நீ இளைஞன், அது ப�ோதும்! – 05
சூ.ம. ஜெயசீலன்.
தலைமுறை இடைவெளி
என் இனிய இளைஞனே! மாற்றங்கள் இயற்கையின் இயக்கத்தையும் சமூகத்தின் இயங்குதலையும் அழகுபடுத்துகின்றன. ‘இப்படித்தான்’ என்னும் வரையறைக்குள் அறையப்பட்டவைகள் அச்சாணி கழன்ற சக்கரங்களாக தமக்கான புதுப்புது திசைகளில் பயணிக்கின்றன. இவற்றில் நல்லவை சிலவற்றை நீ அறிந்திருக்கிறாய். பலவற்றை அறியாமலேயே பின்பற்றி வருகிறாய். ‘அப்படியா! என்னையும் அறியாமல் எதை நான் பின்பற்றுகிறேன்?’ என நீ சிந்திப்பது புரிகிறது. உன் பெற்றோர் பாடநூல் வாசம் பிடித்துப் பள்ளிக்கூடம் சென்ற காலத்தில் ஆண்டில் ஓரிரண்டு விழாக்கள் பள்ளியில் நடைபெற்றதுண்டு. கலைநிகழ்ச்சிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதையே மாணவர்கள் பெருமையாகப் பேசித் திரிந்தார்கள். உண்மையில் அது கத்தியில் நடக்கும் ப�ோராட்டம். நடனமும் நாடகமும் மாணவர்களின் திறமையை அறிவிப்பதற்குப் பதிலாகப் பள்ளியின் பெருமையை உரைப்பதற்காக என்னும் எண்ணம் மேல�ோங்கிய ப�ொழுதுகள் அவை. ‘எல்லாரும் ஒரே மாதிரி ஆட வேண்டும்’ என்பதே ஆசிரியர் த�ொடங்கிப் பார்வையாளர் வரை எல்லாருக்குமான விருப்பம். தவறிழைத்தவர்கள் பள்ளியில் கேலிப் ப�ொருளாகவும் வீட்டில் உதவாக்கறையாகவும் ஆனார்கள். எல்லாரும் முழுமை விரும்பிகளாகத் (Perfectionist) தங்களைக் காட்டிக்கொண்டார்கள்.
2017
உன்னுடைய காலத்தில் இந்தப் பார்வை ஏறக்குறைய மாறிவிட்டது. ‘அனைவரும் ஒரே மாதிரி ஆட வேண்டும் என்றால் அவர்கள் என்ன இயந்திர மனிதர்களா?’ என்னும் கேள்வி எழுந்தது. மாணவர்களின் கலைத் திறனை அவர்களின் நிறை குறைகளுடன் சுவைக்க வேண்டும் என்னும் புரிதல் வளர்ந்தது. இயல்பு விரும்பிகளாக (Realistic) சமுதாயத்தில் சிலர் உருவெடுத்தனர். ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகத் த�ோன்றித் தாள், ஓவியம், மரம், நிழற்படம் எனப் பல வடிவங்களில் பரிணாமம் அடைந்த க�ொலாஜ் என்னும் கலை
ப�ொன் நாணயங்களை அடைமழையாகப் பெய்தாலும், ஆசைகள் அடங்காமல் பெருகும்.
14