் அன்பில் திளைத்தவராய், கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவராய், நிறைந்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தார் சேகர்.

இதற்காக நமது தமிழ்ப் பள்ளிகளின் பதில் இத�ோ: நமது பள்ளிகளில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர் (தேவி ராஜாராமன், அரவிந்த் சரவணன், பாலாஜி ராதாகிருஷ்ணன் - கேண்டன், பிரவீணா இராமரத்தினம்,


தேர்வு எழுத தற்சமயம் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து க�ொண்டிருந்த நமது டிராய் பள்ளியின் மாணவ ஆசிரியர்கள் முடிவு செய்து சிறந்த முயற்சி எடுத்து தனித்தமிழ் பேச்சு, தனித்தமிழ் எழுத்து இவைகளில் மிகுந்த கவனத்தோடு படித்ததின் பயனாக தருணிகா இராமநாதன், காவ்யா சிவகுமார் மற்றும் நியதி மணிவண்ணன் ஆகிய மூவரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு அந்த மதிப்பெண் சான்றிதழை அதற்கென உள்ள இணையத்தளத்தில் சமர்ப்பித்து மூவருக்கும் இரு ம�ொழி முத்திரை தாங்கிய சான்றிதழ் கிடைத்தது. மேலும் பள்ளி நிர்வாகத்திடமிருந்தும்

கூடுதலாக அங்கீகாரமும் இரும�ொழி முத்திரையும் கிடைத்துள்ளது.இந்த தேர்வு குழந்தைகளுக்கு தமிழ் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்து சிறந்த தன்னம்பிக்கையை க�ொடுத்தது. அதுமட்டுமல்ல கூடுதல் முயற்சியாக கேண்டன் தமிழ்ப் பள்ளியில் அடிப்படை நிலையிலிருந்து நிலை 8 வரை த�ொடர்ந்து நம்மிடம் பயின்ற மாணவர்களுக்கு அவர்களது ஒவ்வொரு நிலையின் மதிப்பெண் பட்டியல் மற்றும் இறுதி வருட சான்றிதழையும் அவர்களது பள்ளி நிர்வாகத்தினருக்கு க�ொடுத்தால் அதை அவர்கள் பள்ளியின் ம�ொழி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் நமக்கு இரும�ொழி முத்திரையாக சிறப்பித்து நம்மிடம் அவர்களின் பள்ளி படிப்பை முடிக்கும் ப�ோது தருகிறார்கள் என்பது நம் மிச்சிகன் தமிழ்ச் சங்க தமிழ்ப் பள்ளியில் படிப்பதின் இரட்டிப்பு பயன் என்றால் அது மிகையல்ல. அதன்படி இந்த வருடம் அபினவ் இரகு, ராம் இராமலிங்கம் மற்றும் கணேஷ் பழனியப்பன் ஆகிய�ோர் அந்த முத்திரையை பெறவிருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி. அதனால் இரு ம�ொழி முத்திரையானது கனிந்து இந்த வருடமும் நம் கைகளில் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் இப்போது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’. இதைப் பெறுவது அந்தந்த பகுதிக்கு ஏற்றாற் ப�ோல் மாறுபடுவதால் இதுபற்றி மேலும் தகவல் அறிய விரும்பினால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகுமாறு அன்பர்களை அன்போடு கேட்டுக் க�ொள்கிற�ோம். நன்றி!

- தமிழ்ப் பள்ளிகள் தலைமைக் குழு

35 - ஜூலை 2023

சுபாஷினி - ஃபார்மிங்டன், திவ்யா சுந்தர்ராஜூ, தேவிமீனாள் முருகப்பன் - டிராய்). குழுவை தன்னார்வலர் அபர்ணா அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்தினார். பலவிதமான ஆராய்ச்சிகளை இந்த குழு செவ்வெனே செய்து தேவையான அத்தனை தகவல்களையும் சேகரித்தனர். அதன்படி ‘அவன்ட’ (AVANT) என்ற ஒரு தனியார் அமைப்பின் மூலமாக தேர்வு எழுத முடிவு செய்தனர். தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற நமது பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்களுக்கு (இன்றைய மாணவ ஆசிரியர்களுக்கு) சிறப்பு வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நமது தன்னார்வலர்கள் குழு கடந்த ஒரு வருடமாக நடத்தினர்.


- ஜூலை 2023

36


பகையிலிருந்து வெளியேற்றம் மரங்கள் நடு எண்ணியவை எல்லாம் செய்திடு, முடித்திடு.

வாழ்வு கிட்டுவது நடவாமல் ப�ோகலாம். மரணம் நிகழ்வது உறுதி செய்யப்பட்டது.

மனம் புண்படாதே பிறர் மனமும் புண்படுத்தி விடாதே நன்றி மறவாதே நன்று மறந்திடாதே நல்லவை செய்து பார் அல்லவை தட்டிக்கேள் ஆதங்கம் தீர்த்துவிடு. மனதை சிறகாக்கிக்கொள். மரணம் நிகழும் முன், செய்வன செய்துவிடு.

வாழ்வு கிட்டிய பிறகு செய்துக்கொள்ள எண்ணாதே மரணம் நிகழும் முன் செய்துவிட நினை. வாழ்வு எப்போது என்று கணிக்க இயலாமல் ப�ோகலாம். மரணம் அப்படியல்ல.. இன்றே நாளைய�ோ இந்நொடிய�ோ அடுத்த ந�ொடிய�ோ சட்டென நிகழ்ந்துவிடும்.

வாழ்வு அமைய காலம் கடக்கலாம். மரணம் நிகழ தாமதமாவதில்லை.

மரணம் நிகழும் முன், முடிப்பவை முடித்துவிடு. அன்பை காட்டிவிடு காதலை ச�ொல்லிவிடு

கற்பவை கற்றுமுடி கற்றவை கற்பித்துவிடு கடன்பட்டதை தீர்த்துவிடு ஓவியம�ொன்று வரைந்திடு கவிதைய�ொன்று எழுதிடு கடலில் ஒரு பயணம் வானில் ஒரு பயணம் பிடித்தவர் நெஞ்சினில் நிரந்தர குடியேற்றம்.

விருப்பம்

க்கடிகார முட்கள் நேரத்தை மட்டும் காட்டினால்கூடப் பரவாயில்லை நறுக்கென்று‌க் குத்திக் க�ொண்டே இருக்கிறது காயங்களுக்கு மருந்தையும் காயும் காலத்தையும் தன்னிடத்தே வைத்திருப்பதாய் வியாக்கியானம் வேறு தூக்கிப் ப�ோட்டு உடைத்தாலும் கைக்கொட்டிச் சிரிக்கிறது பிரபஞ்சத்தின்‌பிரவசத்தினூடே பிறந்த காலம்.

ப�ோகிற ப�ோக்கில்

குட்டிக் குழந்தைய�ொன்று கையசைத்து முத்தம�ொன்றைப் பறக்கவிட்டது எனக்காய் இஃத�ொன்று ப�ோதாதா இன்றெல்லாம் பெருமையடித்துக் க�ொள்ள.

- செந்தில்குமார் பழனிச்சாமி, - செ. உதயசங்கர்,

ஃபார்மிங்டன்ஹில்ஸ்

டிராய்

37 - ஜூலை 2023

ஓடுவதல்ல வாழ்க்கை மரணத்தை ந�ோக்கி ஓடுவதே வாழ்க்கை.

காலம்

வாழ்வதை ந�ோக்கி

இன்னும் ஆராயபடாமல் இருக்கும் மர்மங்களைப் ப�ோல் எத்தனைய�ோ விருப்பங்கள் பாசிபடிந்துப் பதுங்கி இருக்கின்றன மனதின் இடுக்குகளில்.

பெருமை

மரணம் நிகழ தாமதமாவதில்லை!

ஆழ்கடலில் விழுந்து


- ஜூலை 2023

38


நிஜகக்னவு -சரண்யா இராமகிருஷ்ணன், கேண்டன்.

நால்வர் வாழும் தீவில் இன்னும் இரண்டு பேர்!

ச�ொல்ல முடியாத அளவு உற்சாகம்! பத்தாண்டு ப�ொறுமை காத்த எனக்கு பதினெட்டு மணி நேரம் ரணமாயின! எத்தனை வேண்டுதல்கள் விமானம் தரை இறங்கும் வரை!

அம்மா சமையல், வாராவாரம் எண்ணெய் குளியல், அப்பாவின் காலை நியூஸ், உரையாடல் சத்தம், தங்கைகளுடனான அலப்பறை, ஒன்று விட்ட உறவுகளும் அம்மா அப்பா மூலம் நெருங்கிய தருணங்கள், முன் சீட்டில் அப்பா பின் சீட்டில் அம்மா எத்தனை நாள் கனவு! என் ஆங்கில புலமைக்கும் இரு ஆதரவாளர்கள்! எவ்வளவு பெருமிதம் அவர்கள் முகத்தில்! நாணத்துடன் நான் திரும்புகையில், நகைச்சுவைய�ோடு என் முன்னே என் புதல்விகள்! எனக்கு மட்டும் அல்ல எங்க வீட்டு அலெக்சாவிற்கும் விடுமுறை! ஞாயிற்றுக்கிழமை காலை உணவா? என்ற குழப்பத்தில் என் குடும்பம்! சுட சுட இட்லியும் மட்டன் குழம்பும்! முதல் தட்டு இட்லிக்காக குழந்தைகள�ோடு குழந்தையாய் தட்டுடன் நான்!

சாப்பிட்டவுடன் தலை சாய அம்மா மடி – தலையணையாய்! சாப்பிட்டவுடன் படுக்காதே என்று அப்பா ஒரு புறம் யாருக்கு கிடைக்கும் இவ்வரம்! பெற்றோர்கள் இருக்கும் வரை மட்டுமே நாம் குழந்தைகள்! என்னவர்க்கும் என் அப்பாவிற்கும் எதிர்பார்த்தத�ோ எதுகை ம�ோனை நடந்தத�ோ இரட்டைக்கிளவி! மகன் இல்லா இடத்தை நிரப்ப – மூத்த மரு-மகன் மகனாய் மாற மறுவார்த்தை பேச முடியாமல் ம�ௌனத்தில் நான்! மனமகிழ்ச்சிக்கு குறையில்லாத கூடு - என் வீடு! ப�ொருளை வைத்து உறவை ச�ொல்லும் உலகத்தில், பாசம் வைத்து உறவையும் உணர்வையும் வென்றவர், என்னவர்! என் கணவர்! என் கனவுக் கணவர்! சந்தோஷத்தில் சிறகில்லா பறவையாய் நான்! கடவுளிடம், நான் வேண்ட இனி என்ன உள்ளது? கூற நன்றியை தவிர! கனவு நனவாகி நிஜமாகையில் கலை(ந்)த்தது தூக்கம் கனவில் த�ொலைத்த நிஜத்தை, நிஜத்தில் கை பிடித்து கரை சேர்க்கிறது எம் நட்பு வட்டாரம் நட்புகள் இங்கே உறவுகளாய் - கை க�ோர்த்து ச�ோர்ந்த ப�ோதெல்லாம் கரை சேர்க்கிறது! கடவுளிடம், நான் வேண்ட இனி என்ன உள்ளது? கூற நன்றியை தவிர!

39 - ஜூலை 2023

முதல் பார்வையில் அம்மா - என்ன ச�ொல்லுவாள�ோ என்ற பயம்! அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க சுத்தம் செய்த வீட்டை, மீண்டும் மீண்டும் சுத்தம் செய்தேன். அப்பாவை த�ொட்டு பார்த்த அந்த ந�ொடி - கண்கள் குலமாயின! உடைந்தே ப�ோனேன்! மறுபிறவி எடுத்த அப்பாவை காணும் வரை! வாங்கி வந்ததை பரப்பி வைத்து ஒவ்வொரு ப�ொருளுக்கும் ஒரு கதையை ச�ொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா! வந்த மறுநாளே மகள் தூங்கட்டும் என்று ப�ொறுப்பேற்றனர்! முடியாத ப�ோதிலும் அம்மாவுக்கு உதவும் அப்பா எனக்கு ஓய்வு க�ொடுக்க! வெகு நாள் கட்டி வைத்த கன்று(மகள்)கள் திக்கு தெரியாமல் திரிந்தன ச�ோம்பேறித்தனத்தின் பிறப்பிடமானேன்! புது அனுபவம்!


நிகழ்வுகள்... மகளிர் தின க�ொண்டாட்டம்!

"எ

ங்கெங்கும் காணினும் சக்தியடா" என்ற பாரதியின் வாக்கின்படி உலகெங்குமுள்ள பெண்ணினத்தை பெருமைப்படுத்தும் வகையில் 2023 மார்ச் 10-ஆம் தேதி மிச்சிகன் தமிழ்ச் சங்கம் மகளிர் தின விழாவினை சீரிய முறையில் க�ொண்டாடியது. மகளிர் தின நிகழ்ச்சிகளை வலைஒளி மூலம் நிகழ்நிலை காண�ொளி வாயிலாக கண்டுகளிக்க இணைந்த அனைவரையும், சாதித்த, சாதிக்கப் ப�ோகும் பெண்களையும், சிறப்பு விருந்தினர் திருமதி.அஜிதா, மற்றும் அனைவரையும் அழகான முறையில் செயற்குழு உறுப்பினர் வரவேற்றனர். த�ொடர்ந்து சிறப்புரையாற்றிய திருமதி.அஜிதா, பெண் உரிமை, மாந்தர் ஆளுமை, சமுதாயத்தில் அவர் தம் பங்கு, சுயசார்பு சிந்தனைகள் ப�ோன்ற கருத்துக்களை முன்வைத்தார். இவ்விழா

அழகாக தெளிவுபடுத்தினார். உடல் மற்றும் மன நலம் பேணுதல் வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைப் பாதைகளை அமைக்கும் என திருமதி. சங்கீதா மற்றும் திருமதி.பாரதி முருகவேல் விளக்கமளித்தார்கள். செயற்குழுவின் செயலாளர் திரு.திருமலைஞானம் அனைத்து பதிவுகளையும் கூர்நோக்கி பாராட்டி தம் வாழ்த்துக்களை தெரிவித்தார். கண்டம் பல கடந்தும் தமிழ்ப் பண்பாட்டினை பெருமைப்படுத்தும் வகையில் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்திய மகளிர் தின விழா வியப்புறும்படி சிறப்பாக க�ொண்டாடப்பட்டு, விழா இனிதே நிறைவு பெற்றது.

- க�ோமதி மாதங்கி

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்பு குழந்தை

மற்றும், கதை மூலம் எடுத்து உரைத்தார். திருமதி.மிருணாளினி கல்வியின் அவசியம்

- ஜூலை 2023

40

அதன் மூலம் பெறும் பட்டறிவு பண்பினை ஆணித்தரமாக பதிவு செய்தார். பண்பே ஒரு குழந்தையை செம்மைப்படுத்தும் என்பதை குழந்தை வளர்ப்பின் படிநிலைகள் எங்ஙனம் குழந்தைகளை நெறிப்படுத்தும் என்று திருமதி.செல்லம்மாள் நரசிம்மன்

வலியுறுத்தினார். அவரை பின்பற்றி

பேசிய திருமதி.விஜி வேலாயுதம் பிள்ளைகளால் பெற்றவர்கள் பெறும் அருமை பெருமைகளை

முப்பெரும் நிகழ்ச்சி 

வளர்ப்பு என்பது அறிவாற்றல் உடையவராக வளர்த்தல் பற்றி திருமதி.மேனகா பாரதியார் பாடல்

னைவருக்கும் வணக்கம்,

வேளாண் குடிகளின் நித்திரை

இருள் கலைய, வேளாண் த�ொழிலில் முத்திரையை பதிக்கும் மாதமாம் சித்திரை மாதத்தை வரவேற்கும் விதத்தில் நம்முடைய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சித்திரைத் திருநாள் வாழ்த்துகளையும், நம்முடைய இஸ்லாமிய சக�ோதரர்களுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துகளையும், மேலும்


பேச்சாளர்கள் குழுவில் இணைந்து பேச்சுத் திறனை வளர்த்துக் க�ொள்ள ஆர்வம் க�ொண்டுள்ள பேச்சாளர்களுக்கு வாழ்த்துகளையும் ச�ொல்லி பேச்சாளர்கள் குழு துவங்கும் ந�ோக்கத்தில் இம்மூன்று நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து முத்தாய்ப்பாய் முப்பெரும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பெருமதிப்பிற்குரிய நகைச்சுவை நாவலர் அய்யா புலவர்

சிறப்பு விருந்தினர் அறிவுரையும்,

மா. இராமலிங்கம் அவர்கள் சிறப்பு

ஆல�ோசனையும் கூறி பேச்சாளர்கள்

விருந்தினராக வருகைத் தந்து அவருக்கே

குழு இனிதே த�ொடங்கப்பட்டது.

உரிய நகைச்சுவைப் பாணியில்

நம்முடைய தமிழ்ச் சங்கம்

இந்நிகழ்ச்சியை கண்டுக் களித்த

இம்மூன்று நிகழ்ச்சிகளையும்

அனைவருக்கும் நகைச்சுவை விருந்தைப்

முன்னெடுத்த வேளையில் தமிழ்ச்

படைத்தார். முதலில் “சித்திரையில் சிரித்து வாழ்க” என்ற தலைப்பில் புலவர் மா. இராமலிங்கம் அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவைக் கதைகளுடன் உலகெங்கும் பரவி வாழும் நம்முடைய தமிழ்ச் ச�ொந்தங்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை வழங்கினார். அடுத்து நம்முடைய இஸ்லாமிய சக�ோதரர்களுக்கு “ஈகைத் திருநாள் இனிதே வாழ்க” என்ற தலைப்பில் ஈகைத் திருநாள் வாழ்த்துரை வழங்கினார். மூன்றாவதாக நம்முடைய பேச்சாளர்கள் அறிமுக உரையாற்ற அதற்கு

சங்கத்தின் செயலாளர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க,

துணைத் தலைவர்

வரவேற்புரை வழங்க, செயற்குழு தலைவர் உரையாற்ற, சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியை முன்னெடுக்க இறுதியாக செயற்குழு உறுப்பினர் நன்றியுரை வழங்க இனிதே நிகழ்ச்சி முடிவடைந்தது. உலகெங்கும் வாழும் தமிழ் ச�ொந்தங்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தார்கள். நன்றி!

- சி. திருமலைஞானம்



MDOT Adopt Highway – Litter cleanup

41 - ஜூலை 2023

ப்ரல் 30-ஆம் தேதி அன்று செயற்குழு உறுப்பினர்கள், இளைய�ோர் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து Woodward Avenue - 8 mile சாலையின் ஓரத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்தார்கள். மழை பெய்தப�ோதும் தங்கள் கடமையை ஆற்றிய நம் குழுவினருக்கு பாராட்டுகள். கடந்த பத்து வருடங்களாக தன்னார்வலர் திரு. சரவணன் ப�ொன்னைய்யா அவர்கள் இந்த ஒருங்கிணைப்பைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சார்பாக திரு. சரவணன் அவர்களுக்கு இந்த தன்னார்வப் பணிக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிற�ோம். இந்த வருடத்திலிருந்து இந்தப் பணியை நான் த�ொடரவுள்ளேன். - ஆனந்தகுமார்


- ஜூலை 2023

42


ம் யு ை தவள ம் எருது

பிடித்த கதாபாத்திரம்: எனக்கு

பிடித்த கதாபாத்திரம் தவளை ஏனென்றால் அது எப்போதும் தான் பெரியவன் என்று தன்னைத்தானே நினைத்துக் க�ொண்டது அதன் தன்னம்பிக்கை எனக்குப் பிடித்தது

நீதி: நம் பலம் பலவீனம் தெரிந்து பிறகு எதிரிகளிடம் ம�ோத வேண்டும்.

- சஞ்சித் விஜய்குமார்

வகுப்பு 6, ஃபார்மிங்டன் தமிழ்ப்பள்ளி

க�ோப் எருமைகளின் ஆ

ஒற்றுமை!

ப்பிரிக்காவில் அடர்ந்த சவானா காட்டில் ஒரு க�ோப் எருமை கூட்டம் வாழ்ந்து வந்தது. அதன் க�ொம்புகள் மிகவும் பலமானது. அதன் எடை 300 முதல் 835 கில�ோ வரை இருக்கும். அதன் வாழ்நாள் 15 முதல் 25 வருடங்களே. அதன் உயரம் 3.3 முதல் 5.6 அடி இருக்கும். ஒரு நாள் நீர் நிலையில் தண்ணீர் பருகிக்கொண்டு இருந்த எருமையை சிங்கம் வேட்டையாட நினைத்தது. சிங்கம் அதன் மேல் பாய்ந்தது. அதைப் பார்த்த அனைத்து க�ோப் எருமைகளும் அதன் க�ொம்புகளால் முட்டி சிங்கத்தை பந்தாடி விரட்டின.

நீதி: ஒற்றுமையே

வலிமை.

- ஆதர்ஷ் யுவராஜ்,

வகுப்பு 4B, ஃபார்மிங்டன் தமிழ்ப்பள்ளி

43 - ஜூலை 2023

கதை: ஒரு காட்டிற்கு பக்கத்தில் குட்டை ஒன்று இருந்தது. அந்தக் குட்டையில் பல தவளைகள் வாழ்ந்தன. ஆனால் மற்ற விலங்குகள் அடிக்கடி குட்டைக்கு வராமல் இருப்பதால் மற்ற விலங்குகள் இருப்பதே தவளைகளுக்கு தெரியாது. அக்குட்டையில் ஒரு பெரிய மற்றும் கம்பீரமான தவளை ஒன்று அங்கு இருந்தது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, அது தன்னை பெரிதாக காட்ட விரும்பும். ஒரு நாள் குட்டைக்கு வந்த எருதை பார்த்த தட்டான்கள் தவளையிடம் சென்று, எருதிடம் தன் பலத்தை காட்டும்படி வம்பு இழுத்தது. எனவே கம்பீரமான தவளை எருது முன் சென்று சத்தம் எழுப்பியது. ஆனால் அந்த எருது, இந்த தவளையை ஒரு ப�ொருட்டாகவே பார்க்கவில்லை. அதனால் க�ோபமடைந்து தவளையை டப்புன்னு பெரிய சத்தம் உருவாக்க வாயை பலூன் மாதிரி ஊதி சத்தம் க�ொடுத்தது ஆனால் அது எருது காதுகளுக்கு கேட்க்கவில்லை. இன்னுமும் பலமாக சத்தம் எழுப்ப அது தன் வாயை குவித்து ஊதியது, ஊதி ஊதி ஒரு கட்டத்தில் அது உடம்பு வெடித்து தவளை இறந்து விட்டது.


நான் விரும்பும் தலைவர்

கவிப்பிரியா ஆனந்த்

வகுப்பு 7, ஃபார்மிங்டன் தமிழ்ப்பள்ளி

குழந்தை பருவம்

சிறுவயதில் வேலுநாச்சியாருக்குத் தெரிந்த ஒரே மூன்று எழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே வாள் வீச்சு, கத்தி வீச்சு, வில்வித்தை, ஈட்டி எறிதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என்று ப�ோர்ப் பயிற்சிகளை ஆர்வமாக கற்றுக் க�ொண்டார். படிப்பிலும் மிகுந்த ஆர்வம் க�ொண்டவர். தாய்மொழி தமிழ் மட்டும் அல்லாது ஏழு ம�ொழிகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டார்.

வீர வரலாறு

ரத்தத்தில் ஊறிய துணிவுடனும் தைரியத்துடனும் வளர்ந்த வேலு நாச்சியார் பருவ வயதில் சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதரை திருமணம் செய்து க�ொண்டார். பட்டத்து ராணி ஆன வேலுநாச்சியாருக்கு ஒரு அழகான மகள் பிறந்தாள் அவளது பெயர் வெள்ளை நாச்சியார் வேலுநாச்சியாரும் முத்து வடுகநாதரும் சிவகங்கையை நல்லாட்சி செய்து வந்தனர்.

வீரமங்கை

வேலு நாச்சியார் புணரி நீராடி முளரி த�ோல் த�ொடுத்து களரி வதம் புரிய வந்தாள�ோ வளரி படை யாவும் சிதறி ஓட செய்தாள�ோ -என்ற வரிகளுக்கு உயிர் தர தமிழக மண் கண்டெடுத்த புரட்சிப்பெண் ராணி வேலு நாச்சியார்

வரலாறு

- ஜூலை 2023

44

18-ம் நூற்றாண்டில் ப�ோர்க்களத்தில் எதிர்த்து வரும் அனைவரையும் த�ோற்கடித்து இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் ப�ோர் புரிந்த முதல் புரட்சிப் பெண் வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். ராணி வேலு நாச்சியார் என்ற பெயரைக் கேட்டாலே அவரது வீரமும், ப�ோர்க்களத்தில் அவர் கையாளும் விவேகமும் நம் நினைவுக்கு வரும். ராமநாதபுரம் அருகில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் வேலு நாச்சியார் பிறந்தார்.

முத்து வடுகநாதர் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து நடக்கவில்லை, ஆற்காடு நவாப்புக்கு கப்பம் கட்டவில்லை. அதனால் க�ோபம் க�ொண்ட அவர்கள் காளையார் க�ோவிலுக்குச் சென்ற அவரை நவீன ஆயுதங்கள் க�ொண்டு தாக்கிக் க�ொன்றனர். இதை அறிந்த வேலு நாச்சியார் அவரது குழந்தையுடன் காளையர் க�ோவிலுக்கு சென்றார் அவரையும் க�ொல்ல நினைத்தனர். அப்படைகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் கணவரைக் க�ொன்ற அவர்களை பழிவாங்க நினைத்து அங்கிருந்து தப்பித்து வேலூர் வழியாக திண்டுக்கல் சென்றார். அங்கு ஹைதர் அலியிடம் ஆங்கிலேயரை எதிர்த்துப் ப�ோர் புரிய படை உதவி கேட்டார். பிறகு அங்கிருந்து படைகளைத் திரட்டினார். 1780-ஆம் ஆண்டு தனது படையுடன் சிவகங்கை சென்றார். ப�ோர் புரிந்து. தன் கணவரைக் க�ொன்ற ஆங்கிலேயரை க�ொன்றார். சிவகங்கையின் அரசி ஆனார். “தடைகள் என்பது உண்மையில் நம்மை தடுப்பது அல்ல” நாம் தடுமாறாமல் இருக்கிற�ோமா என்று நமது மனஉறுதியை ச�ோதித்துப் பார்க்கும் அளவுக�ோல். கணவரையும் நாட்டையும் இழந்து விட்டோம் என்று துவண்டு விடாமல், வரலாற்றை மாற்றிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள். நன்றி! வணக்கம்.


எனக்குப் பிடித்த இடம்

கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக்

னக்குப் பிடித்த இடம் நான் சென்றதில் மறக்க முடியாத இடம் கிராண்ட் கேன்யன் ஸ்கை வாக். (Grand Canyon Skywalk) இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை என்னால வார்த்தையால் ச�ொல்ல முடியாத காரணங்களில் ஒன்று நீங்கள் ஸ்கை வாக்கில் கண்ணாடி பாலத்தில் செல்லும்போது பாலத்தின் கீழே இருக்கும்போது கிராண்ட் கேன்யன் முழுமையாகப் காணலாம். கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக் கழுகு புள்ளியில் அமைந்துள்ளது. இந்த இடம் கழுகு புள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், கண்ணாடிப் பாலத்திலிருந்து இணைக்கப்பட்ட பாறைகளை பார்க்கும்போது பனி யுகத்தின் வெள்ளத்தினால் பாறைகள் மற்றும் அலைகளால் இயற்கையாக உருவான கழுகைப் ப�ோன்ற பாறை அமைப்பை நீங்கள் காணலாம்.

தமிழ்நாடு

- ய�ோசித்தா ஞானசம்பந்தமூர்த்தி, வகுப்பு 5, டிராய் தமிழ்ப்பள்ளி

தென் தமிழ்நாடு நான் தமிழ்நாட்டில் இருந்தப�ோது தஞ்சாவூருக்கு சென்றிருந்தேன். நாங்கள் பிரகதீஸ்வரர் க�ோவிலுக்கு சென்றோம். அந்தக் க�ோவில் 1010 ஆம் ஆண்டு ராஜராஜ ச�ோழனால் கட்டப்பட்டது. நாங்கள் திருச்சி ரங்கம் க�ோவிலுக்கும் சென்றோம். அன்று இரவு காரைக்குடி அருகே உள்ள கட்டியாபட்டி என்ற கிராமத்தில் தங்கின�ோம். அங்கே ஹ�ோட்டலாக மாற்றப்பட்ட பழைய அரண்மனையில் தங்கின�ோம். என் தமிழக பயணம் இனிமையாக இருந்தது. அங்கே நிறைய கற்றுக் க�ொண்டேன்.

- தருண் கிருஷ்ணா,

வகுப்பு 5, கேண்டன் தமிழ்ப்பள்ளி

45 - ஜூலை 2023

ஸ்கைவாக் வேடிக்கையாக இருக்கும் சில சமயங்களில் நீங்கள் அதில் இருக்கும்போது கண்ணாடிப் பாலத்தில் விரிசல் இருப்பதுப�ோல் பாலத்தின் அடியில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ராண்ட் கேனியன்ஸ் கைவாக்ஸ் செல்ல ஒரு அற்புதமான இடம். நீங்கள் ஆராயக் கூடிய பல அழகான இயற்கைக் காட்சிகளைக் க�ொண்டுள்ளது. அதனால்தான் கிராண்ட் கேன்யன் ஸ்கை வாக் நான் சென்றதில் மறக்க முடியாத இடம்.

னது குடும்பம் அங்கு வசிப்பதாலும் நல்ல உணவு கிடைப்பதாலும் எனக்கு தமிழ்நாடு பிடிக்கும். குளிர்கால விடுமுறையின்போது நான், என் அம்மா, என் அப்பா மற்றும் என் தம்பி தமிழ்நாட்டுக்குச் சென்றோம். நான் தமிழகம் வந்தப�ோது க�ோயம்புத்தூரில் இருந்தேன். நான் க�ோயம்புத்தூரில் இருந்தப�ோது எனது பெரும்பாலான நேரத்தை என் அம்மம்மா வீட்டிலும், என் பாட்டி வீட்டிலும் தான் கழித்தேன். மேலும் பல உறவினர்களையும் சந்தித்தேன். நாங்கள் க�ோயம்புத்தூரில் இருந்த காலத்தில் ப�ொங்கல் விழா க�ொண்டாடப்பட்டது. ப�ொங்கல் நாளில் கரும்பு சாப்பிட்டோம், ப�ொங்கல் செய்தோம்.


தி ட்டப்ப ணி க ள்

- பிரணவ் முருகன்

- புவனேஷ் சண்முகவேலு

- ஜூலை 2023

46

- ஹவிஷா முத்துக்குமார்


- தர்ஷிகா பிரதாப்

- ஹனித்திகா சுரேஷ் - ஷனன் செல்வராஜ்

- சித்தார்த் கார்த்திகேயன்

- ரிஷிகா பிரதாப்

47 - ஜூலை 2023

- மகிழினி ரஞ்சித்

- சாக்‌ஷிதா ராஜசேகர்


- ரூவண்யா கார்த்திக்குமார்

- டிராய் மழலையர்

-சஞ்சனா ராஜபிரகாஷ்

- ஜூலை 2023

48

- தமிழ் இனியன் அருள்


- கவின் கெளரிசங்கர்

- அமுருஷா முருகேசன்

- தீர்த்தா பிரசன்னா

- சஞ்சனா ரமேஷ்

- ஜூலை 2023

49

- தமிழ் இன்பன் அருள்

- கல்கி ரெங்கா அனந்த நாராயணன்


இவர்கள் சந்தித்தால்..! 2023 ஆண்டு கதம்பம் - மாணவர்களுக்கான கட்டுரைப் ப�ோட்டியில் க�ொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் ஒன்று “இவர்கள் சந்தித்தால்". இந்தத் தலைப்புக்கு பல சுவாரஸ்யமான கட்டுரைகள் கிடைக்கப் பெற்றன. அவற்றுள் சில இதழாசிரியர் தேர்வாக உங்கள் வாசிப்புக்காக.

வ்விருவரும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள். இருவரும் நாட்டு மக்களுக்காக பல்வேறு ப�ோராட்டங்களை அறவழியில் நடத்தி வெற்றி கண்டவர்கள்.

காந்தி

அத்தகைய சிறப்பு பெற்ற இருவரும், சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் இருவரின் உரையாடல் பின்வருமாறு இருக்கும். எனது கற்பனையில்... காந்தி: வணக்கம் மார்ட்டின்! மார்ட்டின்: வணக்கம் காந்தி! உங்கள் அகிம்சை தத்துவத்தை நான் வெகு காலமாக ப�ோற்றுகிறேன். காந்தி: நன்றி மார்ட்டின். ஆம். அகிம்சை என்பது ஒரு வாழ்க்கை முறை. இது எதிர்ப்பின் மிக உயர்ந்த வடிவமாகும். அன்பு மற்றும் இரக்கத்தின் சக்தி. மார்ட்டின்: ஒப்புக்கொள்கிறேன், காந்தி! உங்களின் அகிம்சை முறை ப�ோராட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. காந்தி: ஆம்! நானும், நீங்கள் மக்களின் சமத்துவத்திற்காக ப�ோராடுவதை ஆதரிக்கிறேன். சமத்துவம் என்பது மனிதனின் சாராம்சம், கண்ணியம் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிராக ப�ோராடுவது நமது கடமை. மார்ட்டின்: ஆம். அதனால் தான், அமெரிக்காவில் பிரிவினை மற்றும் இனவெறியை முடிவிற்கு க�ொண்டு வர விரும்புகிறேன். உங்களின் க�ொள்கைகளான அகிம்சை மற்றும் கீழ்படியாமையை பின்பற்றுகிறேன். காந்தி: நல்லது மார்ட்டின். அனைத்து மக்களுக்கான சிறந்த உலகத்தை உருவாக்க த�ொடர்ந்து பணிபுரிவ�ோம்! மார்ட்டின்: உங்கள் ஞானத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி மகாத்மா!

- மிதுன் நந்தக்குமார்

காந்தி

இவர்கள்

சந்தித்தால் பைடன்: வணக்கம்! மகாத்மா காந்தி.

காந்தி: ஹாய்! ஜ�ோ பைடன். பைடன்: எப்படி இருக்கிறீர்கள்? காந்தி: நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? பைடன்: நானும் நன்றாக இருக்கிறேன், நன்றி. எனக்கு ஒரு கேள்வி.

50 - ஜூலை 2023

பைடன்

மார்டின் லூதர் கிங்

சந்தித்தால்

இவர்கள்

உங்களால் எப்படி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தர முடிந்தது? அது மிகவும் கடினமாக இருந்திருக்கும், இல்லையா? காந்தி: ஆமாம், அது மிகவும் கடினமாக தான் இருந்தது. ஆனால் நிறைய அமைதியான எதிர்ப்புகள்,


விடாமுயற்சி ஆகியவற்றால் இறுதியில் எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. பைடன்: அது மிகவும் அருமை. வழியில் பல சவால்கள் இருந்தப�ோதிலும் நீங்கள் எப்படி த�ொடர்ந்து ப�ோராடினீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக அந்த அலுவலகத்தில் பணிபுரிந்ததாக கேள்விப்பட்டேன், அது உண்மையா?

இவர்கள்

சந்தித்தால் கா

பைடன்: ஆமாம், நான் முதலில் ஜனவரி 20, 2009 முதல் ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் 47-வது துணை ஜனாதிபதியாக இருந்தேன். அதன் பிறகு ட�ொனால்ட் டிரம்ப் 4 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். பிறகு அவரை எதிர்த்துப் ப�ோட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

லையில் ஒரு ஆறு மணி இருக்கும்,சேவல், க�ொக்கரக்கோ என கூவியது. அதைக் கேட்டு எழுந்த வடிவேலு அவர் அறையின் கதவை திறந்தார். உலகத்தின் மறு பக்கத்தில் பணியை முடித்து வீடு திரும்பிய ட்ரெவர் ந�ோவா, தனது வீட்டுக் கதவை திறந்தார்.

பின்னர் 2021ல் ஜனவரி 20 அன்று எனது பதவி ஏற்பு விழாவில் 46வது ஜனாதிபதி ஆனேன்.

ட�ொய்ங், இருவரும் கதவை திறந்ததும் மாய உலகத்திற்கு சென்று விட்டனர்.

காந்தி: அது மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் உங்களது கடின உழைப்பால் முதலில் துணை ஜனாதிபதி ஆனீர்கள். பிறகு ஜனாதிபதி ஆனீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பைடன்: நீங்கள் வரலாற்றில் முக்கியமானவர். உங்களை சந்தித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. காந்தி: எனக்கும் உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்களும் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்க எனது வாழ்த்துக்கள் பைடன்: நன்றி, கவனித்துக் க�ொள்ளுங்கள். வருகிறேன். காந்தி: மிகவும் நன்றி. விடைபெறுகிறேன்.

- நிஷிகா கல்யாணசுந்தரம்

ஆச்சரியம் அடைந்த இருவரும் திரும்பி பார்த்து திகைத்தனர். “யாருடா நீ?” என்று இருவரும் ஒரே சமயத்தில் கூவினர். ட்ரெவர் ந�ோவா, தான் ஒரு தென்னாப்பிரிக்க நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் அரசியல் விமர்சகர், நடிகர் மற்றும் முன்னாள் த�ொலைக்காட்சி த�ொகுப்பாளர் என்று விளக்கினார்.மேலும் தான் netflixஇல், ஒரு த�ொடரை நடத்தியுள்ளதையும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளதையும் பற்றி பேசினார். அவர் விளக்கம் அளித்த பிறகு, வடிவேலு தானும் ஒரு நகைச்சுவை நடிகர் என்று கூறினார். பின்னணி பாடகராக பணியாற்றி வரும் இவர், பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ட்ரெவர், வடிவேலு ஒரு இந்திய நகைச்சுவை நடிகர் என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். “எனக்கு தீசன் என்று ஒரு நண்பர் இருக்கிறார்“, அவரும் இந்தியரே என்றார். ட்ரெவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் மற்றும் வடிவேலு இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் வெவ்வேறு பின்னணியைப் பற்றி விவாதித்தனர். இரு நாடுகளிலும் உள்ள வெவ்வேறு உணவு வகைகளை பற்றி அவர்கள் பெரும்பாலும் விவாதித்தனர். தென்னாப்பிரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்பதை அறிந்த வடிவேலும் ஆச்சரியமடைந்தார். அப்போது “படார்” என சத்தம் கேட்டது. இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்தனர்.

- பவிஷா சந்தோஷ்குமார்

51 - ஜூலை 2023

காந்தி: எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. நீங்கள் எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனீர்கள்?

வடிவேலு ட்ரெவர் ந�ோவா


ரு நாள் எலான் மஸ்க் தனது அலுவலகத்தில் புதிய எலக்ட்ரிக் கார் வடிவமைப்பில் வேலை செய்து க�ொண்டிருந்தார். திடீரென்று யார�ோ அவரது கதவைத் தட்ட, மஸ்க் ஆச்சரியத்துடன் பார்த்தார். “உள்ளே வா” என்றார் மஸ்க்.

ஃப�ோர்ட் ம�ோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃப�ோர்டு அவர் முன் நின்று க�ொண்டிருந்தார். ‘அட என்ன ஆச்சரியம்? ஹென்றி ஃப�ோர்டு! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்’ என்று மஸ்க் கேட்டார். ‘வணக்கம். உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்றார் ஃப�ோர்ட். எலான் மஸ்க் நம்பாமல் தலையை ஆட்டினார். அவர் வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபரின் முன் நின்று க�ொண்டிருந்தார். “சரி ஹென்றி ஃப�ோர்டு, இப்போது நீங்கள் இங்கே இருப்பதால் உங்களைப் பற்றி ச�ொல்லுங்கள்!” “சரி எலான் மஸ்க்!”, ஹென்றி ஃப�ோர்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தனது பேச்சைத் த�ொடங்கினார். எலான் மஸ்க் கவனமாக கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தார். ‘நான் விடாமுயற்சியுள்ள மனிதனாக இருந்தேன். எனது கார்களை உருவாக்க பல சவால்களை சந்தித்தேன். நான் இறுதியாக ஜூன் 16 1903-ல் ஃப�ோர்டு நிறுவனத்தை த�ொடங்கினேன். என்னால் கார் துறையின் எதிர்காலம் முற்றிலும் மாறியது. நான் அசம்பிளி லைன் மற்றும் மாஸ் புர�ொடக்ஷன் ப�ோன்றவறைக் கண்டுபிடித்தேன். இதன் விளைவாக மிஷின்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு கார் தயாரிக்கப்படுகிறது. இப்போது அமெரிக்காவில் உள்ள அனைத்து கார்களிலும் 19% மிச்சிகன் இருந்து வந்தவை தான். உங்கள் கார்களுக்கு, நீங்கள் எனக்கு நன்றி ச�ொல்லலாம்’.

- ஜூலை 2023

52

“நீங்கள் உண்மையிலேயே புத்திசாலித்தனமான மனிதர் தான்!” என்றார் எலான். “நீ என்ன சாதித்தாய் எலான் மாஸ்க்?” என்று கேட்டார் ஹென்றி ஃப�ோர்டு. “சமீப காலங்களில், கார்கள் வளிமண்டலத்தில் நிறைய ஆபத்தான வாயுக்களை வெளியிடுகின்றன. இது காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சிக்கலை சமாளிக்க, நான் 2008-ல் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியானேன். இங்கு

ஃப�ோர்டு றி ன் ஹெ

இவர்கள்

எலான் மஸ்க்

விலை உயர்ந்த உடையுடன் ஒரு உயரமான மனிதர் உள்ளே நுழைந்தார். எலான் மஸ்க் ஆச்சரியமடைந்தார்!

சந்தித்தால் வ

ணக்கம்! நான் ஹிட்லரும் கிம் ஜங் உன்னும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று பேசப் ப�ோகிறேன். ஹிட்லர் 1933 முதல் 1945 வரை ஜெர்மனியின் அதிபராக இருந்தார். அவர் ஐர�ோப்பா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியதால்தான் இரண்டாம் உலகப் ப�ோர் நடைபெற்றது.

கிம் ஜங் உன் 2011-ல் வடக�ொரியாவின் அதிபர் ஆனார். இன்று உலக அரசியலில் வடக�ொரியா ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. வடக�ொரியாவில் ஏதேனும் குற்றங்களை செய்தால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். வடக�ொரியா அணு ஆயுதங்களை உருவாக்கும் நாடும் கூட. இவர்கள் இரண்டு பேரும் க�ொடூரமான தலைவர்கள் தான். இருவரும் சந்தித்தால் பல விஷயங்களில் உடன்படுவார்கள் அதேப�ோல் உடன்படவும் மாட்டார்கள். ஹிட்லர் யூதர்களை குறைப்பதை பற்றி பேசும்பொழுது கிம் ஜங் உன் ஊனமுற்றவர்களை குறைப்பது பற்றி பேசுவார். ஹிட்லரின் ராணுவத்தால் பிடிபடும் யூதர்கள் ஜெர்மனியில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். வடக�ொரியாவில் கீழ்ப்படியாதவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.


SpaceX மற்றும் PayPal ப�ோன்ற எனது மற்ற கண்டுபிடிப்புகளாலும் நான் இப்போது உலகத்தின் மிகப்பெரிய பணக்காரனாக ஆகியுள்ளேன்”.

“எலான் மஸ்க், நீங்கள் எதிர்கால மனிதன் என்று கேள்விப்பட்டேன். உங்கள் நிறுவனம் 2040-க்குள் மின்சாரக் கார்கள் தயாரிப்பைக் கையகப்படுத்தும் என்கிறார்களே, இதை எப்படிச் செய்தீர்கள்?” “நன்றி ஹென்றி ஃப�ோர்டு. நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன் உங்களைப் ப�ோலவே எனது நிறுவனமும் கிட்டத்தட்ட திவால் ஆகிவிட்டது. பின் விடாமுயற்சிய�ோடு உழைத்துக்கொண்டிருக்கிறேன்.” “ஆஹா நமக்குள் நிறைய விஷயங்கள் ப�ொதுவானதாக உள்ளதே! இப்போது ச�ொல்லுங்கள்... உங்கள் டெஸ்லா காரின் சிறப்பு என்ன?”

ர் அடால்ஃப் ஹிட்ல

எனது கார்கள் அனைத்தும் பேட்டரியில் செயல்படுபவை. அவை தாங்களாகவே ஓட்டவும்

ள் ்க வர இ ல் த்தா தி சந்

இவர்கள் சந்திப்பில், ஐர�ோப்பாவை கைப்பற்ற ஹிட்லர், கிம் ஜங் உன்னிடம் உதவி கேட்பார். வடக�ொரியாவின் அணு ஆயுதங்கள் ஜெர்மனியின் ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அவை இருந்தால் ஹிட்லரால் ஐர�ோப்பாவை வேகமாக கைப்பற்றியிருக்க முடியும். கிம் ஜங் உன்னும், ஹிட்லரும் சந்தித்து திட்டமிட்டால்... இந்த உலகமே எரிந்து அழிந்து விடும். அவர்களின் சக்தி மற்றும் ஆதரவின் காரணமாக அவர்கள் விரும்பிய எதையும் செய்திருக்க முடியும். வடக�ொரியா அணு ஆயுதங்களைக் க�ொடுக்க மறுத்திருந்தால், வடக�ொரியாவுக்கு எதிராக ஜெர்மனி ப�ோரை அறிவிக்கும். அந்த நேரத்தில் ஜெர்மனி உலகில் உள்ள வலிமையான ராணுவத்தை வைத்துக் க�ொண்டிருந்தது.

எனது முதல் கார் குவாட்டர் சைக்கிள் என்று அழைக்கப்பட்டது. அது எரிவாயு மூலம் இயங்கும் என்ஜினில் நான்கு சைக்கிள் சக்கரங்களைக் க�ொண்டு தயாரிக்கப்பட்டவை. நல்லது. நான் இன்று காலை எழுந்து, 2023-ற்கு வந்துவிட்டேன் ப�ோல! ஆனால், இப்போது நான் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் இந்த கிரகத்திற்கு நல்ல விஷயங்களை செய்து க�ொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!” எலான் மஸ்க், எதையும் ச�ொல்வதற்கு முன் ஹென்றி ஃப�ோர்ட் ஏற்கனவே வெளியேறிவிட்டார். இன்னும் ஆச்சரியத்துடன் என்ன நடந்தது என்று ய�ோசிக்க உட்கார்ந்தார்! ஆஹா! என்ன ஒரு நாள்!

- பிரவீணா மாதேஸ்வரன்

வடக�ொரியா தனது குடிமக்களிடம்தான் ம�ோசமாக நடந்து க�ொள்கிறது. ஆனால் ஜெர்மனியால் உலகில் எந்த நாட்டையும் வெல்ல முடியும். கிம் ஜங் உன் உதவி வேண்டுமென்றால் ஹிட்லரிடம் யூதர்களை அடிமையாக பயன்படுத்த கேட்கும். ஹிட்லர் ஒப்புக் க�ொண்டால் அணு ஆயுதங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். வடக�ொரியா மிகவும் வலிமையாக இருக்கும். கிம் ஜங் உன், ஹிட்லருக்கு நன்றியாக சில ஆயுதங்களை க�ொடுப்பார். கூட்டணி படையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனியை நிறுத்த மிகவும் கடினமாக இருக்கும். இரண்டாம் உலகப் ப�ோர் நடக்கும் ப�ொழுது ஹிட்லர், கிம் ஜங் உன்னை சந்தித்திருந்தால் நம் வரலாறே வித்தியாசமாக இருந்திருக்கும்! கூட்டணிப்படை ஜெர்மனியை நிறுத்தவில்லை என்றால் ஹிட்லர் உலகப்போரில் வெற்றி பெற்று இந்த உலகத்தை கைப்பற்ற முயற்சி செய்திருப்பார். ஹிட்லர், கிம் ஜங் உன் சந்தித்தால் இதுதான் நடக்கும்!

- தானேஷ்வர் எழிலன்

53 - ஜூலை 2023

பயன்படுத்தும் எஞ்ஜின் கார்கள் தயாரிக்கிறேன். இதனால் பலர் டெஸ்லா கார்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.

முடியும் Autopilot. உங்கள் கார்கள் பற்றி... அதன் ஆரம்பகால சிறப்பு என்ன ஃப�ோர்ட்?

கிம் ஜங் உன்

Combustion என்ஜின்களுக்குப் பதிலாக, பேட்டரிகளைப்


இவர்கள் சந்தித்தால்

முன்னுரை: மகாத்மா காந்தி அவர்களும் - அன்னை தெரசா அவர்களும் சந்தித்தால், அவர்களின் கேள்விகளும் - பதில்களுமே என் கட்டுரையின் ந�ோக்கம். மகாத்மா காந்தி - ம�ோகன் தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் மாநிலத்தில் ப�ோர்பந்தரில் பிறந்தார். அகிம்சை முறையில் இந்திய தேசத்திற்கு விடுதலை வாங்கி தந்தவர் நம் தேசத்தந்தை காந்தி மகான். லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் தென்னாப்பிரிக்காவில் ரயில் பயணத்தின் ப�ோது நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார். பிறகு இந்தியா வந்து ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திரப் ப�ோராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் க�ொண்டார்.

அன்னை தெரசா - "Anjezë Gonxhe Bojaxhiu" அல்பேனியா நாட்டில் பிறந்தார். 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் க�ொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அங்கு வறுமை, க�ொடிய ந�ோயில் வாடும் மக்களைக் கண்டு மனம் இறங்கி சமூக சேவை புரிந்தார். த�ொழுந�ோயாளிகளை த�ொட்டு அவர்களின் காயங்களுக்கு மருத்துவம் புரிந்தார். குப்பையில் வீசப்பட்ட குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்ற மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார். இவர்கள் இருவரின் சந்திப்பு...

அந்த உண்மையை உணர்ந்ததால் பிரிட்டிஷ் ப�ொருட்களை புறக்கணித்தனர். அன்னை தெரசா: நல்ல விஷயம். அழகான யுக்தி. மகாத்மா காந்தி: உங்களின் சேவை மிகப்பெரியது. உங்களால் எப்படி ந�ோயுற்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய முடிந்தது? அன்னை தெரசா: நான் ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் வாழ்கிறார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு ந�ோயாளியை குணப்படுத்தும்போதும், மனவளர்ச்சி இல்லாத மனிதர்களை சந்திக்கும்போதும், குப்பையில் வீசப்பட்ட குழந்தையை வளர்க்கும்போதும், அது கடவுளுக்கு செய்யும் சேவையாக உணர்கிறேன். சரி... நீங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கூறும் செய்தி என்ன?

முடிவுரை: மகாத்மா காந்தி: ஆயுதம் இல்லாமல் சுதந்திரம் பெற்ற நாங்கள் இன்று மகாத்மா காந்தி: வணக்கம் தெரசா அவர்களே, நானும் அமெரிக்க நாட்டில் பள்ளி, வணிக வளாகம் என்று மாணவர்கள், மக்கள் கூடும் இடங்களில் உங்களை சந்திப்பதில் உவகை க�ொள்கிறேன். நீங்கள் துப்பாக்கி சூடு நடைபெறுவது வருத்தம் என்னை காந்தி என்றே அழைக்கலாம். அளிக்கிறது. இளைய தலைமுறையினரே! அன்னை தெரசா: நீங்கள் இந்திய சுதந்திரப் ஆயுதம் என்றுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வு ப�ோராட்டத்தை எப்படி அகிம்சை முறையில் ஆகாது என்பதை மனதில் க�ொள்க. அன்னை வழிநடத்தினீர்கள்? தெரசாவே! நீங்கள் இன்றைய இளைய மகாத்மா காந்தி: எனக்கு வன்முறை என்றுமே தலைமுறைகளுக்கு கூறும் செய்தி என்ன? பிரச்சினைக்கு ஒரு தீர்வு க�ொடுக்காது, என்பதில் ஆழ்ந்த அன்னை தெரசா: என்னுடைய வேண்டுக�ோள் நம்பிக்கை உண்டு. அதனால்தான் இந்தியாவில் அகிம்சை எல்லாம் நம் இளைய தலைமுறையினர் சமூக வழியில் ப�ோராடி சுதந்திரம் பெற்றோம். எண்ணத்துடன் நம் அருகில் வாழும் வயது அன்னை தெரசா: வணக்கம் மகாத்மா காந்தி அவர்களே, உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

- ஜூலை 2023

54

அன்னை தெரசா: அருமையான கருத்து, நீங்கள் எப்படி எல்லா இந்தியர்களையும் பிரிட்டிஷ் ப�ொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தச் ச�ொன்னீர்கள்? மகாத்மா காந்தி: பிரிட்டிஷ் அரசாங்கம், எங்கள் மக்கள் வாங்கும் அவர்களின் ப�ொருட்களில் மீதான வரி மூலமே நடக்கிறது என்பதை அறிந்து. அந்நிய நாட்டுப் ப�ொருட்கள் புறக்கணிப்பு மூலம் அவர்களுக்கு வரும் வருமானம் குறையும். நம் மக்கள்

முதிர்ந்த, மனவளர்ச்சி குன்றிய தீராத ந�ோயுடன் வாழ்வோரை கருணையுடன் அணுக வேண்டும், அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே. மகாத்மா காந்தி: மிகவும் நல்ல வேண்டுக�ோள் மீண்டும் சந்திப்போம். அன்னை தெரசா: நன்றி! கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்.

- ஆனி ஜேம்ஸ்


கலாம்: வணக்கம் எடிசன்! என்னை விட வயதில் மூத்தவர் நீங்கள் தான். அதனால் நீங்களே முதலில் ஆரம்பியுங்கள்.

கலாம்: நன்றி எடிசன்! நீங்களும்தான். உங்களது மற்ற கண்டுபிடுப்புகளையும் பற்றி நீங்களே ச�ொல்லி, கேட்க ஆசைதான். ஆனால் காலம் கருதி நீங்கள் பெற்ற விருதுகளைப் பற்றிச் ச�ொல்லுங்களேன்... எடிசன்: பல விருதுகளைப் பெற்றுள்ளேன். "ஹால் ஆப் பேம்" என்ற உயரிய விருதை பெற்றுள்ளேன். பெற்ற விருதைகளை விட மக்கள் எனது கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது தான் எனக்கு சிறந்த மனநிறைவு. சரி! உங்களைப் பற்றிச் ச�ொல்லுங்கள்!

எடிசன்: நல்ல கேள்வி கலாம்! எனது கண்டுபிடிப்புகளில் மிகவும் பிடித்தது 'மின் விளக்கு' கண்டுபிடிப்புதான். இரவைப் பகலாக்க எண்ணி 1000 முறை த�ோற்று பெருத்த அவமானம் அடைந்து விடாமுயற்சிய�ோடு, மீண்டும் மீண்டும் முயன்று முடிவில் வெற்றி பெற்றேன். அதன் பலனைத்தான் இப்போது எல்லாரும் அனுபவித்துக் க�ொண்டிருக்கிற�ோம். சரி! கலாம்! இப்பொழுது உங்கள் கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்ததை ச�ொல்லுங்கள். கலாம்: நன்றி எடிசன்! எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும்! அவர்களை கடவுளின் வடிவங்களாக பார்க்கிறேன். ப�ோலிய�ோவால் பாதிக்கப்பட்டு வளைந்த கால்கள�ோடு கஷ்டப்படும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட

தாமஸ் ஆல்வா எடிசன்

கலாம்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார் எமது பாட்டனார் கணியன் பூங்குன்றனார். அப்படிய�ொரு பண்பாடுள்ள நாட்டில் தென்கோடியான தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி என்ற ஊரில் பிறந்தேன். ‘தாயிற் சிறந்த க�ோவிலும் இல்லை; தந்தை ச�ொல்மிக்க மந்திரமில்லை' என்பதற்கு எடுத்துக்காட்டு எனது அம்மா, அப்பா. என் குடும்பம்தான் எனது முதல் பள்ளிக்கூடம். மற்ற கல்விகளை பள்ளியில் பயின்றேன். எடிசன்! உங்கள் கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன் அதைப் பிடிக்கும்?

எடிசன்: அருமை! அருமை கலாம்! இந்த இயந்திர வாழ்வில் மனிதாபிமானத்தோடு வாழ்கிறீர்கள்.

அப்துல் கலாம்

எடிசன்: நல்லது! வணக்கம் கலாம். வணக்கம் மக்களே! நான் பிப்ரவரி 11,1847 ஆம் ஆண்டு வட அமெரிக்காவிலுள்ள மிலன் ஓஹிய�ோ என்ற இடத்தில பிறந்தேன். என் அம்மாதான் எனக்கு எனது ஆசிரியர். எனக்கு எழுதப் படிக்க மற்றும் கணக்கு என எல்லா பாடங்களையும் அவரே ச�ொல்லிக் க�ொடுத்தார். நான் எல்லோரையும்போல பள்ளி சென்று கற்றதை விட வீட்டில்தான் அதிகம் கற்றேன். சரி! கலாம்! இப்பொழுது உங்களைப் பற்றி கூறுங்கள்!

இ வ ர் க ள்

செயற்கை கால்களின் கனத்தை பார்த்து மனம் கனத்து ப�ோனேன். இந்த பிஞ்சுகளின் சுமையை குறைக்க எண்ணி இலகுவான செயற்கை கால்களை செய்வதில் முனைப்பு காண்பித்து வெற்றி பெற்றேன். "ஏவுகணை நாயகன்" என்ற பட்டத்தை விட இதையே பெரிதும் விரும்புகிறேன்.

ச ந் தி த் தா ல்

கலாம்: இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது எனக்கு வழங்கப்பட்டது. உண்மை... பிறர் நமது கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதுதான் மகிழ்ச்சி!

எடிசனும் கலாமும் மாணவர்களுக்கு ச�ொல்லும் செய்தி: த�ோல்விகளைக் கண்டு துவண்டு ப�ோகாதீர்கள். விடாமுயற்சிய�ோடு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவீர்கள். சுயநலம் இல்லாமல் பிறர் நலனைப் பற்றி சிந்திக்கும்பொழுது இந்த உலகத்திற்காக பல நன்மைகளை நம்மால் செய்ய முடியும். முக்கியமாக மனிதநேயத்தோடு வாழ வேண்டும். முடிவுரை: எடிசனும், கலாமும் நமது முன் மாதிரிகள். அவர்களது கண்டுபிடிப்புகள் நமது பயன்பாட்டில் உள்ளன. கலாமின் பிறந்த நாள் 'உலக மாணவர் தினம்' ஆகக் க�ொண்டாடப்படுகிறது. “த�ோன்றிற் புகழ�ோடு த�ோன்றுக அஃதிலார் த�ோன்றலின் த�ோன்றாமை நன்று” -என்ற வள்ளுவரின் ச�ொற்படி வாழ்வோம். நன்றி! வணக்கம்!

- மதுநிகா ராமநாதன்.

55 - ஜூலை 2023

முன்னுரை: இந்தியாவில் பிறந்த எ.பி.ஜே. அப்துல் கலாமும், அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசனும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.


- ஜூலை 2023

56


ல் தா ் த தி ந் ச இவர்கள் யிரத்தி நூற்றாம் ஆண்டில் வாழ்ந்த வில்லியம் ஷேக்ஸ்பியரும் தற்போதைய காலத்திலிருக்கும் ஜே.கே.ர�ோலிங்கும் சந்தித்தால் எப்படி பேசி க�ொள்வார்கள் என்பதே என் கற்பனை கட்டுரையாகும். இவர்கள் சந்திக்கிறார்கள் "வணக்கம் ர�ோலிங். உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை இந்த கதைகள் எழுத தூண்டியது எது?" என்றார் ஷேக்ஸ்பியர். "வணக்கம் ஷேக்ஸ்பியர்! உங்களை ப�ோன்ற பெரும் கவிஞரை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. நான் கற்பனை, மந்திரம், புனைகதைகள், நட்பு சார்ந்த, குழந்தைகள் ஆர்வமிக்க கதைகள் எழுதுகிறேன். மிகவும் தந்திரங்கள் நிறைந்த காட்சிகள் புனைவது எனக்கு மிகவும் பிடிக்கும்" ர�ோலிங் பதிலளித்தார். "நான் இலக்கியம், காதல், மர்மம், இறப்பு, சமூகம் ப�ோன்ற தலைப்புகளில் மிகவும் அருமையாக எல்லா வயதினரும் படிக்கும் கதைகள் எழுதுவேன்" என்றார். "உங்களின் கதைகளால், மக்கள் எந்த வித மாற்றம் அடைந்தார்கள்?" ர�ோலிங் கேட்டார். "நான் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அவர்கள் பயன்படுத்தும் ச�ொற்களையும் எளிதில் புரிந்து க�ொள்ள கூடிய, தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களையும் என் எழுத்து மூலம் சென்றடைய விரும்பினேன். எளிய ஆங்கில ச�ொற்றொடர்களை பயன்படுத்தினேன். அதனால் மக்கள் என் புத்தகங்கள் படிப்பதை விரும்பினார்கள்" என்றார் ஷேக்ஸ்பியர். “நான், என் புத்தகங்களுக்குள் குழந்தைகளை ஒரு பாத்திரமாகவே க�ொண்டு சென்று விடுவேன். அவர்கள் அதில் வாழும்படி

செய்வதால் அவர்கள் எதை விரும்புகிறார்கள�ோ அதை விடாமுயற்சியாக செய்யும்படி வலியுறுத்துவேன்" என்றார் ர�ோலிங். "நான் ஒரு கட்டத்தில், எதை பற்றி எழுதுவது என்ற முயற்சி ப�ோய் விட்டது. அதற்கு பிறகு நான் திரும்பவும் எழுதுவதை ஆரம்பித்தேன்" என்றார் ஷேக்ஸ்பியர். “ஓ! அப்படியா? எனக்கு நான் எழுத ஆரம்பிக்கும் ப�ோது என்னை பற்றி எவருக்கும் தெரியாது. ஒரு ஐந்து பேர் மட்டும் நான் எழுதுவதை படித்தார்கள். பின்பு, நான் த�ொடர்ந்து முயற்சித்தேன். படிப்படியாக என் புத்தகங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தன. என் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் எனக்கு உறுதுணையாக இருந்து, வெற்றி க�ொடுத்தது" என்றார் ர�ோலிங். "உங்களின் பிரபலமான புத்தகத்தை படிக்க நான் விரும்புகிறேன்" என்றார் ஷேக்ஸ்பியர். "சரி இந்தாருங்கள்! 'ஹாரி பாட்டர்' புத்தகம்" என்றார் ர�ோலிங். "மிக்க நன்றி ர�ோலிங்! இந்தாருங்கள் என்னுடைய 'ர�ோமிய�ோ ஜூலியட்' நாவல் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் ஷேக்ஸ்பியர். கடந்த காலத்திற்கும், இந்த காலத்திற்கும் இருக்கும் புத்தகங்களின் மாற்றத்தை அறிந்தது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மக்களின் மாற்றம் மிகவும் வியப்பாக இருக்கிறது. எக்காலத்திலும் "புத்தகம் ஒரு நல்ல நண்பன்" அவை நம் சமூகத்தை பிரதிபலிக்கின்றன.

- கனிஷா ஜெயவேலு

57 - ஜூலை 2023


பேசும் ப�ொற்சித்திரமே!

ஆத்ரிகா விஷ்ணுகுமார்,

கேண்டன்

கைவண்  ணம்

எங்கள்

அஸ்வின் பாஸ்கர், ந�ோவை

- ஜூலை 2023

58

வேதா விஜய்ராஜ்,

ந�ோவை

அக் ஷதா முருகன், ந�ோவை


நிகிதா கார்த்திகேயன், ந�ோவை தான்யா ஆனந்தா,

ரேஷ்மா ஹரிகிருஷ்ணன், கேண்டன்

கேண்டன்

வருண் கிருஷ்ணா,

டிராய்

- ஜூலை 2023

59

தான்யா ஹரிகிருஷ்ணன், கேண்டன்

ராகவ் விஜய்ராஜ், ந�ோவை


புத்தகம் எனக்குப் பிடித்த

இருவர் கண்ட ஒரே கனவு

ஆசிரியர்: கு. அழகிரிசாமி கதைச்சுருக்கம்: வெள்ளையம்மாவும் இரண்டு பிள்ளைகளும் முதலாளியின் மாட்டுத் த�ொழுவத்தில் வசித்தார்கள். வெள்ளையம்மாவுக்கு குளிர் காய்ச்சல் அதனால் கூலி வேலைக்கு ப�ோகவில்லை பசியால் வாடிய சிறுவர்கள் வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்தார்கள். அதைப் பார்த்த பக்கத்து வீட்டு வேலப்பன் உணவு க�ொடுத்தான். அவன் முதலாளியின் வீட்டில் வேலை செய்பவன். உணவை தம்பி வாங்கினான் ஆனால் அண்ணன�ோ “அம்மா பிறரிடம் உணவு வாங்க கூடாது என்று ச�ொன்னார், அதனால் சாப்பிடாதே” என்றான். இருவரும் சண்டை ப�ோட்டதால் உணவு சிதறி விட்டது. இருவரும் அம்மாவிடம் ஓடினார்கள், அவர்கள் அம்மாவை எழுப்பினார்கள். அம்மா எழுந்திருக்கவில்லை. இறந்த அம்மாவை தகனம் செய்ய அருகில் உள்ள மனிதர்கள் வந்தார்கள். ஒரு முதியவர் அம்மாவுக்கு உடுத்த ஒரு புது சேலை தர்மமாக க�ொடுத்தார். புது சேலையை பார்த்து குழந்தைகள் மகிழ்ந்தார்கள் அடுத்த ந�ொடியே அம்மா இறந்ததை நினைத்து அழுதார்கள். வேலப்பன் குழந்தைகளை அழைத்துச் சென்றான். அவன் அவர்களுக்கு உணவு தந்து படுக்க பாயும், ப�ோர்த்திக் க�ொள்ள வேஷ்டியும் க�ொடுத்தான். எப்போதும் பசிய�ோடு க�ோணியில் உறங்கிய பிள்ளைகள் அப்போது மகிழ்ச்சியாக உறங்கினார்கள்.

- ஜூலை 2023

60

இரவு இருவர் கனவிலும் அம்மா வந்தாள். அம்மா இருவரையும் அணைத்து முத்தமிட்டார். கனவில் சிறுவர்கள் அம்மாவின் புதுச் சேலையை த�ொட்டுப் பார்த்தார்கள். இந்த சேலை உங்களுக்கு க�ொடுக்க வந்தேன் என்று ச�ொல்லிவிட்டு வெளியே நடந்தார் அம்மா. அம்மா தங்களை விட்டுவிட்டு எங்கோ ப�ோகிறாள் என்பதைப் பார்த்தப�ோதுதான் சிறுவர்கள் வீடே அலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும் கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை; சுடுகாட்டுக்குப் ப�ோனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் ப�ோர்த்திய அந்த புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று க�ொண்டிருந்தான். பிடித்த பகுதி மற்றும் கதாபாத்திரம்: பிடித்த கதாபாத்திரம் வேலப்பன். இரக்க குணம் க�ொண்ட வேலப்பன் சிறுவர்களுக்கு உணவு தந்து உறங்க தன் வீட்டில் இடம் க�ொடுத்தான்.

- க�ௌதம் செந்தில்குமார், வகுப்பு - 4.

இருண்ட நீர் (டார்க் வாட்டர்)

ஆசிரியர்: ஜூலி கில்பர்ட் பிடித்த கதாபாத்திரங்கள்: இந்தியா பின்ச் மற்றும் லுலு ஏனென்றால் அவர்கள் தைரியமானவர்கள். பிடித்த பகுதி: இந்தியா கடற்கன்னி ஆக முதன் முதலில் கடலில் நீந்திய ப�ொழுது கதை சுருக்கம்: இந்தியா பின்ச் நிலத்தில் பெண்ணாகவும் கடலில் கடற்கன்னி ஆகவும் வாழ்ந்து வந்தாள். இந்தியா பின்ச்சும் லுலுவும் நண்பர்கள். அவளுக்கு அடிக்கடி இருண்ட நீருக்குள் செல்லப் பிடிக்கும். அவள் தன் திறமைகளை பயன்படுத்தி சவால்கள் மற்றும் துயரங்களை சமாளிப்பாள். இந்தியா நீருக்கடியில் வருவதை சில கடற்கன்னிகள் விரும்பவில்லை. ஏனெனில் மனிதர்கள் கடலையும், கடற்கன்னி வீட்டையும் சேதம் செய்வதால் அவளை விரும்பவில்லை. ஒருநாள் சுனாமி வருவதை செய்திகள் மூலம் அறிந்த இந்தியா கடற்கன்னிகளை காப்பாற்ற கடலுக்குள் செல்கிறாள் பின்பு கடற்கன்னிகளுக்கு பாதுகாப்பான இடத்தை கண்டுபிடித்து சுனாமியில் இருந்து காப்பாற்றினாள். கடற்கன்னிகள் இந்தியாவிற்கு நன்றி ச�ொல்லி அனைவரும் நண்பர்கள் ஆனார்கள். நீதி: ஆபத்தில் உதவுபவனே நண்பன்.

- தக்‌ஷினா எழிலன், வகுப்பு - 4.


ஐ சர்வைவ்டு கத்ரீனா

மந்திரவாதியின் த�ொப்பி ஆசிரியர்:

மெல்கம் மிட்சல்

கதை சுருக்கம்: பேரியும் அவனது குடும்பத்தினரும் கத்ரீனா சூறாவளி நியூ ஆர்லன்ஸ் தாக்குவதற்கு முன் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சித்தனர், ஆனால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. ஏனென்றால் பேரியின் தங்கைக்கு உடம்பு சரியில்லாமல் ப�ோக, அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்.

கதைச்சுருக்கம்: ஒரு நாள் ஒரு மந்திரவாதி நூலகத்திற்கு வந்தார். அவரிடம் ஒரு த�ொப்பி இருந்தது அவர் அனைவருக்கும் மாயாஜாலம் செய்து காண்பித்தார். அவர் மாயாஜாலம் என்ற புத்தகம் படித்து தான் மந்திரவாதி ஆனதாக கூறினார்.

அப்பொழுது மழையினால் வீட்டின் அருகில் உள்ள ஓடை உடைந்து வெள்ளப்பெருக்கினால் வீட்டிற்குள் தண்ணீர் வந்து விடவும், அங்கிருந்து தப்பிக்க அனைவரும் வீட்டின் கூரை மேல் ஏறிவிட்டனர். கூரையின் மேல் அனைவரும் அமர்ந்து இருக்க பேரி தவறி தண்ணீரில் விழுந்து விடுகிறான். அதன் பின் எப்படி அவர்கள் அவனை காப்பாற்றப்படுகின்றனர்? பேரி குடும்பத்துடன் இணைந்தானா என்பதே இக்கதை. பிடித்த கதாபாத்திரம்: பேரி பிடித்த பகுதி: பேரி அவனது வீட்டின் கூரையின் மேலிருந்து தவறி தண்ணீரில் விழுந்த ப�ொழுது, ‘நான் என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைவேன்’ என்ற அவனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் தான் இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.

- ஸஷ்வந்த் விஜய்பாபு, வகுப்பு - 4.

ஆசிரியர்: டேவ் பில்கே கதைச்சுருக்கம்: இந்தத் த�ொடரில் இதுவரை 10 புத்தகங்கள் வந்துள்ளன விரைவில் பதின�ொன்றாவது புத்தகம் வெளிவர உள்ளது. முதல் புத்தகம் ஜார்ஜும் ஹர�ோல்டும் உருவாக்கிய காமிக் புத்தகங்களில் த�ொகுப்பாகும். இரண்டாவது புத்தகம் ஒரு தீய பூனையை பற்றிய புத்தகம், அது உண்மையில் ஒரு மீனாக இருக்கும் தனது வஞ்சகர்களுடன் சண்டையிட முயற்சிக்கிறது. மூன்றாவது புத்தகம் பீடியின் குள�ோன் பற்றியது. நான்காவது புத்தகம், லில் பீடி எப்படி ஒரு சூப்பர் ஹீர�ோ ஆனார் என்பது பற்றியது. ஐந்தாவது புத்தகம் F.L.E.A.S டாக் மேன் சண்டை பற்றியது. ஆறாவது புத்தகம் F.L.E.A.S டாக்மேனை ஏமாற்றுவது

அப்போது அங்கே இருந்த ஏமி என்ற சிறுமியிடம் “நீ வளர்ந்ததும் என்னவாக வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு ஏமி நான் பல் மருத்துவர் ஆக வேண்டும் எனக் கூறினாள். உடனே அவ்வாறே அவளை மாற்றிவிட்டார். அடுத்தது மேட் என்ற சிறுவன் நான் கால்பந்து வீரனாக வேண்டும் என கூறினான். அவனையும் அவ்வாறே மாற்றிவிட்டார். நாம் என்னவாக வேண்டும் என்று நினைத்து கனவு காண்கிற�ோம் அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். நன்றி. பிடித்த கதாபாத்திரங்கள்: எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் மந்திரவாதி மற்றும் ஏமி. ஏனென்றால் மந்திரவாதி நிறைய மாயாஜாலம் செய்வார். ஏமி பல் மருத்துவராக வேண்டும் என்று கூறுவாள். பிடித்த பகுதி: மந்திரவாதி மாயாஜாலம் செய்து குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என்று கேட்பார் அவர்களை அதுப�ோல மாற்றி விடுவார். - நேத்ரா கண்ணன், வகுப்பு 4

டாக் மேன்

பற்றியது. ஏழாவது புத்தகம் டாக்டர் ஸ்கம் பற்றி. எட்டாவது புத்தகம் டாக் மேன் 22 டேட்போல்களுடன் சண்டையிடுவது பற்றியது. ஒன்பதாவது புத்தகம் டாக் மேன் பணி நீக்கம் செய்யப்படுவதை பற்றியது. பத்தாவது புத்தகம் பீடியின் அம்மாவை பற்றியது. எனக்கு பிடித்த கதாபாத்திரம்: டாக்மேன், ஏனென்றால் அவன் மிகவும் கெட்டிக்காரன். இந்தத் த�ொடரில் எனக்கு பிடித்த புத்தகம்: Dog Man: Brawl of the wild, ஏனென்றால் அது மிகவும் வேடிக்கையானது.

– கார்த்திகேயன் ஸ்வாட்ஸ்,

வகுப்பு 4, ஃபார்மிங்டன்

61 - ஜூலை 2023

ஆசிரியர்:

லாரன் டார்சஸ்


ஃப்ரண்ட் டெஸ்க் (Front Desk) என்பதை அழகாக இந்தப் புத்தகம் ச�ொல்கிறது.

ஆசிரியர்: கெல்லி யங் முன்னுரை: இது நான்கு புத்தகங்களைக் க�ொண்ட த�ொடர்கதை. எனக்கு முதல் பாகமான ஃப்ரண்ட் டிஸ்க் மிகவும் பிடிக்கும். கதை சுருக்கம்: பெய்ஜிங் நகரில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு பத்து வயது சிறுமியின் கதை. அவள் பெயர் மியா. அமெரிக்காவில் கடின உழைப்பால் முன்னேறிய குடும்பத்தின் கதை. அமெரிக்காவில் ஒரு நல்ல வீடு மற்றும் வேலைக்காக அவள் குடும்பம் மிக சிரமப்பட்டது. ஒரு நாள் ஒரு தங்கும் விடுதியை நிர்வகிக்கும் வேலை கிடைத்தது. அதன் முதலாளி ஒரு நிறவெறியர் மற்றும் கஞ்சன். மிகுந்த சிரமத்தில் மியாவின் குடும்பம் எப்படி அமெரிக்காவில் கால் ஊன்றினார்கள்

எனக்கு பிடித்த கதாபாத்திரம்: இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் மியா தான். அவள் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஒரு பெண். அவளுக்கு சரி என்பதை தைரியமாக செய்வாள். எனக்கு பிடித்த பகுதி: எனக்கு பிடித்த பகுதி, பகுதி 63 இதில் அவள் குடும்பம் ஒரு குழுவாக சேர்ந்து, உழைத்து, அந்த விடுதியை உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்குவார்கள். முடிவுரை: இந்தக் கதை கடின உழைப்பின் பயனையும், கூடி வாழ்ந்தால் க�ோடி நன்மை என்ற கருத்தையும் மிக அழகாக ச�ொல்கிறது. நன்றி!

- யஷ்வினி வெங்கடேஷ், வகுப்பு 4,

நீதான் மரங்கொத்தியா? ஆசிரியர்:

- ஜூலை 2023

62

எஸ்கேப்

ஆசிரியர்:

சுஹைல் காதர்.

கே.ஆர்.அலெக்ஸாண்டர்.

கதை சுருக்கம்: இரண்டு கிளிகளின் கூடு புயலில் உடைந்து விட்டது. அது காக்காவிடம் உதவி கேட்டது. காகம் “மரங்கொத்தியிடம் கூடு கட்ட உதவி கேள்” என்று ய�ோசனை கூறியது. கிளிகள் வழியில் நிறைய பறவைகளை பார்த்து “நீ தான் மரங்கொத்தியா?” என்று கேட்டது. கடைசியில் மரங்கொத்தியை பார்த்து வீடு கட்ட கேட்டது. அதற்கு மரங்கொத்தி மறுத்துவிட்டது. கடைசியில், அதை ஒரு மரத்திலிருந்து பார்த்த குக்குறுப்பான் பறவை, கிளிகளுக்கு உதவி செய்தது.

கதை சுருக்கம்: இந்தப் புத்தகத்தில் ஒரு சிறுவனும் அவன் நண்பர்களும் ஒரு ப�ொழுதுப�ோக்கு பூங்காவிற்கு சென்று விளையாடுவார்கள். அங்கு நிறைய சவாரி விளையாட்டுகள் இருக்கும். அங்கே சிறுவர்கள் சவாரி விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். அந்தப் பூங்காவில் நிறைய பேய்களும் இருந்தன. அந்த பேய்கள் சவாரி செய்யும் சிறுவர்களை கடத்தி அந்த விளையாட்டிலேயே வைத்துவிடும்.

எனக்கு பிடித்த கதாபாத்திரம்: “குக்குறுப்பான்” எனக்கு இந்த கதாபாத்திரம் பிடிக்கும் ஏனென்றால் இந்தக் குருவி இரண்டு கிளிகளுக்கு கூடு கட்டி க�ொடுத்தது.

- ஷிவானி சம்பத்ராஜா, வகுப்பு 4.

க�ோடி என்ற சிறுவன் பேய்களை வென்று சிறுவர்களை சவாரி விளையாட்டில் இருந்து விடுவிக்கிறான். இந்தப் புத்தகம் திகில் வகையை சார்ந்தது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் கே. ஆர். அலெக்ஸாண்டர். இந்தத் திகில் வகையை சார்ந்த மேலும் சில புத்தகங்கள் Scare Me மற்றும் Collector. எனக்கு பிடித்த கதாபாத்திரம்: க�ோடி, எனக்கு ஏன் க�ோடி பிடிக்கும் என்றால் அவன் மிகவும் தைரியமானவன்.

- சான்வி மூர்த்தி, வகுப்பு 4, ஃபார்மிங்டன்.


- ஜூலை 2023

63


From

PRSRT STD US POSTAGE PAID WARREN, MI PERMIT NO.118

Meena Murugan, 38323 saratoga cir, Farmington Hills, Michigan - 48331

- ஜூலை 2023

64

To


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.