வலைத்தமிழ் டிசம்பர், 2019

Page 1

1

டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


2

டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


அனைவருக்கும் வணக்கம், ப�ோலிகளின் இரைச்சலில் உண்மை ம�ௌனமாகிறது.. .. ப�ோலி மனிதர்களின் இரைச்சலில் உண்மை மனிதர்கள் அமைதியாக இருப்பதும், ஒதுங்கிச் செல்வதும் த�ொடர்ந்து இந்தத் தமிழ்ச் சமூகத்தின் அவலங்களுக்கு மிகப்பெரிய காரணங்களாக உள்ளது. திறமையானவர்கள், அறிவார்ந்தவர்கள், சிந்தனைவாதிகள் தங்களை முன்னிறுத்திச் சுயத்தை இழக்கமாட்டார்கள். அவர்கள் எவருடனும் மல்லுக்கட்டித் தன்னை அறிவாளி என்று நிரூபிப்பதைய�ோ, தன்னுடைய சிந்தனை , பங்களிப்பை வெளிக்காட்டிக்கொள்வதைய�ோ விரும்பமாட்டார்கள். நல்லவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களிடம் விலைப�ோகாத சுய சிந்தனையும், சுய கவுரவமும் க�ொண்டவர்கள். தனக்குப் பிடித்ததை நேர இழப்பைய�ோ, ப�ொருளாதார இழப்பைய�ோ கவனத்தில் க�ொள்ளாமல் த�ொடர்ந்து செய்துமுடிப்பவர்கள். எவருடனும் அவ்வளவு எளிதில் இணைந்து சமரசத்துடன் பயணிப்பதை ஏற்கமாட்டார்கள். குடித்துவிட்டு ஒருவன் வீதியில் புரண்டு வாய்க்கு வந்ததைப் பேசும்போது, பண்பானவர்கள் எப்படி ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள�ோ அதுப�ோல்தான் இதுவும். வீதியில் நிதானம் இழந்து சத்தம் ப�ோடுபவனிடம் கட்டிப்புரண்டு தன் நிலையை, உயரத்தைக் குறைத்துக்கொள்ளப் பண்பான மனிதர்கள் விரும்புவதில்லை. அதுப�ோல்தான் ப�ோலிகளின் சத்தத்திலும் அதைவிட உரக்கக் கத்தித் தன்னை வெளிக்காட்ட நல்லவர்கள் விரும்பமாட்டார்கள். உலகின் உன்னத இலக்கியச் செழுமையைக் க�ொண்ட தமிழ்ச் சமூகம், உலகப்பொதுமுறையைக் க�ொண்டுள்ள தமிழ் ம�ொழியைப் பேசும் நாம், உலகினை அமைதிவழியில் வழிநடத்தப் ப�ோதுமான அறம்சார் வாழ்வியல் சித்தாந்தங்களைக் க�ொண்டுள்ள நாம், இன்று உலகின் உன்னதச் சமூகமாக விளங்குகிற�ோமா? சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. நம்மாழ்வார்களுக்குக் கிடைக்காத விருதுகள் யாரைக் க�ொண்டாட பயன்படுத்தப்படுகிறது என்று சிந்திக்கவேண்டும். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ப�ோன்றவர்களை டெப்பாசிட் இழக்கவைத்துத் த�ோல்வியுறவைக்கும் தேர்தல் களம் உண்மையானவர்களை விரட்டிவிட்டு எவ்விதத் தலைமைப் பண்புள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைச் சிந்திக்கவேண்டும். நல்ல மருத்துவர்கள் ப�ோலி மருத்துவர்களின் விளம்பரத்தில் த�ோற்று ப�ோகிறார்கள். ஆழ்ந்த சிந்தனை க�ொண்ட சிறந்த எழுத்தாளர்கள், ஆள் வைத்து எழுதித் தன் பெயர் ப�ோட்டுப் புத்தகம் வெளியிடும் ப�ொருளாதாரம் படைத்தவர்களிடம் த�ோற்றுப்போகிறார்கள். வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்ந்து ப�ொருளாதாரம் சேர்த்துக்கொண்டு எப்படி வாழவேண்டும் என்று இளைய�ோருக்கு அறிவுரை ச�ொல்பவர்களிடம் எடுத்துக்காட்டான பெருவாழ்வு வாழும் எளிமையானவர்கள் காணாமல் ப�ோகிறார்கள். ஒருவரின் உழைப்பை, சிந்தனையைத் தனதாக மாற்றும் ப�ோலிகளிடம், அறிவார்ந்த சிந்தனையாளர்கள் தள்ளி நிற்கிறார்கள். நெஞ்சுரத்துடன் சரி, தவறு என்று உணர்ந்ததைச் ச�ொல்பவர்கள், இடித்துரைப்பவர்கள், துதிபாடிகளுக்கு முன்பு காணாமல் ப�ோகிறார்கள். க�ொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள், க�ொள்கையற்ற மாந்தர்களிடம் காணாமல் ப�ோகிறார்கள். இதுவே தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய பின்னடைவுக்குக் காரணமாக அமைகிறது. சில ஆண்டுகள் உழைத்துப் படித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுபவர்களின் மதிப்பு , ஒரு லட்சம் , மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று விற்கப்படும் ப�ோலி பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் முன் மதிப்பிழந்து ப�ோகிறது. அடிமை மன�ோபாவம் க�ொண்டு, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சிந்தனை க�ொண்ட

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 3


தனிமனிதன், கூட்டாகச் சேர்ந்து குறிக்கோளற்ற, பண்புகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்குகிறான். தனி மனித அறம் இல்லாத சமூகம் ஒரு தரமற்ற, தலைமைப்பண்பு இல்லாத தனக்குப் பிடித்த ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறது. பின்பு, அது சரியில்லை, இது சரியில்லை என்று புலம்பித் தன் கண்முன்னே தன் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கு எதிரான ஒரு சமூகத்தை உருவாக்கியதை எண்ணி வெம்பித்தவிக்கிறது. “எதை விதைக்கிறாய�ோ அதையே அறுவடை செய்கிறாய்”. “விதை ஒன்று ப�ோட்டா சுரை ஒன்றா முளைக்கும்?”, “எண்ணம்போல் வாழ்க்கை” என்று பல விதங்களில் நம் முன்னோர் தனிமனிதனின் வாழ்வியலின், அறவாழ்வியலின் மகத்துவத்தைக் கூறிச்சென்றுள்ளார்கள். அந்த வகையில் நல்லவற்றைச் சத்தம் ப�ோட்டு வரவேற்பது மிக முக்கியம், அதே நேரத்தில் ப�ோலிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும், க�ொண்டாடாமல் இருப்பதும், அவர்கள் முக்கியத்துவம் பெற்றுவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இந்தச் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்குத் தனிமனிதர்கள்தான் காரணம். நாம் ஒவ்வொருவரும் மாறும்போது சமூகம் மாறும். சமூகம் மாறும்போது அந்த தரத்திற்கு ஏற்ப நம்மை வழிநடத்தும் தலைமையும், வாழ்வியல் தரமும் உயரும். படிப்பதைச் சித்திப்பவர்களாக, சிந்திப்பதைப் பேசுபவர்களாக, பேசும்படி வாழ்பவர்களாக ஒரு இயல்பான, இணக்கமான வாழ்வை வாழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். சிஷ்யன் தயாராகும்போது குரு த�ோன்றுவார் என்பார்கள், நாம் தரமான மனிதராகத் தனிமனித வாழ்வில் உயரும்போது, அதற்கேற்ப எல்லாம் த�ோன்றும். பத்திரிகையிலும், த�ொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் முக்கிய மனிதராக வரும் பலரது உண்மையான முகம் அதே நேர்க்கோட்டில் நடைமுறை வாழ்க்கையில் இருக்கவேண்டியதில்லை. எனவே, நல்லவர்கள் நல்லவர்களை அடையாளம் கண்டு பேசுங்கள், எழுதுங்கள், சமூகம் நல்ல சிந்தனைகளை வரவேற்கவேண்டும். பணம், உயரம், அரசியல், அதிகாரம், கவர்ச்சி இருக்கிறது என்பதற்காக எவரையும் தூக்கிப்பிடிப்பது நம்மை மட்டுமல்ல, வரும் தலைமுறையையும் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. ப�ோலிகளை அடையாளம் காணச் சமூகமும், தனி மனிதர்களும், அமைப்புகளும் ப�ோதிய கவனம் செலுத்தவேண்டும். மனசாட்சியைப் புறந்தள்ளிப் ப�ோலிகளைக் க�ொண்டாடாதீர்கள். உண்மை அமைதியாகிவிடும். இது நம் அடுத்த தலைமுறைக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி..

வாழ்க தமிழ்... மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். Magazine@ValaiTamil.Com

4

டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


உங்களுக்குத் தெரியுமா? பிறந்தநாளைத் தமிழில் க�ொண்டாடுவ�ோம்..

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு மாத இதழ்

ஆசிரியர்

ச.பார்த்தசாரதி ஆசிரியர் குழு

சுபா காரைக்குடி

நீண்ட நீண்ட காலம் என்று த�ொடங்கும் தமிழ் பிறந்த நாள் பாடல் மூன்று க�ோடி பேருக்கு மேல் பார்த்து இன்று தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பிலும், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. QR Code

நியூ ஜெர்சி, அமெரிக்கா

கலையரசி சிவசுந்தரபாண்டியன் மிச்சிகன், அமெரிக்கா

நீச்சல்காரன்

மதுரை, இந்தியா

இரமா ஆறுமுகம் டெலவேர்,அமெரிக்கா

தேவி அண்ணாமலை இலினாயிஸ்,அமெரிக்கா

ஆரூர் பாஸ்கர்

URL: www.youtube.com/watch?v=6n3tXhytP8I Search “Tamil Birthday Song”

ப்ளோரிடா,அமெரிக்கா

முனைவர்.சித்ரா மகேஷ் டெக்சாஸ், அமெரிக்கா

நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.. நூல்: “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்” வெளியீடு: தமிழியக்கம் இணையத்தில் வாங்க :

www.eStore.ValaiTamil.com

இளவழுதி வீரராசு வெர்ஜீனியா,அமெரிக்கா

விஜய் சத்யா

வெர்ஜீனியா,அமெரிக்கா

பன்னாட்டு ஆசிரியர் குழு ராஜா வேணுக�ோபால், இரா.ராஜராஜன்,

அமெரிக்கா

இந்தியா

கீதா இரவிச்சந்திரன்,

சிங்கப்பூர்

முனைவர்.பாக்கியலட்சுமி வேணு, விஜய் சிங்,

ஆஸ்திரேலியா

விக்ரம் சதீஷ்,

தமிழில் எழுத்துப் பிழைதிருத்தி பயன்படுத்துகிறீர்களா?

ச�ௌதிஅரேபியா

ஹாங்காங்

பதிப்பாளர்

வலைத்தமிழ்.காம்

www.ValaiTamil.Com To Read all the Magazine: www.Magazine.ValaiTamil.com

Register your interest to get a printed copy at

www.Magazine.ValaiTamil.com

E-Mail: Magazine@ValaiTamil.com www.Youtube.com/ValaiTamil www.Youtube.Com/ValaiTamilTV www.Facebook.com/ValaiTamilMagazine இதழ் வடிவமைப்பு

இரா.அரவிந்தன் Email: Designer@ValaiTamil.com

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 5


பன்னாட்டுத் தமிழ் த�ொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத்

த�ொழிலை

விரிவாக்க,

உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் க�ொடுத்த எழுமின் மாநாடு..

நல்ல

நட்பை

மூன்று நாள்

எழுமின் மூன்றாவது உலகத் தமிழ் த�ொழில்முனைவ�ோர் , திறனாளர்கள் மாநாடு நவம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்களுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது..

நவம்பர் 14, வியாழன் அன்று த�ொடங்கிய இம்மாநாடு பல்வேறு நாடுகளிலிருந்து பல த�ொழில் சார்ந்த ஆளுமைகளை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைந்தது. முதல்நாள் மாநாடு மேள-நாதஸ்வரம் இசைக்க, குத்துவிளக்கு ஏற்றித் த�ொடங்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம், அரங்க வளாகம் முழுக்கத் தமிழ்க் கலாச்சாரத்தைப் ப�ோற்றும் கண்கவர் வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. 35 நாடுகளில் இருந்து வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட த�ொழில் முனைவ�ோர் மற்றும் திறனாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் "The Rise - எழுமின்" எனும் ஒற்றைக்குடையின் கீழ் ஒன்று கூடி 3 நாட்கள் தமிழ் வணிகம் சார்ந்த மாநாடு அருட்தந்தை திரு.ஜெகத் காஸ்பர் சிந்தனையில், தலைமையில், மேற்பார்வையில், ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கிறித்தவ மகளிர் கல்லூரி முனைவர். லிலியன் ஜாஸ்பர், ஹரியானா மாநில முன்னாள் 6

டிசம்பர் 2019

தலைமைச் செயலர் திரு.தேவசகாயம் இ.ஆ.ப. (ஓய்வு), ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலர் திரு.பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு), சித்த மருத்துவர் கு.சிவராமன், திரு. ம�ோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு த�ொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன், எஸ். ஆர்.எம். வேந்தர் திரு.பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள், தலைவர்கள், த�ொழிலதிபர்கள், பல்வேறு தூதரக அதிகாரிகள் என்று பெருந்திரளாகக் கலந்துக�ொண்டனர். திரு.பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு) அவர்களின் துவக்க உரையில் "தமிழர்கள் வணிகத்தில் மேல�ோங்கியவர்கள்" என்பதைச் சிந்து, கீழடி அகழ்வாராய்ச்சியில் தக்கச் சான்றுடன் உள்ளது எனவும், சங்கப் பாடல்கள், புறநானூறு, திருக்குறள் இன்னும் சில படைப்புகளை மேற்கோள் காட்டி "வணிகத்தால் வளம் பெற்றவர் தமிழர்" என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். முனைவர். முகம்மது ஆசிப் அலி அவர்கள் தனது உரையில் "ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் www.Magazine.ValaiTamil.com


எங்ஙனம் தமிழகம் சிறந்த மதநல்லிணக்கத்துடன் இருந்திருக்கிறது" என்பதைப் பற்பல வரலாற்றுச் சான்றுகள் மூலம் எடுத்துரைத்தார். குறிப்பாக மயிலை கபாலீசுவரர் க�ோயில் தெப்பக்குளம் நிலம் இசுலாமியர்கள் க�ொடையாக வழங்கியது என்பது ஒரு ஆச்சர்யத் தகவல். உலக நாடுகளில் தமிழர்களை எப்படி உயர்வாக மதிக்கிறார்கள், ஆனால் ச�ொந்த நாட்டில் அந்த அளவிற்கு இல்லை என மிகவும் ஆதங்கப்பட்டார். அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த திரு. சிவா நடராசன் "செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence)" பற்றி மிக எளிமையாகப் பேசினார், இதில் தமிழகம் முதன்மை பெற்று

விளங்கினால், பல த�ொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெருகும் எனக் கூறினார். தமிழகம் இத்துறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். Flextronics நிறுவன இந்தியத் தலைவர் தமிழர் திரு. ஜ�ோஷ் ஃவ�ோல்கர் கைப்பேசி மற்றும் இதர மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பதில் தமிழகம் முன்னோடி என்பதைச் சுட்டிக்காட்டி அதை இன்னும் பன்மடங்கு உயர்த்த சாத்தியக்கூறுகள் உள்ளது எனத் திட்டவட்டமாகப் பேசினார். அதிலும் இத்துறையில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருவது கூடுதல் சிறப்பு.

ETA மற்றும் Crescent கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.அகமது புகாரி பேசுகையில் வட தமிழகத்தில் க�ோவை, கிழக்கில் சென்னை பகுதியில் வணிகம்+த�ொழில் இருக்கிறது. திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களில் த�ொழில் வளர்ச்சி இன்னும் பரவவேண்டும் எனச் ச�ொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இந்தப் பரந்த மனம் படைத்தவர். குறிப்பாக மின் உற்பத்தி பற்றி உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழகம் த�ொழில் முனைவ�ோர் மாநிலமாக உருமாற வேண்டும். அதற்கான தளம் நமக்குச் சாதகமாக உள்ளது எனவும், தமிழகக் கல்விக் க�ொள்கை, பெண் கல்வி, சமூக நீதி, இரும�ொழிக் க�ொள்கையின் வெற்றியால் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலமாகத் தமிழகம் சிறந்து விளங்குவதைப் பற்றிப் புள்ளி விவரத்தோடு விவரித்து வசீகரித்தார் நண்பர் “Orangescape” நிறுவன அதிபர் திரு.சுரேசு சம்பந்தம். www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 7


இம்மாநாட்டில் பல விருதுகள் வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பாக “20 காளைகளை அடக்கிய சல்லிக்கட்டு வீரர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிலம் தந்தவர்களுக்கு” விருது வழங்கிய ப�ோது அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டி, ஆர்ப்பரித்து, மனதார தங்களது உற்சாகமான உணர்வை வெளிப்படுத்தினர். புதிய, நலிந்த, மாற்றுத்திறனாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதால் இசையமைப்பாளர் இமானுக்குச் சிறப்பு விருது.

மட்டுமே பேசவ�ோ, பழகவ�ோ முடியும். ஆனால் எழுமின் அதைத் தகர்த்து உலகத் தமிழ் த�ொழில் முனைவ�ோர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கூடித் த�ொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்களும், சிறிய அளவில் த�ொழில் செய்பவர்களையும் உத்வேகப்படுத்தி ஒன்றிணைக்கப் பல கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. மேலும் த�ொழிலில் வெற்றிபெற்றவர்கள் தமிழ் என்ற தங்கள் அடையாளத்தைக் காட்டிக்கொள்வதில்லை என்ற நிலையை மாற்றி உங்கள் அடையாளத்துடன் நிமிர்ந்து த�ொழில்செய்யுங்கள், பிற நாட்டுத் தமிழ் த�ொழிலதிபர்களின் த�ொடர்புகள் உங்களை உயர்த்தும் என்ற சிந்தனையை உயர்த்திப்பிடித்தது எழுமின் மாநாடு.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சுமார் 90 நிமிடங்கள் இன்னிசை மழையில் அனைவரையும் மனமகிழச் செய்தார். திருக்குறள், சங்கப்பாடல், புறநானூற்றுக் கவிதை, பாரதிதாசன் பாடல்களுக்குத் தனது இசையால் புத்துணர்ச்சி தந்தார். ஒரு சேர 75+ பேர் பாட இசைக்குழுவின் ஒருங்கிணைந்த இசை மழை! இந்நிகழ்வுக்கு வலைத்தமிழ் ஊடக ஒத்துழைப்பை வழங்கியதுடன், நிகழ்ச்சியின் நேரலையை ப�ொதுவாக வணிக மாநாடுகளில் குறிப்பிட்ட www.Facebook.com/ValaiTail -ல் உடனுக்குடன் ஒரு துறை, தலைப்பு, இடம் மற்றும் ஒத்த ஏற்பாடுசெய்து, காண�ொளிப் பதிவுகளை சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே ஒன்று www.YouTube.Com/ValaiTamilTV -ல் பதிவிட்டு கூடுவார்கள். அதிலும் குறிப்பாக நுனி நாக்கு வருகிறது. ஆங்கிலம் விளையாடும் மற்றும் ஒரு அளவிற்கு 8

டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


கட்டுரை

தக்கோன் எனத் திரி… தகுதி க�ொள். முனைவர்.சித்ரா மகேஷ், டெக்சாஸ்,அமெரிக்கா

மனிதனின் வாழும் முறையும், ச�ொல்லும், செயலும், வாழும் காலத்திலும், அதற்குப் பின்னரும் பெருமை சேர்க்கும் ஒன்றாகவும், தன்வழி வருவ�ோர் மதித்துப் பின்பற்றி நடக்கும் படியான தகுதி உடையதாகவும் இருக்க வேண்டும். மனிதனாகப் பிறந்து வாழும் ஒவ்வொருவரும் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அறநெறியுடன் வாழ்தல், தன்னைப்போல் பிறருடைய உணர்வுகளையும் மதித்தல், சமூக அக்கறையுடன் நடத்தல், ப�ொதுவாகச் ச�ொன்னால், தன் உள்ளத்திற்குத் தான் நேர்மையாக இருத்தல் ஆகியவற்றோடு சேர்த்து, ஒரு நாள் முடியும் ப�ோது, உள அமைதி நிறைந்து இருப்பின் அதுதான் வாழ்வில் சிறந்த நாள். அப்படியான நாட்களைக் க�ொண்ட மனிதன் ஒளவை ச�ொன்னது ப�ோல் www.Magazine.ValaiTamil.com

தக்கோனாய்த் திரியலாம். மேலும் தக்கார் இனத்தவானாகி உலகத்தார்க்குத் தக்கோன் எனச் சிறப்படைகிறான். தகுதி, தகுந்த, தக்கவாறு, தக்க நேரத்தில், தகுந்தவரிடம் ப�ோன்ற வார்த்தைகள் இயல்பாக அனைவராலும் பயன்படுத்தப்படுபவை. தனி மனித வாழ்வு, ப�ொது வாழ்வு, வேலை பார்க்கும் இடங்கள், த�ொழில்துறை என எல்லா இடங்களிலும் முன்னேற்றம் காணவும், இருக்கும் இடத்தைத் தக்க வைத்துக் க�ொள்ளவும் ஒருவர், தன்னைத் தகுதிப்படுத்திக் க�ொள்ள வேண்டியுள்ளது. அதாவது குறிப்பிட்ட இந்த நிலைக்குத் தான்தக்கவன் என்பதை மற்றவர்களுக்கு உறுதிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் ப�ோட்டிகள் நிறைந்த

டிசம்பர் 2019 9


உலக வாழ்வில், பிறித�ொருவரைவிட நான் தகுதியும், ஆளுமையும் வலிமையும் மிக்கவன் என்பதை உறுதிப்படுத்துவது அன்று முதல் இன்று வரை மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. சங்க காலப் பாடல்களைப் படிக்கும் ப�ொழுது, மருத்துவம், ப�ோர், தூது, எனப் பல்வேறு செயல்களைச் செய்தவர்கள் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிந்த பின்னரே முடிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. திருமணம் முடிக்க வேண்டும் என்றால், ஆண் வீரனாக அல்லது செயல் வீரனாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும். பெண் நற்குணங்களும், ஆளுமைத்திறன் நிறைந்தும்,அறிவுக்கூர்மை ப�ொருந்தியவளாகவும் இருக்க வேண்டும். இப்படி அனைத்துச் செயல்பாட்டிலும் ஒருவர் தன்னைத் தன் தகுதியால் தான் ஆகச்சிறந்த ஒருவன் அல்லது மனிதன் என்பதைச் ச�ொல்லிக் க�ொண்ட பின்னரே தனக்கான இடத்தை அடைய முடிகிறது. இப்படி, வாழ்வில் எல்லா நேரங்களிலும், இடங்களிலும் வெற்றிகளும், சாதனைகளும் தகுதியின் அளவு க�ொண்டே அடையப்படுகிறது, அடையாளம் க�ொள்கிறது.

அந்தத் “;தக்கவர்”; எனும் ச�ொல்லுக்கான முழுப்பொருளும், ப�ொறுப்பும் க�ொண்டவர் தான் என்பதை உணர்ந்து, தன் திறமையைச் செயலில் காட்ட வேண்டும். தக்கது, தக்கவர், தக்கார், தகவிலார், தக்காள், தக்கோர், தகுதி, தகுதியர், தகுந்தவர், தகுவி ப�ோன்ற தமிழ் வார்த்தைகள் குறிக்கப்படும் ஒரு ப�ொருள் ஒரே ப�ொருள், ஒருவர் குறிப்பிட்ட செயலை, பணியை அல்லது தலைமைப் ப�ொறுப்பை ஏற்று நடத்தப் ப�ொருத்தமானவரா அல்லது அதற்கான சிறப்புப் பண்பினைப் பெற்றவரா என்பதே ஆகும்.

வள்ளுவன் செய்த உலகப் ப�ொதுமறை திருக்குறளில் தகுதி என்ற ப�ொருளைய�ொட்டி வரும் பல ச�ொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது அவற்றின் சிறப்பைக் காட்டுகிறது. ஒளவையார் தமிழுக்கு அளித்த அரும்பெரும் செல்வம் ஆத்திச்சூடி. குறுகத் தரித்த குறள் ப�ோன்றே, ஆத்திச்சூடியையும் மனித வாழ்வில் கற்று உணர வேண்டியது தமிழனின் கடமை. அறம் செய்யச் ச�ொல்லாது, அதைச் செய்ய ஆசைப்படு, நீயே விரும்பிச் செய் என்று அழகாய்ச் ச�ொல்லி ஆரம்பிக்கும் அறிவுரையின் வரிசையில், வாழ்கிற�ோம் என்பத�ோடு நிற்காமல், வாழ்வதற்கும் வாழ்வில் தான் அடைய எண்ணும் எந்த உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற நிலைக்கும் தகுதியை உருவாக்கிக் க�ொண்டு, கேள்வி மிகவும் பழக்கப்பட்டதே. எங்கும் அல்லது தன்னைத் தகுதி உடையவனாக தலைமைப் ப�ொறுப்பில் இருப்பதற்குத் உருவாக்கிக் க�ொண்டு’ தக்கவர், சிறந்தவர் என்று ச�ொல்லப்படுபவர்,

FOR ADVERTISEMENT AND ENQUIRIES CONTACT: Magazine@ValaiTamil.com 10 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


நல்ல தமிழில்

எழுதுவ�ோம் ஆரூர் பாஸ்கர், ப்ளோரிடா,அமெரிக்கா

நீங்கள் ஒரு மகானா ?

பற்றி இங்கே க�ொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. ஆமாம், உங்களைப் ப�ொறுத்தவரை அந்த பதில் ல்ல தமிழில் எழுதுவ�ோம் என்ற தலைப்பில் சரியாக இருந்தாலும் இலக்கணப்படி அது தவறானது. எனும் தலைப்பில் ஒரு எழுதிவரும் இந்தக் கட்டுரைத் த�ொடருக்கு வாசக ‘நான் மகான் அல்ல’ அன்பர்களிடம் இருந்து வரும் வரவேற்பும் திரைப்படம் வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது பாராட்டுதல்களும் என்னைத் த�ொடர்ந்து எழுத கூட நினைவிருக்கலாம். ஆனால், இலக்கணப்படி அந்தத் தலைப்பை எழுதினால் ‘நான் மகான் அல்லன்’ உற்சாகமளிக்கிறது. நன்றி. என்பதே சரி. அதாவது ஒருமையில் எழுதும்போது ‘குருவை மிஞ்சிய சீடன் யார்? ‘- எனத் தலைப்பிட்ட ஆண்பால் என்றால் “அல்லன்” என்றும் பெண்பாலாக சென்றவாரக் கட்டுரையில் அடிப்படையில் இருந்தால் “அல்லள்” என எழுதுவதே சரியானது. அந்தக் கேள்வியே பிழையானது என்பதைப் அதைப் பன்மையில் எழுதும்போது மட்டும் “அல்ல” பார்த்தோம். ஏனென்றால் மிஞ்சிய ,விஞ்சிய எனும் என எழுதலாம். எ.டு. அவை நல்லவை அல்ல, இரண்டு ச�ொற்களையும் பலர் சரியான பதத்தில் அவர்கள் திருடர்கள் அல்ல. பயன்படுத்துவதில்லை என்றும் குருவைவிடச் சிறந்த சீடன் யார்? எனும் அந்த வினாவை “குருவை விஞ்சிய இந்தவகையில் நினைவுக்கு வரும் இன்னொரு ச�ொல் சீடன் யார்? “ எனக் கேட்பதே சரி எனப்பார்த்தோம். “அல்லை”. சமீபத்தில் கூட ‘நல்லை அல்லை’ எனும் அதாவது மேல�ோங்கி நிற்பதை விஞ்சியது என்றும் குறுந்தொகைப் பாடல் வரிகள் திரைப்படத்தால் மிச்சமிருப்பதே மிஞ்சியது என்றும் தெரிந்து மறுஉயிர் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதாவது இரவு நேரம் கானகத்தில் நிலவு ப�ொழிகிறது. க�ொண்டோம். காதலி காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அந்த நிலவின் ப�ொதுவாக நாம் சுயநலம் கருதாமல் ப�ொதுநலத்துக்காக ஒளியால் தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு அல்லது ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக வாழ்க்கையை விடுமே என்று அஞ்சும் அவள் நிலவைப் அர்ப்பணித்தவர்களை மகான் என்போம். அந்த பார்த்துப் பாடுவதுப�ோல அமைந்த பாடல் அது. வகையில் ‘நீங்கள் ஒரு மகானா ? ‘ எனும் கேள்வியை அதாவது நல்லை அல்லை என்றால் (நிலவே நீ விளையாட்டாக யாராவது உங்கள் முன் நீட்டி நல்லது செய்தவன்) ஆகமாட்டாய் எனப்பொருள் அதற்கு நீங்கள் ‘ஆம்’, ‘ஆமாம்’ என்பது ப�ோல பதில் அல்லன், அல்லள், அல்ல, அல்லை ப�ோன்ற ச�ொல்லியிருந்தால் வம்பில்லை. தப்பித்தீர்கள். மாறாக ச�ொற்களின் வேறுபாடு தெரிந்து பிழையின்றி ‘நான் மகான் அல்ல’ எனச் ச�ொல்லியிருந்தால் அதைப் எழுதுவ�ோம். பேசுவ�ோம்.

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 11


தன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் க�ொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு.கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல் -சுபா காரைக்குடி, நியூஜெர்சி, அமெரிக்கா

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த

விட அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

உங்களுக்குக் காவல் துறையில் சேர வேண்டும் என்ற பயிற்சி முடித்துப் பதவியேற்றுப் பல இடங்களில் ஆர்வம் எப்படி வந்தது?

மிகவும் சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். காவல்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பதே அரிது. அன்று கல்லூரி நாட்களில் நண்பருடன் சென்று க�ொண்டிருந்த வேளையில் தஞ்சை மாவட்டத்தின் அதிகாரியாக இருந்த திரு வால்டர் தேவாரத்தை வழியில் சந்தித்தோம். அவர் நீங்கள் கல்லூரிக்குப் ப�ோகவில்லையா என்று கேட்டார்; உங்களைப் ப�ோல் அதிகாரியாக ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

பணி புரிந்து பதிவி உயர்வும் பெற்றுக் காவல் துறை அதிகாரியாக கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு என் நண்பர் கலெக்டராக இருந்தார். புத்தகம் படிப்பதன் அருமை அன்று தான் எனக்குப் புரிந்தது. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், நாட்டுப்புற ஏழை விவசாயியின் மகனாக இருந்து, குறிக்கோளுடன் கடுமையான உழைப்பும், முயற்சிய�ோடும் எடுத்த ந�ோக்கத்தை அடைய நினைத்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு வழி வகுத்து அதை நிறைவேற்றும்.

நம் வாழ்க்கையில் இலட்சியத்தோடு பயணித்தால் அதை அடைந்துவிடலாம் அல்லவா? அதைப் பற்றிய என் நண்பர் புத்தகங்கள் அதிகம் படிக்கும் பழக்கம் உங்களின் கருத்து என்ன?

க�ொண்டவர். துப்பாக்கி சுடுவது, நன்றாக உடற்பயிற்சி செய்வது,என்.சி.சியில் சேருவது ப�ோன்று அவர் கூறிய அனைத்தையும் செய்தேன். தேர்வில் வெற்றி பெற்று எனக்குக் காவல் துறை அதிகாரி பதவியும் கிடைத்தது. என் நண்பருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், என் நண்பர் எழுத்துத் தேர்வில் என்னை 12 டிசம்பர் 2019

இலட்சியத்தோடு பயணிப்பதிலும் கவனம் வேண்டும். ஒரே ஒரு இலட்சியத்தில் தான் பயணிக்க வேண்டும். சிங்கம் மிகவும் பலசாலியானது. மான் அதைவிட பலம் குறைவானது. ஆனால் அந்தச் சிங்கம் இரண்டு மானை ஒரே நேரத்தில் விரட்டினால் www.Magazine.ValaiTamil.com


வெற்றி கிடைக்காது. அது ப�ோல இலட்சியம் ஒன்றாக கேமேரா முன் நடக்கும். ஒருவர் பணம் டெபாசிட் இருக்க வேண்டும் ஆனால் அடையும் பாதை பண்ண நிற்பவரிடம், உங்க காரை யார�ோ எடுத்துச் வெவ்வேறாக இருக்கலாம். செல்கிறார்கள் என்று கார் நம்பர�ோடு ச�ொல்வான், அவர் பணத்தைக் கேஷியரிடம் பார்த்துக் க�ொள்ளச் ஆப்பிரிக்கக் காடுகளில் கீழ் வானம் சிவக்கும் ப�ோது ச�ொல்லிவிட்டு ஓடுவார். அதற்குள் பணத்தைத் ஒரு பக்கம் மான், இன்னொரு பக்கம் சிங்கம் வந்து திருடி விடுவார் ஒருத்தர். அதே சமயம், வங்கிக்குள் நிற்கும். சிங்கத்திற்கு மானை உண்டு பசியாற்றிக் இருக்கும் கேஷியரிடம் சென்று உங்கள் மனைவிக்குச் க�ொள்ளும் ஒரே ஒரு வேலை மட்டும் தான். சீரியஸாம் நீங்க இன்னும் ப�ோகவில்லையா என்று ஆனால் மானுக்கோ சிங்கத்திடம் இருந்து தன்னைப் ஒருவர் ச�ொல்வார். அவர் பதறி எழுந்து ப�ோக, இந்த பாதுகாத்துக் க�ொள்ளவும் வேண்டும் அதே சமயம் இடத்தில் கையில் இருக்கும் பணத்தை எடுப்பார் தான் பசியாறவும் வேண்டும். இன்னொருத்தர். திருடும் ப�ோது வேளையில் பதட்டத்தில் நிகழும் தவறுகளைக்கூட அழகாகச் வலிமையுள்ள ஒரு சிங்கம் 14 முறை விரட்டினால் சமாளிப்பார்கள். தான் வலிமை குறைந்த மானைப் பிடிக்க முடியும். பலசாலியான சிங்கத்திடம் இருந்து மான் பலமுறை இதற்கு டி.ராஜேந்திரன் என்ற ஒரு டிஜிபி திருச்சியில் தப்பிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் நினைத்தால் இதைப் பிடிக்கலாம் என்று மான் உயிர்க்காக ஓடுகிறது; சிங்கம் பசிக்காக ச�ொன்னார். அவர்களைப் பிடிக்க ஊருக்குள் நடக்கும் ஓடுகிறது. வாழ்க்கையில் இலட்சியத்தை அடைய திருமணத்திற்குச் சென்று அந்த வீடிய�ோவில் உள்ள வேண்டுமென்றால் நம் ஓட்டம் உயிர்க்கான ஆட்களை சி.சி கேமிராவில் உள்ள ஆட்களுடன் ஓட்டமாக இருக்க வேண்டும், உணவுக்கான ஒப்பிட்டு, பின் ஓட்டுப் ப�ோடுபவர்கள் லிஸ்டில் ஓட்டமாக இருக்கக்கூடாது. தகுதியுள்ளவை மட்டுமே முகவரி எடுத்து 111 பேர்களைக் கண்டுபிடித்தோம். வாழ முடியும். வாழ்க்கையில் இலட்சியத்தை ந�ோக்கி திருச்சியில் அவர்கள் திருடுவதற்காகத் திருவிழா ஓடும்போது சிந்தனை சிதறல்கள் இல்லாமல் ஓட எடுப்பார்கள். அங்குள்ள சாமி சிலையில் மாலை வேண்டும். இருந்தால் திடுடப் ப�ோகிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை, திருவிழா நாளில் அங்கிருந்த ஒரு தைரியமாக இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் க�ொன்று ஆசிரமத்தை ரெய்டு பண்ணப் ப�ோகிற�ோம் என்று பதவி உயர்வு, ர�ௌடிஸ்சிம் ஒழித்து அமைதியை ச�ொல்லி அவர்கள் இடத்தை வட்டமிட்டோம். அங்கு நிலைநாட்டிப் பல பதக்கங்கள், காவல்துறையில் திருவிழா நடந்து முடிந்ததும் ஒரே நேரத்தில் 111 மிக உயரிய விருதான ஜனாதிபதி விருது எனப் பல பேரையும் சிறை பிடித்தோம். மூன்று மாதம் சிறையில் பதக்கங்கள், விருதுகள் வாங்கியவர் நீங்கள். உங்கள் இருந்தார்கள். இந்தத் திருடர்களின் புகைப்படம் காவல்துறை பணியில் நீங்கள் சாதித்ததாக நினைக்கும் ரயில் நிலையம் ப�ோன்ற பல இடங்களில் ஒட்டி சாதனை, நெகிழ வைத்த தருணங்கள் எவை? விட்டதும் அவர்கள் பிள்ளைகள் இவர்களைப் பார்க்க வரவேயில்லை. பின் இவர்கள் என்னிடம் காவல்துறையில் நான் நெகிழ்ந்த தருணம். திருச்சியில் பேச வேண்டும் என்றனர். அவர்களிடம் “ நீங்கள் ராம்ஜி நகரில் கவனத்தைத் திசைத் திருப்பி திருடும் உயிர�ோடு வருவீர்களா இல்லையா என்று தெரியாமல் கூட்டத்திற்கு மறு வாழ்வு க�ொடுத்தது. இலட்சத்தை வீட்டில் கஷ்டப்படுவார்கள் இதெல்லாம் தேவையா?” வங்கியில் ப�ோட நிற்பவரிடம் வந்து நூறு ரூபாய் என்று பேசினேன். அப்பொழுது அவர்கள் எங்களைத் ந�ோட்டை ஒருவர் கீழே ப�ோடுவார். அந்த திருடர்கள் என்று வெளியில் காண்பித்து விட்டீர்கள்; 10 இலட்சத்தை விட்டு விட்டு நூறு ரூபாய்க்கு இனி இங்கு வேலை கிடைக்காது. வெளிநாட்டிற்குப் ஆசைப்பட்டுப் பணத்தைக் கீழேயிருந்து எடுக்கும் ப�ோக பாஸ்போர்ட்டும் எடுக்க முடியாது நாங்கள் தருணத்தில் திருட வந்தவன் அந்த 10 இலட்சத்தை என்னதான் செய்ய? என்றனர். இவர்கள் பிரச்சனையை எடுத்துவிடுவார். இது அத்தனையும் பட்டப்பகலில் அப்பொழுது முதலமைச்சரான திரு.கருணாநிதி டிசம்பர் 2019 13 www.Magazine.ValaiTamil.com


அவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தேன். என் உரையைக்கேட்டு கருணாநிதி அவர்கள் நல்லா தமிழ் பல கல்வியாளர்கள் இருக்கும் ப�ோது காவல்துறை பேசுகிறாய் என்றார். வங்கியில் இவர்களுக்குக் கடன் அதிகாரியின் கல்வி சம்பந்தமான பேச்சு வாங்கி அவர்களுக்கு வாழ்க்கை நடத்த உதவினேன். பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது என்பது மிகவும் நெகிழ்ச்சியானது. அதற்காகத் திரு உதயசந்திரன் காவல் துறை பணி என்பது பல நெருக்கடிகள் ஐ.எ.எஸ் அவர்களுக்கு என் நன்றி. நிறைந்த சவாலான ஒன்று. இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் காவல்துறையில் சாதனை புரிந்து நீங்கள் அலுவலகங்களில் மற்றும் பல இடங்களில் பல மேடைப் பேச்சிலும் அங்கீகாரம் பெற்று உலக நெருக்கடிகளைக் கையாள வேண்டி இருக்கின்றது. சாதனை படைத்திருக்கிறீர்கள். அதைப் பற்றிச் இந்த நெருக்கடிகளை நீங்கள் எப்படிக் கையாண்டு ச�ொல்லுங்களேன். வெற்றி பெற்றீர்கள்? 100 நாட்களில் வேறுபட்ட இடங்களில் 1000 எந்த ஒரு பணியும் இதயப் பூர்வமாக நேசித்துச் செய்யும் பேருக்கும் மேல் இருக்கும் இடத்தில் ஒரு மணி ப�ோது எதையும் சமாளிக்கலாம். பிரச்சனைகள் வரும் நேரத்திற்குள் மாறுபட்ட தலைப்பில் பேசினால் உலக ப�ோது தடுமாறாமல் மாற்றி ய�ோசிக்க வேண்டும். சாதனை என்று ச�ொன்னார்கள். நான் உலக சாதனை வித்தியாசமான சிந்தனையால்தான் வெற்றி பெற படைக்க வேண்டும் என்று பேசவில்லை. தானாக முடியும். நடந்த சாதனை இது. 35 ஆண்டுகள் காவல்துறையில் குற்றவாளிகள், துப்பாக்கி, விசாரணை என்ற வட்டத்துக்குள் வாழ்ந்த நீங்கள் இன்று மேடைப் பேச்சில் ஈடுபடும் ஆர்வம் எப்படி வந்தது? சாதாரணமாக நான் பேசுவதைப் பார்த்து மிகப் பெரிய ஆட்கள் எல்லாம் என்னைப் பேச ஊக்குவிக்கும் ப�ோது நிறையப் பேச ஆரம்பித்தேன். பின் தமிழ் இலக்கியம் படித்துப் பட்டம் பெற்றேன். உண்மையான அனுபவங்களையும் இலக்கியத்தையும் சேர்த்து நன்றாகத் தயார் செய்து பேச ஆரம்பித்தேன். அது நல்ல வரவேற்பைக் க�ொடுத்தது. உங்கள் பேச்சு கல்விப் பாடமாக மாறியிருக்கின்றது. அது மிகப் பெரிய சாதனை. இந்த அனுபவம் பற்றிச் ச�ொல்லுங்களேன்.

14 டிசம்பர் 2019

காவல்துறையில் நீங்கள் இன்ஸ்பெக்ட்டராக பணியில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி ஐ.பி.எஸ் ஆக வளர்ந்திருக்கிறீர்கள். தங்களைப்போல் வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது என்ன? இலட்சியம், முயற்சி, கடுமையான உழைப்பு மற்றும் எந்தவிதமான சிந்தனை சிதறல்களும் இல்லாமல் ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து, வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் பயணித்தால் வெற்றிக் கதவைத் தட்டும். இந்த நேர்காணல் நிகழ்வைப் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பை ச�ொடுக்கவும் https://www.youtube.com/watch?v=PYdJjtQl2ko

www.Magazine.ValaiTamil.com


டெல்டாவில் தீபாவளி

பசுமை ச�ோமு இரவிச்சந்திரன்,சிங்கப்பூர்

திருவாரூர்

மூவாநல்லூரில் த�ொடங்கி வடுவூர் வரை உள்ள பத்துக் கிராமங்களிலுள்ள நீர் நிலைகளைச் சுற்றி “நமது கிராமம்” இளைஞர்கள் ப�ொதுமக்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு குளக்கரையிலும் நன்கு வளர்ந்த இரண்டு ஆலமரக்கன்றுகள், இரண்டு அரசமரக்கன்றுகள் மேலும் வேங்கை, நீர்மருது, புளியம், வாதாம், சென்பகம், மகிழம் என 15 வகையான 2000 மரக்கன்றுகள் ரூ 5 லட்சம் செலவில் நடப்பட்டன. மரக்கன்றைச் சுற்றி நான்கு உயரமான மரக்கம்புகள் நட்டு, பின்னர் அதைச் சுற்றி அழுத்தமான பாதுகாப்புக் கூண்டுகள் என மிக பாதுகாப்பான முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளுக்கு ஒரு வருடம் த�ொடர்ந்து தண்ணீர் ஊற்றி, மரக்கன்றுகளைக் கவாத்து செய்து கடந்த க�ோடைக்காலத்தில் இளைஞர்கள் எல்லாம் பராமரிக்க மாத ஊதியத்தில் பணியாளர்கள் நியமிக்கப் ஒன்று சேர்ந்து “நமது கிராமம்” என்ற அமைப்பை பட்டுள்ளனர். உருவாக்கிப் ப�ொதுமக்கள் ஆதரவுடன் குளம், குட்டை, வாய்க்கால்களைத் தூர்வாரி, கிட்டத்தட்ட இந்தத் தீபாவளிக்குக் குளக்கரைகளும், கண்மாய்களும் 15 வருடங்களுக்குப் பிறகு 25-க்கும் மேற்பட்ட புத்தாடை கட்டி நிற்பது ப�ோல் அழகாகக் குளங்களைக் காவிரி நீரால் நிரப்பினார்கள். காட்சி தருகிறது. தீபாவளி க�ொண்டாடச் ச�ொந்த ஊருக்கு வந்திருந்த மக்கள் கடும் மழையையும் “நமது கிராமம்” இளைஞர்களின் இந்தச் செயலை ப�ொருட்படுத்தாது இப்பணியில் மகிழ்வுடன் வியந்து பார்த்த சிங்கப்பூரைச் சேர்ந்த “பாதை” பங்கேற்று மன நிறைவுடன் தீபாவளியைப் பசுமை அறக்கட்டளை இயக்குநர்கள் திரு.இரவிச்சந்திரன் தீபாவளியாகச் சிறப்பாகக் க�ொண்டாடினார்கள். மற்றும் திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆகிய�ோர் மீண்டும் இந்த நீர் நிலைகள் வடிவம் மாறாமலும், இந்த நற்பணிக்கு “பாதை” அறக்கட்டளைக்கு ஆக்கிரமிக்கப்படாமலும் காக்க உருவாக்கிய திட்டமே நன்கொடை க�ொடுத்த நல்ல உள்ளங்களுக்கு “நமது “பசுமை தீபாவளி” கிராமம்” இளைஞர்கள் மற்றும் கிராமவாசிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள். மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிலுள்ள மூவாநல்லூர், ராஜாளிக்குடிக்காடு, அமரபாகம், வெட்டிக்காடு, பருத்திக்கோட்டை, எட கீழையூர், எட மேலையூர், எட அன்னவாசல், புள்ளவராயன்குடிக்காடு மற்றும் வடுவூர் கிராமங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி “பாதை” அறக்கட்டளை உதவியுடன் “நமது கிராமம்” இளைஞர்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் மற்றும் வாய்க்கால் கரைகளில் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு தீபாவளி பண்டிகையைப் பசுமை தீபாவளியாகக் க�ொண்டாடினார்கள்.

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 15


நீர் உடும்பு அறிவியல் அறிவ�ோம்

ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர், yercaudelango@gmail.com

தமிழ்

உடலமைப்பு கொமோடா டிராகன் (Komodo dragon) என்கிற பல்லிதான் உலகத்திலேயே மிகப்பெரியது ஆகும். அதற்கு அடுத்தபடியாக நீர் உடும்பே இரண்டாவது பெரிய பல்லியாகும். இது ஒரு குளிர் ரத்தப்பிராணி. இந்த உடும்பு தன் வாழ்நாள் முழுவதும் வளர்கிறது. பெண்ணை விட ஆண் பெரியது. சுமார் 1.5 முதல் 2 மீட்டர் வரை அதாவது 5 – 6.6 அடி நீளம் வரை வளரும். இலங்கையில் 10.5 அடி நீளம் கொண்ட ஒரு நீர் உடும்பை ஆவணப்படுத்தியுள்ளனர். உடும்பு பெரிய ஊர்வனவாகும். இது இந்த உடும்புகள் சுமார் 19 கிலோ எடை வரை பல்லி வகையைச் சேர்ந்த பேரினமாகும். நீர் வளர்ச்சியடையும். உடும்பானது (Water monitor) தென் மற்றும் தென் கிழக்குப் பகுதியைத் தாயகமாகக் இந்த நீர் உடும்புகளின் நீளம் மற்றும் எடை கொண்டுள்ளது. அதாவது இலங்கை, நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இவற்றுக்குக் இந்தோனேசியா தீவுகள் மற்றும் இந்தியாவின் கூரான தலையும், மெல்லிய கழுத்தும் உண்டு. கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்றன. மலேய நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு அசைந்து, நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, ஆசிய நீர் அசைந்து நடந்து செல்லும். வலுவான உடும்பு, இருபட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, தாடையும், கூரிய பற்களும் கொண்டுள்ளன. மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியீடுகள் வாலானது சாட்டை போல் நீண்டுள்ளது. இல்லா பல்லி எனப் பல்வேறு பெயர்களால் நகத்தையும், வாலையும் ஆயுதமாகப் இதனை அழைக்கின்றனர். இருப்பினும் பயன்படுத்துகிறது. உடலானது அடர் பழுப்பு பொதுவாக வாட்டர் மானிட்டர் அதாவது நீர் அல்லது கருப்பு நிறமுடையது. உடலின் உடும்பு என்றே அழைக்கப்படுகிறது. அடிப்பகுதியில் மஞ்சள் நிற அடையாளங்கள் இருக்கும். நீர் உடும்பு வளர வளர மஞ்சள் நாட்டில் வாழ்பவர்கள் உடும்பு எனப்படும் ஊர்வனத்தைப் பார்த்திருப்போம். ஆனால் நீர் உடும்பைப் பார்த்திருக்க முடியாது. நான் இலங்கையில் முதன் முதலாக நீர் உடும்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். சிங்கள மொழியில் கபராகோயா (Kabaragoya) மற்றும் சபாலா எனப் பெயர். அங்கு வாழும் தமிழர்கள் இதனை கலாவதன் (Kalawathan) என்கின்றனர்.

16 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


நிறம் மறைந்து விடும்.

ஆய்வுகள் நடத்தப்பட்டது இதன் வாயில் விஷச் சுரப்பிகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இதன் வாயில் உணவுப் பழக்கம் ஒரு வகையான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இது ஒரு அனைத்துண்ணி. இது நீரில் நன்கு மனிதனையோ அல்லது விலங்கையோ கடித்து நீந்தும். மிக அதிகளவில் வேட்டையாடி உண்ணும் விட்டால் பாக்டீரியா தொற்றுகளால் பாதிப்பு பழக்கமுடையது. மீன், தவளைகள், பறவைகள், ஏற்படும். அதனால் உயிரிழப்பு நேரிடலாம். ஒரு பாம்புகள், நண்டுகள், எலி, கொறித்துண்ணிகள் விலங்கை இறையாகப் பிடிக்கும் போது இதன் போன்றவற்றை உண்ணும். மேலும் ஆமை, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இதற்கு உதவுகின்றன. முதலையின் முட்டைகள், குட்டிகள் ஆகியவற்றையும் பாக்டீரியாக்களின் உதவியால் உணவு எளிதில் உண்கிறது. மேலும் இவை கெளுத்தி மீன்களை செரிக்கப்படுகிறது (Catfish) விரும்பி உண்கிறது. தனது முன்கால்களால் இறையை நன்கு பிடித்துக் கொண்டு கூரிய பற்களால் பாதுகாப்பு மாமிசத்தைத் துண்டுகளாக்கி அதன் பின்னர் நீர் உடும்பின் விலங்கியல் பெயர் வாரனஸ் சால்வாடர் விழுங்குகின்றன. (Varanus salvator) என்பதாகும். இதில் சில கிளை இனங்களும் உள்ளன. இந்தோனேசியாவில் இதைச் நீர் உடும்பு நீரிலும், நிலத்திலும் உள்ள விலங்குகளை சமைத்து உண்கின்றனர். சில நாடுகளில் இதனை வேட்டையாடுகின்றன. நீர் நிலைகளை ஒட்டிய வேட்டையாடி தோல் வர்த்தகம் செய்கின்றனர். பகுதிகளில் அதிகம் திரிந்து கொண்டிருக்கும். தனது வருடத்திற்கு 1.5 மில்லியன் நீர் உடும்புத் தோல்கள் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வர்த்தகம் செய்யப்படுகிறது. பெல்ட், காலனிகள், மரத்தில் ஏறுவதும் உண்டு. பிறகு அருகில் உள்ள தோள் பை மற்றும் ஃபேஷன் பொருட்களும் ஓடை, நீர் நிலைகளில் குதித்து தன்னைப் பாதுகாத்துக் இதன் தோலில் தயாரிக்கின்றனர். தற்போது இதன் கொள்கிறது. நீரில் நீந்தும்போது தனது வாலைத் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நீர் உடும்பைப் துடுப்பாகப் பயன்படுத்துகிறது. பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையும் மக்களிடம் இல்லை. ஆகவே இதைப் பாதுகாக்க வேண்டும் விஷம் எனப் பன்னாட்டு இயற்கை அமைப்பு வலியுறுத்தி நீர் உடும்பிற்கு விஷம் இருக்கிறதா என்கிற வருகிறது.

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 17


நேர்காணல்

குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்.. தங்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள்.. இரமா ஆறுமுகம், டெலவேர்,அமெரிக்கா

தமிழகத்தில் உடன்குடியைப் பூர்விகமாகக் க�ொண்டு தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரியும் நண்பர் ஆமித் சா . இவர் சமீபத்தில் பிறந்த தன் பெண் குழந்தைக்கு அவிரா என்று அழகு தமிழில் பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து ஒரு நேர்காணல்… இரமா: வணக்கம் ஆமித். புரியாத ம�ொழியில் வாயில் நுழையாத பெயர்கள் வைப்பதைப் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கும் இந்தக் காலத்தில் இஸ்லாமிய நம்பிக்கை க�ொண்ட நீங்கள் உங்கள் மகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியது மிகவும் சிறப்பு. உங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று கூற முடியுமா?

வருடங்கள் பணிபுரிந்த பின் வேலையைத் துறந்து விட்டு இரண்டு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். அதன் பின் பணி நிமித்தமாகப் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். என் பயண அனுபவங்களால், தாய்மொழி தமிழ் மேலுள்ள பற்று பன்மடங்கு அதிகமாயிற்று. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், யாராவது அன்புச் செல்வன், கார்மேகம் என்று தமிழ்ப் பெயருடன் அறிமுகம் செய்து க�ொண்டால் ஏற்படும் இன்பம் மற்றும் த�ோழமையே தனி. அதனால் ஆமித்: வணக்கம் இரமா. நான் படித்து முடித்து 5 எனக்குத் திருமணமாகிக் குழந்தை பிறக்கும் ப�ோது

18 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு இரமா: எப்படி நீங்கள் உறுதியாக இருந்து செய்து விட்டேன். நினைத்ததைச் சாதித்துக் காட்டினீர்கள் என்பதைக் கேட்கவே பெருமையாக இருக்கிறது. இரமா: உங்கள் முயற்சிக்கு உங்கள் வீட்டில் எப்படி உங்கள் மகளுக்கு அவிரா என்று பெயர் கிடைத்த ஆதரவைப் பற்றிக் க�ொஞ்சம் ச�ொல்ல சூட்டினீர்கள். இந்தப் பெயர் ப�ொது வழக்கில் முடியுமா? இல்லாத பெயராக இருக்கிறதே? ஆமித்: என் மனைவியும் என்னைப் ப�ோல் சிந்திக்கக் கூடியவர் தான். அவரிடம் இதைப் பற்றிக் கூறிய ப�ோது உடனே ஏற்றுக் க�ொண்டு விட்டார். ஆனால் என் பெற்றோர்களைச் சம்மதிக்க வைப்பது தான் சற்று சவாலான காரியமாக இருந்தது. ஒரு இஸ்லாமியரின் பெயர் அரபி ம�ொழியில் தான் இருக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் கருதினார்கள். நான் உலகின் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் முதல் பெண் அதிபர் திருமிகு மேகாவதி சுகர்னோபுத்ரி இஸ்லாமியராக இருந்தாலும் பெயர் சமஸ்கிருத ம�ொழியில் இருக்கிறது. அது மட்டுமல்ல, இன்னொரு பெரிய இஸ்லாமிய நாடான துருக்கியின் அதிபர் இஸ்லாத்தைப் பின்பற்றும் திருமிகு ரிசப் டய்யிப் எர்டோகன் பெயரும் அரபி ம�ொழியில் இல்லை என்று எடுத்துக் கூறினேன். மத்தியக் கிழக்கு நாடுகளில் கடுமையான இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் ஏற்படுவதற்கு முன்னால் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களின் பெயர்கள் தமிழில் வழங்கியதையும் தற்போது கூட என் உறவினர்கள் சிலரின் பெயர் ராஜா முகமது மற்றும் ர�ோஜா என்று இருப்பதையும் எடுத்துரைத்தேன். மேலும் தமிழ்ப் பெயர் என்றாலே இந்துக் கடவுள்களின் பெயராக இருப்பதை என் பெற்றோர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு நான் ஆறுமுகம், வேலன், பிறைசூடன் ப�ோன்ற பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்கள் தான். ஆனால் இளமாறன், கயல், அன்பு, பால் நிலா ப�ோன்ற மதம் மற்றும் கடவுள் சாராத தமிழ்ப் பெயர்களைச் சூட்டலாமே என வாதிட்டேன். கடைசியில் நான் ச�ொல்வதை ஏற்றுக் க�ொண்டு என் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டச் சம்மதித்தனர்.

www.Magazine.ValaiTamil.com

ஆமித்: எல்லோரும் ஏற்றுக் க�ொள்ளக்கூடிய தமிழ்ப் பெயரைக் கண்டுபிடிப்பது அடுத்த சவாலாக இருந்தது. நாங்கள் நிலவுடன் த�ொடர்புடைய பெயரை வைப்பது என்று முதலில் முடிவு செய்து விட்டு நிலவுடன் த�ொடர்புடைய பெயர்களைத் தேடின�ோம். இதில் திருவள்ளுவரைத் தவிர வேறு யார் நமக்குச் சிறப்பாக உதவிட முடியும் ? திருக்குறளில் 1117 ஆம் குறளான “அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் ப�ோல மறுவுண்டோ மாதர் முகத்து” என்ற குறளிலிருந்து அவிர்மதி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம். அவிர்மதி என்ற பெயர் பழைய காலத்துப் பெயர் ப�ோல் தெரிகிறது என்று என் மனைவியும் பெற்றோர்களும் கருதியதால், ஒளி அல்லது வெளிச்சம் என்ற ப�ொருள் தரும் வகையில் அவிரா என்று சுருக்கி என் மகளுக்குப் பெயர் சூட்டின�ோம். இரமா: நம் தமிழ் ம�ொழி நமது அடையாளம். மதம் என்பது தனி மனிதரின் நம்பிக்கை சார்ந்த விஷயம். தமிழர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டி நம் அடையாளத்தைக் காப்பது இன்றைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. வீட்டினரைப் புரியவைத்துத் தமிழில் பெயர் சூட்டும் உங்களைப் ப�ோன்றவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். உங்களைப் ப�ோன்றவர்களைப் பின்பற்றிப் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிற�ோம். ஆமித்: நிச்சயமாக. வலைத்தமிழுக்காக என்னை நேர்காணல் செய்ததற்கு நன்றி. வணக்கம்.

டிசம்பர் 2019 19


கவிதை

என் இனிய சர்க்கரை ந�ோயே! ம�ோ.வெங்கட்ராம்வாசி , சென்னை

அரிசிச் சாப்பாடு பிடிப்பவரை

மிரட்டுவாய்.

உனக்குப் பிடிக்கும்.

எம்மைக் காதலித்துத் தூக்கம் கெடுக்கிறாய்.

க�ோதுமை உன் கூட்டாளி.

கண்களில் ஒளி ப�ோக்கி...

சப்பாத்திகளை உணவில் கூட்டினாலும்

சிறுநீரகங்கள் பழுதாக்கி...

நீ பெருக்கப் படுகிறாய்.

இதயத்தை 'துடி துடிக்கச் செய்து'...

அமர்ந்தே பணி செய்வோர்

உள்ளிருப்புப் ப�ோராட்டத்தால் உள்ளுறுப்புகள்

உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்யாவிடில்...

தாக்குகிறாய்.

அவரிடம் நீ

முன்பு பணக்காரர் பக்கமிருந்தாய். சமத்துவச்

அமர்ந்தே பணி செய்கிறாய்.

சிந்தனை வந்து...

உயிர்க்கொல்லிப் பயிர் நீ...

நடுத்தர,ஏழை மக்களிடம் புரவியின்றிப் பரவினாய்.

உன்னைச் சாகுபடி செய்வாரைச்

உன்னில் சில வகைகள்.

சாகும்படி செய்கிறாய்.

துன்பம் வரின் கண்ணீர் சுரக்கும்.

உன்னைப் பணமாக்கப் பார்ப்போரும்

கணைய நீர் சுரக்காவிடில் துன்பம் வரும். இது முதல்

குணமாக்கப் பார்ப்போரும்...

வகை.

வேறு வேறு கூட்டம்.

குருதியிலிருந்து சர்க்கரையைப் பிரித்துச்

பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப்

செல்களுக்கனுப்பும் கணையநீர்.

ப�ோகும் ச�ொத்துக்களில் நீயுமுண்டு.

கணையநீர் சுரந்தும் செயலிழந்தால்...

உன்னைப் பற்றிய அறிவு

இது இரண்டாம் வகை.

நீ பற்றிய பிறகும் வருவதேயில்லை பலருக்கு.

செல்களுக்குச் செல்லாமல் குருதியில் தேங்கும்

காதல் ந�ோயென்று

சர்க்கரை.

பாடும் கவிகள்

இனிப்பான உன்னை...

உன்னைப் பாடுவதில்லை.

கசப்பு,துவர்ப்பு உண்டு எதிர்ப்போம்.

நீ ந�ோயில்லை.

நெல்லியைக் கிள்ளித் தின்போம்.

சில ந�ோய்களின் மாநாட்டு மேடை.

நாவல் பழத்தை நா படத் தின்போம்.

உன் பிறப்பிடங்கள்...

பாகற்காயைப் பாங்காய்த் தின்போம்.

வெள்ளைச் சீனி,

கடுக்காய் தின்று மிடுக்காய்த் திரிவ�ோம்.

இருட்டுக் குளிர்பானம்,

ய�ோகாசனம், மூச்சுப்பயிற்சி செய்வோம்.

துரித உணவுகள்.

விரைவில்...

அமைதிப் படை நீ தான்.

நுண் கருவியை மாத்திரையில்

வருவதும் தெரியாது,

உடலுக்குள் செலுத்தி...

க�ொல்வதும் தெரியாது.

சில மாத்திரைகளில்

உன்னை அளப்போம்...

கணையத்தைச் செப்பனிடுவ�ோம்.

வெறும் வயிற்றில் (FP),

கணையத்தின் பணியைக் கண்காணிக்க...

உண்டபின் 2 மணிகள் கழித்து(PP).

கைப்பேசி செயலி செய்வோம்.

அவற்றில்...

புவியியலில் க�ோட்டைவிட்டாலும்

கட்டுப்பாட்டிலிருப்பதாய் கண்ணாமூச்சி காட்டி...

அறிவியலில் முன்னேறும் மனிதர்

3 மாதச் சராசரியில்(Hba1c) உயர்ந்து நின்று

உன்னை ஒழிக்கும் நாள் விரைவில் வரும்.

20 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


அறிவியல் தமிழ் திரு. இரா. ராஜராஜன்,சென்னை,இந்தியா

தமிழ் ம�ொழியானது கலை, கலாச்சாரம்,இலக்கியம், இறைமை, அறிவியல் என்ற மானுடத்தின் அனைத்துத் தேவைகளையும் க�ொண்ட ம�ொழி என்பதைத் தாண்டி இன்ன பிற பன்முகக் கூறுகளைக் க�ொண்ட ம�ொழி மட்டுமல்ல, நுண்ணிய அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய ம�ொழியும் நம் தமிழ் ம�ொழி நிலம், நீர், தீ, காற்று என்ற இயற்கைக் கூறுகளெல்லாம் த�ோன்றி, மனித இனம் என்று த�ோன்றியத�ோ அன்றே த�ோன்றிய ம�ொழி, உயர்தனிச் செம்மொழி, உலக ம�ொழிகளில் தலை சிறந்த ம�ொழி என்பவையெல்லாம் நம் பெருமைக்குரிய உண்மைகள் என்றாலும், இம்மொழியின் தன்மை, த�ொன்மை, முதன்மை இவற்றை அடிய�ொற்றி ந�ோக்குகின்ற ப�ோது இது அறிவியலுடன் இணைந்த ம�ொழிதான் என்றாலும், தற்போது ஆங்கில வடிவில் உலவி வரும் அறிவியல் கலைச் ச�ொற்களையும், ஆங்கிலத்தில் ச�ொல்லி, படித்து, எழுதிப் பழகிப் ப�ோன அறிவியல் நிரூபணங்களையும், பல்வேறு அறிவியல் எடுக�ோள்கள், கருத்துகள் இவற்றைத் தெள்ளத் தெளிவாகப், படித்து, எழுதிட இயலவில்லை என்ற ப�ொதுவான கருத்து நிலவி வருவது உண்மையே. உள்ளத்தால் உணர்ந்து தமிழ் வழியாக அறிவியலைப் படித்தால் சிந்தனை சக்தியும், ஆக்கமும் பெருகும் என்ற குரல் ஆங்காங்கே ஓங்கி ஒலித்தாலும், உலகளாவிய பார்வையில், உலக நாடுகளுடன் செய்தித் த�ொடர்பிற்கு ப�ொது ஊடகமாக ஆங்கிலம் உருவாக்கப்பட்டு விட்ட நிலையில், முற்றிலும், தமிழில் அறிவியலைக் க�ொணர்வதில் தயக்கம் இருப்பது உண்மை. ஆனால், தமிழ் அறிவியலைத் தன்னுள் க�ொண்ட ஒரு அறிவியல் ம�ொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழில் அறிவியல் உள்ளிட்ட அத்துணைப் பிரிவுகளும் த�ொன்று த�ொட்டு உள்ளன என்பது மட்டுமல்ல, அவற்றையெல்லாம் உள்வாங்கிக் க�ொள்ளும் தன்மையும் உள்ளது என்பதை அறிய வேண்டும். www.Magazine.ValaiTamil.com

பரிணாம வளர்ச்சிக் க�ொள்கையை (Evolution Theory) சார்லஸ் டார்வின் தந்ததை உணர்ந்து ப�ோற்றுகிற�ோம் ; தவறில்லை; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இதே க�ோட்பாட்டை, “ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதன�ோடு நாவே மூன்றறிவு அதுவே அவற்றோடு மூச்சே நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே “ என்ற த�ொல்காப்பியர் தந்த த�ொல்காப்பியம் உள்ளடக்கிய அறிவியலை உணர்ந்தோமா? எப்படி நாம் வாழுகின்ற இந்தப் பூமிப்பந்து த�ோன்றியிருக்கக் கூடும். அண்ட சராசரங்கள் உருவாகியிருக்கக் கூடும் என்பதைச் ச�ொல்லுகின்ற Big Bang Theory அதாவது, “விண்ணுலகில் அனைத்துப் ப�ொருட்களும் ஒரே ஒரு மிக அடர்த்தியான நெருப்புக் க�ோளமாக இருந்திருக்க வேண்டும். இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்த நெருப்புக் க�ோலம் வெடித்துச் சிதறி, பல திசைகளிலும் வியாபித்து, அவைதான் க�ோள்களாகவும், வெண்மீன்களாகவும், பால் வழி மண்டலங்களாகவும் மாறியுள்ளன” என்ற செய்தியில் ச�ொல்லப்படும் துகள்களின் இயக்கத்தின் ஐந்து நிலைகளை அமிழ்தல் (With drawing) இமிழ்தல் (Over flowing) குமிழ்தல் (Clustering around in order ) உமிழ்தல் (emitting) தமிழ்தல் (resulting in a well defined form) என்று தமிழில் விளக்கப்படுகிறது. பூமியானது முழுமையான இறுதி வடிவம் பெற்றதைக் குறிக்கும். “தமிழ்தல்” என்ற அறிவியல் ச�ொல்லில் இருந்து பெற்றது தான் தமிழ் என்பது வியப்பிற்குரிய உண்மை மட்டுமல்ல. தமிழை விட இனிக்கும் செய்தியன்றோ! (இனிமை த�ொடரும்...)

டிசம்பர் 2019 21


எழுத்தாளர் ஜெயம�ோகனுடன் கலந்துரையாடல்-3

விஜய் சத்யா,வெர்ஜீனியா,அமெரிக்கா

தமிழர் க�ோவில், சிற்பக் கலை, அறிவுத்தளத்தில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த வீழ்ச்சியைப் பற்றிப் பேசினீர்கள். அதை மீட்பதெப்படி? அதன் தற்போதைய ஆய்வுக்கு வழிகாட்டக்கூடிய அறிஞர்களை அறியப்படுத்தவும். இன்றைக்குத் தமிழ்ச் சிற்பக் கலையில் தேர்ந்த ஸ்தபதிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் குல வரிசையாகப் பயிலக்கூடிய கணக்கு நூல்கள் தான் நாம் ஆலயத்தையும், சிற்பத்தையும் அறிந்துக�ொள்ளக்கூடிய மூல நூல்கள். அவர்களை வரவழைத்து இதைப் பற்றி அறிய வேண்டும். மரபான நூல்கள் வேறு இல்லை. இதற்கு வெளியே இருக்க கூடிய நூலென்றால் குமரி மாவட்டத்தைச் சார்ந்த டி.ஏ. க�ோபிநாத் ராவ் ஆங்கிலத்தில் 1914-களில் எழுதிய எளமன்ட்ஸ் ஆப் ஹிந்து ஐகந�ோகிராபி (Elements of Hindu Iconography T.A. Gopinatha Rao) என்ற பெரிய நூல். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் உதவிய�ோடு இந்த ஆய்வு நடந்தது. அதன் பின் ஒட்டு ம�ொத்தமாக ஒரு சிற்பக் கலைக் களஞ்சிய நூல் வரவேயில்லை. உண்மையாகச்

22 டிசம்பர் 2019

ச�ொல்வதென்றால் இவ்வளவு பெரிய சிற்பக் கலை பண்பாடு க�ொண்ட ம�ொழியில் மாநிலத்தில் அதை முழுமையாக ஆவணப் படுத்தும் சிற்பக் கலைக் களஞ்சிய நூல் இல்லை என்பது வெட்கக்கேடு. வேறு எந்தப் பண்பாட்டிலும் இப்படி இருக்காது அகர வரிசைப்படி வரக்கூடிய ஒரு கலைக் களஞ்சியம் உருவாக்க முடியுமென்றால் அது பெரிய ச�ொத்தாக இருக்கும். இந்த மாதிரியான வேலைகளுக்குத் தான் பணம் செலவழிக்க வேண்டும். 1948 -1968 வரை ம. ப. பெரியசாமித்தூரன் பத்துத் த�ொகுதிகள் க�ொண்ட பெரும் தமிழ்க் கலைக் களஞ்சியம் வெளியிட்டார். இன்றுவரை அதற்கு மறுபதிப்பு வரவில்லை. இன்றைக்கு வந்தால் மேலும் 2000 புதிய தலைப்புகள் சேர்க்கவேண்டும். அப்படித் தமிழுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் மலை ப�ோல இருக்கின்றன. செம்மொழி உயராய்வு த�ொடங்கப்பட்டப�ோது பெரும் நிதி இந்த மாதிரி வேலைகள் செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. பல பணிகள் திட்டமிடப்பட்டன. பல பேராசிரியர்களிடம் இந்தப் பணம் க�ொடுக்கப்பட்டது. மிகக் குறைவானவர்களே சில பணிகள் செய்தார்கள். பெரும் பகுதி பணம் அப்படியே காணாமல் ப�ோய்விட்டது. இதுதான் இன்றைய வருந்தத்தக்க கல்வி நிலை. www.Magazine.ValaiTamil.com


நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள். இங்கே அமெரிக்கர்களுக்கென ஒரு த�ொழில் தர்மம் இருக்கிறது. இதை நாம் கற்பிக்கவே முடியாது. ஒரு விசயத்தை முழுமையாகச் செய்வது, உரிய நேரத்தில் செய்வது, ஒத்திசைந்து செய்வது இந்த மூன்று விசயங்களைத் தமிழர்களுக்குச் ச�ொல்லிக் க�ொடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்றே தெரியவில்லை. ஒரு சின்ன வேலையைக் கூட மூன்று பேர் சேர்ந்து செய்வதற்குச் சாத்தியமில்லை. அவர்களுக்குள் 2000 கருத்து ம�ோதல்கள் இருக்கும். நாம் அமெரிக்கா வந்து கற்றுக் க�ொள்வதென்றால் இந்தத் த�ொழில் தர்மம்தான். இந்தத் த�ொழில் தர்மம் ப�ோன தலைமுறைத் தமிழ் அறிஞர்களிடம் இருந்தது. தமிழில் முதல் கலைக்களஞ்சியம் அபிதான சிந்தாமணியை உருவாக்கிய ஆ. சிங்காரவேலு முதலியார், பிறகு பெரியசாமித்தூரன், அகராதியை உருவாக்கிய வையாபுரிப்பிள்ளை இவர்களிடம் த�ொழில் தர்மம் இருந்ததால்தான் அந்தப் பெரும் பணிகள் சாத்தியமானது. அது எப்படிப்போனது என்பது ஆச்சர்யம். இப்போது மிகக் குறைந்த ஆட்களே அப்படி இருக்கிறார்கள். அகா. பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன் ப�ோன்றவர்களைச் ச�ொல்லலாம். அவர்களை இணைத்துக் க�ொண்டு இந்த வேலைகளைச் செய்யமுடிந்தால் நன்றாக இருக்கும். ஹார்வர்ட் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் கல்லூரிகளில் தமிழ் ம�ொழி வகுப்புகளை மாணவர்கள் ப�ொருட்படுத்தவில்லை, மற்ற ஆங்கிலம், அறிவியல் வகுப்புகளுக்கு அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்றார். அதே ப�ோல தமிழ்ச் சங்க நிகழ்வுகளுக்குச் சீரிய இலக்கிய வாசகர்கள் வருவதில்லை. இருப்பவர்களில் சிலருக்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டும் ஈடுபாடு. நவீன இலக்கியங்கள் பரிச்சியமில்லை. ஜெயம�ோகனை அழைத்தாலும் பல எதிர்ப்புகள். உங்கள் அறம் கதைகள், யானை டாக்டர் ப�ோன்ற கதைகளைச் ச�ொன்னால் மிகவும் ரசிக்கிறார்கள். இதை எப்படிச் சரி செய்வது? தமிழ்க் கல்வி இப்படி இருப்பதற்குக் காரணம், உயர்கல்வி என்றால் வாழ்க்கைக்கு உத்தரவாதம் க�ொடுக்க வேண்டும். அப்படி உறுதிப்பாடு க�ொடுக்காவிட்டால் யாரும் வரமாட்டார்கள். இன்றைக்குள்ள அப்பட்டமான நிலை பல இலட்சங்கள் க�ொடுக்காமல் ஆசிரியராக முடியாது. முனைவர் பட்டம் கிடைக்கும் வரை ஊக்கத் த�ொகை கிடைப்பதால் பெரும்பாலும் தலித் மாணவர்கள், www.Magazine.ValaiTamil.com

குறிப்பாகப் பெண்கள் படிக்கிறார்கள். இது முப்பது வயது வரை வருமானம் கிடைக்க வழி. பின் திருமணம் செய்துக�ொண்டு ப�ோய்விடுகிறார்கள். அவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குக் கல்லூரியில் வேலை கிடைக்கும். இப்போது தமிழ் அறிஞன் என்று கருதக்கூடிய இளைஞர்கள் யாருக்கு வேலை கிடைத்திருக்கிறது. “அருட்பா மருட்பா“ என்ற ஆய்வு நூலை எழுதிய ப. சரவணன். அவன் சிலப்பதிகாரம் ஆய்வுப் பதிப்பு க�ொண்டுவந்திருக்கிறான். மணிமேகலையைப் பதித்திருக்கிறான். இந்தத் தலைமுறையில் தமிழ் அறிஞன். இவனை உ.வே.சா என்று சுட்டலாம். ஒரு காலத்தில் உவேசாவை வீட்டுக்குச் சென்று கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு அழைத்தார்கள். ப. சரவணன் ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை பார்க்கிறான். அவன் ஒரு தமிழ்த்துறைத் தலைவனாக இருக்க வேண்டுமே? இந்த மதிப்பைத் தமிழுக்குக் க�ொடுக்காமல், தமிழ் அழிகிறதென்றால் நியாமேயில்லை. அதுப�ோல சு. இளங்கோவன் தமிழ் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார். அதுப�ோல ஸ்டாலின் இராஜாங்கம் எவ்வளவு பெரிய ஆளுமை, சிறிய ஊதியத்திற்கு ஒரு த�ொகுப்பாளனாக வேலை செய்கிறான். ஸ்டாலின் இராஜாங்கம் ப�ோன்ற பெரிய தமிழ் ஆளுமைக்குக் கல்லூரியில் வேலையில்லை என்றால் என்னுடைய பையனை எப்படித் தமிழ் படிக்க அனுப்புவேன்? இதுதான் இன்றைய யதார்த்தம். தமிழ்க் கல்வியின் தரம். உ.வே.சா, மன�ோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதல் பெரியசாமிதூரன் வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு மேடைப் பேச்சாளர்களே தமிழ் அறிஞர்களாக அறியப்படுகிறார்கள். மேடைப் பேச்சாளர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது, நீங்கள் எழுதிய புத்தகம் என்ன? என்பதே. மேடையில் வித்தாரமாகப் பேசக்கூடியவர்கள், அரசியல் பேச்சாளர்கள். பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமிழ் அறிஞராக இருக்கும்போது இன்னொருத்தர் அறிஞராக இருக்கவேண்டிய அவசியமில்லையே. தமிழில் மாபெரும் வேலை செய்த அறிஞர்களால், உதாரணமாகப் பெரியசாமி தூரனால் மேடையில் அதிகம் பேச முடியாது. பிறகு அரசியல் பேச்சாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமிழ் அறிஞராக அங்கீகரிக்கப்பட்ட காலம் வந்தது. அந்த மேடைப் பேச்சாளர்கள் மேல�ோட்டமாக உள்ளீடற்ற அடுக்கு ம�ொழியில்

டிசம்பர் 2019 23


பேசக் கூடியவர்கள். நவீன இலக்கியவாதிகள் இந்த மைய ஓட்டத்தைப் பார்த்து அருவருத்து விலகி வந்தார்கள். அது ம�ொத்தமாக மரபிலக்கியம் மீதும் படிந்தது. தமிழில் சிலப்பதிகாரத்தை ஒட்டி ‘க�ொற்றவை‘ என்ற மரபிலக்கிய நாவல் நான் வந்து தான் எழுதினேன். இது நவீன இலக்கியமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் இதுதான் தமிழின் முதல் நவீன இலக்கியம் என்ற ஓங்கிச் ச�ொல்லியிருக்கிறேன். ஆகவே நவீன இலக்கிய வாசகனுக்கு இருக்கும் இந்த ஒவ்வாமை, நீங்கள் பட்டிமன்றப் பேச்சாளர்களை அந்தப் பக்கம் உட்கார வைத்தால் அவன் இந்தப் பக்கம் உட்காரமாட்டான். நீங்கள் குடவாயில் பாலசுப்ரமணியத்தை மேடையில் உட்காரவைத்தால் அவன் இந்தப் பக்கம் உட்காருவான். சச்சரவில்லாமல் முறையாக விவாதம் செய்வதெப்படி? எதாவது மரபுவழி விவாதமுறை உள்ளதா? விவாதம் - லாஜிக் என்பது பண்டைய கிரேக்க மரபில் த�ொடங்கி கிருஸ்தவ இறையியல் வழியாக மறுமலர்ச்சி காலத்தில் ப�ொதுச் சிந்தனைத் தளத்திற்கு வந்தது. மேலைநாடுகளில் அறிவியல், மருத்துவம் மற்றும் பல அறிவுத் தளங்களில் இந்த விவாதமுறை முக்கியமானது. இந்திய விவாதமுறை நியாய சாஸ்திரத்தில் த�ொடங்கி சமணம், ப�ௌத்தம், இந்து சமயங்களுக்குப் ப�ொதுவான முறையாக இருந்தது. அதற்குப் ப�ௌத்தர்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். பல உரைகள் எழுதியிருக்கிறார்கள். இதை எப்படி கற்கலாமென்றால், மேலைநாட்டு முறையைப் பல்கலைக்கழகங்களிலும் அல்லது இங்குள்ள மரபுவழி குருகுலங்களில் இந்திய முறையையும் கற்கலாம். இந்த இரண்டு தர்க்க முறைகள் தெரியாத ஆட்களால்தான் விவாதங்கள் சாத்தியமில்லாமல் ப�ோகிறது. நான் குரு நித்திய சைத்தன்ய குருகுலத்தில் இந்தியத் தர்க்க முறையைக் கற்றவன். நான் விவாதிக்கும் முறையென்றால் முதலில் நீங்கள் ச�ொன்ன விவாதக் கருத்தைத் திருப்பிச் ச�ொல்வது. எல்லா விவாதத்திலும் பரபக்கத்தை முதலில் ச�ொல்லுவேன். நீங்கள் இதைச் ச�ொன்னீர்களென்று. அப்புறம் இதை நான்கு ஐந்து துணைக் கருத்துகளாகப் பிரிக்கிறேன். நீங்கள் ச�ொல்லாதவற்றிற்கு நான் பதில் ச�ொல்ல முடியாது. அப்புறம் விவாதம் எப்படி நடக்க வேண்டும் எனச் சில விதிமுறைகள். நான் ஒரு மையக்கருத்தை விவாதத்திற்கு முன்வைக்கிறேன் என்றால், நான் விவாதிப்பதை நீங்கள் மறுக்க முடிந்தால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதி. செத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்

24 டிசம்பர் 2019

என்றால் விவாதமே கிடையாது. நம்பிக்கைகளுடன் விவாதிக்கக் கூடாது. பத்து அவதாரம் எடுத்தார் என்பதைய�ோ, நபிகள் கடைசி தூதர் என்பதைய�ோ விவாதிக்க முடியாது. இல்லை என்றால் மத நிந்தனைக்குப் ப�ோய்விடும். அப்புறம் அடிக்க வருவார்கள். விவாதத்திற்காகக் கருத்தை அதைச் ச�ொல்பவர் முன் வைக்க வேண்டும். உதாரணமாக, புதுமைப்பித்தன் முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர். ஏனென்றால், ஒன்று- அவர் பாரதியைப் பின் பற்றி வந்தவர். பாரதி மரபிலக்கியத்தைச் சார்ந்தவர். இரண்டு- புதுமைப்பித்தன் அன்றிருந்த உலக இலக்கியங்களைத் தமிழில் க�ொண்டுவந்தார். மூன்று- புதுமைப்பித்தனைத் த�ொடர்ந்து தமிழில் மற்ற நவீன எழுத்தாளர்கள் வந்தார்கள் என்று வரிசையாகத் தர்க்கத்தை முன் வைக்க வேண்டும். அதை மறுப்பவர் இந்த மூன்று கருத்துகளை ஒட்டியே மறுக்க வேண்டும். அதைவிட்டு புதுமைப்பித்தன் மனைவியை எப்படி நடத்தினார் தெரியுமா? அவர் திராவிட ஆட்களைத் திட்டினார் தெரியுமா? என்றால் விவாதமே கிடையாது. ஆகவே எந்தக் கருத்தை முன் வைக்கிறார�ோ அந்தக் கருத்தை மட்டும் மறுத்து, ரிவர்ஸ் செய்து விவாதிக்க வேண்டும். புதுமைப்பித்தன் நவீன இலக்கியத்திற்கு எப்படி முன்னோடியாக இருக்கிறார் என்ற மையக் கருத்தே பிரேம் ஆப் ரெபறென்ஸ். அதைவிட்டுவிட்டு புதுமைப்பித்தன் கயிற்றரவு என்ற கதை எழுதியிருக்கிறார். முதலில் அதைப் படி என்று மையக் கருத்தை விட்டு பேசுவது என்பது அடிப்படையில் கேலிக்கூத்தான விஷயம். மூன்றாவதாக, மையக் கருத்தை நிறுவத்தான் இந்த விவாதம் உதாரணங்களை மறுப்பதற்கல்ல. பாரதி மரபிலக்கியத்தைச் சார்ந்தவர் என்றால் உடனே பாரதி யார் தெரியுமா? என்று ஆரம்பித்தால் மையக் கருத்தை விட்டு விலகி விடுவீர்கள். உதாரணங்கள் ப�ொருத்தமானதாக இல்லை என்று ச�ொல்லலாம். ஆனால் உதாரணத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கக் கூடாது. இந்த மூன்றையும் பின்பற்றினால் தர்க்கப்பூர்வமாக விவாதிக்கலாம். இது மேலைநாட்டு விவாத முறைக்கும் நியாய சாஸ்திர முறைக்கும் உள்ள ப�ொதுவான வழிகள். நியாய சாஸ்திரம் இன்னும் தெளிவான சில கருத்துகள் ச�ொல்லும். ஐர�ோப்பியக் கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படுவது மூன்று, இது வாதிக்க முடியுமா? இதனை மறுக்கக்கூடிய தன்மை, மறுத்தால் ஏற்றுக்கொள்வது. பிரேம் ஆப் ரெபறென்ஸ், மையக் கருத்தின் ப�ொருட்டு விவாதிப்பது. அதைவிட்டு உலகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி நம்மால் பதில் ச�ொல்ல முடியாது. www.Magazine.ValaiTamil.com


திருக்குறள் இதுவரை எந்தெந்த ம�ொழிகளில் ம�ொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

-வலைத்தமிழ் த�ொகுக்கிறது...

திருக்குறள்

வெளிவந்துள்ள பிறம�ொழி ம�ொழிபெயர்ப்புகளைத் த�ொகுப்பதற்காகக் கடந்த ஆண்டு வலைத்தமிழ் ஒரு முயற்சி செய்தது ஆனால் முழுமைபெறவில்லை. இவ்வாண்டு மீண்டும் திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவின் முச�ௌரி மாகாணத்திலிருந்து திரு.இளங்கோ தங்கவேல் அவர்கள் இந்த முயற்சியைத் தலைமையேற்றுத் த�ொகுக்க முன்வந்துள்ளார்கள். இதற்காக ஒரு புலனக்குழு ஏற்படுத்தி அவருடன் பாஸ்டனிலிருந்து திருமதி.கார்திகைபிரியா மற்றும் மிச்சிகனிலிருந்து திருமதி.ப்ரவீணா ஆகிய�ோர் இக்குழுவில் இணைந்து இதுவரை வெளிவந்துள்ள ஒவ்வொரு ம�ொழிபெயர்ப்பு விவரங்களையும் த�ொகுத்து அதன் ஒரு பிரதியைச் சென்னைக்கு வரவழைத்துத் த�ொகுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

திரு.இளங்கோ தங்கவேல் www.Magazine.ValaiTamil.com

திருக்குறள் மாநாடுகள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் இந்தத் த�ொகுப்பைப் பயன்படுத்தவும், பிற ம�ொழியினருடன் நட்பு பாராட்டும்போது பரிசளிக்கத் தமிழ் மக்கள் பயன்படுத்தவும் முடியும் என்றும் நம்புகிற�ோம். உங்களிடம் திருக்குறள் பிறம�ொழி ம�ொழிபெயர்ப்பு நூல்கள் இருந்தால் அதன் அட்டைப்படத்தையும், உள்ளே ஒரு பக்கத்தையும், அதன் ஆசிரியர், பதிப்பு, எங்கே கிடைக்கும் என்ற விவரங்களை உள்ளடக்கி info@valaitamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும். வலைத்தமிழ் திருக்குறள் பகுதியில் உங்கள் பெயரை, உங்கள் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்தப்படும்.

டிசம்பர் 2019 25


வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?

முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் , பாரிஸ்

வள்ளுவன், நெஞ்சை அள்ளுவன்! அது என்ன வாய்-மை? மெய்-ம்மை? உண்-மை? மூன்றும் ஒன்று தானே? “ஆங்கிலத்தில் ஒரே ச�ொல், Truth! ஏன்யா தமிழில் மட்டும், ஒரு ச�ொல்லுக்கு இத்தனை ச�ொல்லுப் ப�ோட்டுக் குழப்பறீங்க? Why can’t u be simple like English? This Tamil is so hard ya!” என்று அங்கலாய்த்துக் க�ொள்வோர் நம்மிடையே உண்டு!:) வாருங்கள் பார்த்து விடலாம், தமிழின் எளிமையை & குறளின் நுட்பத்தை! 1. வாய்மை எனப்படுவது யாதெனின் – யாத�ொன்றும் தீமை இலாத ச�ொலல் (அறம்: வாய்மை: 291) 2. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள் மெய்ப் ப�ொருள் காண்பது அறிவு (ப�ொருள்: அறிவுடைமை: 423) 3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் (அறம்: ஊழ்: 373) ● * வாயால் ச�ொல்வது = ‘வாய்’மை ● * உடம்பாலும் (மெய்யால்) நடந்து காட்டுவது = ‘மெய்’ம்மை ● * உள்ளத்தாலும் இருப்பது = ‘உண்’மை (உள்+மை) _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 1) வாய்-மை வாய்மை எனப்படுவது யாது? = தீமை இல்லாத ச�ொலல்! ச�ொலல் -ன்னா வாயால் தானே ச�ொல்ல முடியும்? அதான் “வாய்”மை என்று பெயர்! வாயால் மட்டுமே உரைக்கப்படுவது வாய்மை! யாருக்குச் ச�ொலல்? நமக்குத் தீமை வராத ச�ொலல்!

26 டிசம்பர் 2019

அதானே? அல்ல! நம் தன்னலம் பற்றி நல்லாத் தெரியும் ஐயன் வள்ளுவனுக்கு:) அதான் “யாது ஒன்றும்” தீமை வராத -ன்னு ச�ொன்னாரு! பிறர்க்கு + நமக்கு = யார் ஒருவருக்குமே, “யாது ஒன்றும்” தீமை வராத ச�ொலல்! வாய்மை எனப்படுவது யாதெனின் – யாத�ொன்றும் தீமை இலாத ச�ொலல்! வாயால் உரைக்கப்படுவது வாய்மை! அது யார் ஒருவருக்கும் எத்தீமையும் இலாததைச் ச�ொலல்! 2) மெய்-ம்மை ஒருவர் “வாய்”மையே ச�ொன்னாலும்… எப்பொருள், யார்யார் “வாய்”க் கேட்பினும்… அவர்கள், “மெய்யாலும்” அப்படி நடந்து காட்டுறாங்களா? இல்லை வெறும் வாய்-அளவில் தானா? அவர்கள் உரைப்பது உதட்டளவுக் க�ொள்கையா? உயிரளவுக் க�ொள்கையா? மெய் = உடல்; உடலாலும் (தன் செய்கைகளாலும், கடைப்பிடித்தலாலும்) நடந்து காட்டுவது! அந்த “மெய்ப்”- ப�ொருளைக் காண்பது அறிவு! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள் மெய்ப் ப�ொருள் காண்பது அறிவு. பிறர் வாயால் பலப் பல உரைத்தாலும், அவர்களின் மெய்யான கடைப்பிடித்தல்களால், அவை தகுமா? தகாதா? என்ற மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு ஆகும்! 3) உண்-மை இப்படி, வாயாலும் மெய்யாலும் பல இருக்கலாம்! அவையெல்லாம் புறம் = வெளி உலகக் கட்டுப்பாடுகள்! ஆனால், அகம்? நம் உள்ளத்துக்கு

www.Magazine.ValaiTamil.com


மட்டுமே நம்மைப் பற்றி, நம் நடிப்பைப் பற்றி நன்கு தெரியும்! அதான், உள்+மை = உண்மை! எவ்வளவு தான் நுண்ணிய நூல் பல படித்து இருந்தாலும், அதைச் ச�ொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டினாலும், ஒருவரின் “உண்மை” அறிவே = உள்ளத்து அறிவே மிஞ்சும்! மற்றவை ஊருக்கு முன், புற வேடங்களே! அதான்…

வாய�ோடு முடிந்து ப�ோயிற்று; உள்ளத்துக்கும் ஏற்றிக் க�ொள்ளாதே!

• ஏத�ோ குற்றமில்லாத நன்மை கருதிச் ச�ொல்லிவிட்டாய் ஒரு ப�ொய்! • அதை வாய�ோடு விட்டுவிடு! • அதை மெய்யில் ஏற்றி, உள்ளத்தில் ஏற்றிக் க�ொள்ளாதே! ப�ொய்ம்மையும் “வாய்”மை இடத்த -என்று • அதுவே வாய்மை - மெய்ம்மை – உண்மையின் ச�ொன்னார் ஐயன்! நுட்பம்! ப�ொய்ம்மையும் “உண்”மை இடத்த -ன்னு ச�ொல்லலை பாருங்க? ஆங்கிலத்தில் ஒரே ச�ொல், Truth! தமிழில் மட்டும் ஏன் மூன்று? வாய்மை, மெய்ம்மை, உண்மை!. புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், வாயால் பிறரிடம் ஏனெனில் தமிழ், உளவியல் ம�ொழி! உள்ளத்தால் ப�ொய் ச�ொல்லலாம்; அது Exception மட்டுமே; ப�ொய்யாம�ொழி! ஆனால் அதை நம் உள்ளம் அறியும் அல்லவா? இது “திருக்”-குறள்! திரு மிகுந்த குறள்! உள்ளத்தால் அதான், ப�ொய்ம்மையும் ‘உண்’மை இடத்த என்று ப�ொய்யாது ஒழுகும் குறள்! ச�ொல்லவில்லை! வெறுமனே ‘வாய்’மை இடத்த!

(நவம்பர் - 2019) ● நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய க�ொட்டித்தீர்த்த கனமழையால் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவும் ஏற்பட்டது ● அரசியல் விளம்பரங்களுக்கு நவம்பர் 22 முதல் ட்விட்டரில் தடை ● இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அக்டோபர் 31 இல் காலமானார் ● காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்: முதல் முறையாகத் தமிழகத்தில் த�ொடங்கியது ● நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம் ● துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ● பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது. ● டிசம்பர் 1-ம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக் (Fasttag) மூலம் www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 27


கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியாகியது ● சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50% சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ●

நவம்பர் 5 இராஜராஜ க�ோயிலில் நடந்தது

ச�ோழனின்

1034

ஆவது

சதயவிழா

நிகழ்வுகள்

தஞ்சை

பெரிய

● தென்னிந்தியாவின் முதல் விமான நிலையத் தீயணைப்பு வீராங்கனையாக ரெம்யா என்பவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார் ● இலங்கை ஜனாதிபதி தேர்தலில் க�ோத்தாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று 8-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ● 5, 8-ம் வகுப்புகளுக்கான ப�ொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ● சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை ● நவம்பர் 10 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார் ● 3 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனது முதல் கதை ச�ொல்லும் ப�ோட்டியை சி.பி. எஸ்.இ.அறிவித்துள்ளது. ● காதுகேளாத�ோர், வாய் பேசமுடியாத�ோர் மற்றும் த�ொழுந�ோயாளிகள் இனி உள்ளாட்சித் தேர்தலில் ப�ோட்டியிடலாம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ● க�ோவையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு இளைஞர்கள் மீது ரயில்மோதி நால்வரும் உயிரிழந்தனர். ● ஆறு மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்து ஊருக்குள் சுற்றி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முகாமில் விட்டனர் ● தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ● சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ● ஆர்க்டிக் பிளாஸ்ட்’ என்ற குளிர்க்காற்று வீசுவதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்குக் குளிர் நிலவுகிறது. ● பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின்படி மாணவர்கள் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் ப�ொருட்களைக் க�ொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள ப�ொருள்கள் வழங்கும் திட்டத்தைத் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.

28 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்தும் 15-ம்

ஆண்டு வள்ளலார் தமிழிசை விழா டிசம்பர் 25 முதல் 29 வரை 5 நாள் விழா.. அனைவரும் வருக ...

இசைக்கடல்

பண்பாட்டு அறக்கட்டளை அதன் நிறுவனர் திருபுவனம் குரு .ஆத்மநாதன் தலைமையில், தமிழிசைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் தமிழிசை விழாவைச் சென்னையில் த�ொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அதில் முதல் மூன்று நாட்கள் வள்ளலார் நிகழ்ச்சியாகவும், அடுத்த இரண்டு நாட்கள் தமிழிசை அறிஞர்களின் பாடல்களும், சங்க இலக்கியம், பக்தி இலக்கியப்பாடல்கள் உள்ளிட்டவை பாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 முதல் 29 வரை நடைபெறும் ஐந்து நாள் தமிழிசை விழாவில், தமிழிசை வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒருவருக்கு “இசைக்கடல் விருது” வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வாண்டு பத்மஸ்ரீ ,தவில் சக்கரவர்த்தி ,ஹரித்துவாரமங்கலம் A.K. பழனிவேல் அவர்களுக்கு இசைக்கடல் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், மாணவர்கள் என்று தமிழிசையைப் ப�ோற்றும் விழாவாக நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர். க�ோ.விஜயராகவன், முனைவர் வை.பழனிச்சாமி IAS, பத்மஸ்ரீ சீர்காழி சிவ சிதம்பரம், டாக்டர் பத்ரி நாராயணன், முனைவர்.கு.சிதம்பரம், (தமிழாராய்ச்சி நிறுவனம்) , திரு.குணவதி நல்லிப்பிரியர் , புரவலர் www.Magazine.ValaiTamil.com

க�ோ.பாலச்சந்திரன் IAS , திருமதி.புனிதா கணேசன்( தலைவர்,பாரத் கல்விக்குழுமம்), திரு.ஹேமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக�ொண்டு இவ்வாண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். பல தலைப்புகளில் தினமும் இசைவிழா நடைபெறுகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நிகழ்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. இரா.ப�ொற்செழியன் அவர்களின் சீரிய முயற்சியின் விளைவாகத் த�ொடங்கப்பட்ட வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA), இசைவிழாவின் இறுதி நாளான டிசம்பர் 29ந் தேதி இசைக்கடல் பண்பாடு அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு நாள் தமிழிசை விழாவாக பெட்னா விழா நடத்துகிறது. இதில் பெத்னா அழைப்பின்பேரில் பல விருந்தினர்கள் கலந்துக�ொண்டு சிறப்பித்துவருகிறார்கள். இவ்விழாவில் பெட்னா தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வந்து கலந்துக�ொண்டு சிறப்பிக்கும் நடைமுறை உள்ளது. அதைய�ொட்டி இவ்வாண்டு பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி , மக்கள் த�ொடர்பு ஒருங்கிணைப்பாளர் திரு.க�ொழந்தவேல் இராமசாமி உள்ளிட்ட பலர் அமெரிக்காவிலிருந்து கலந்துக�ொண்டு சிறப்பிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்துக�ொள்ளும் அனைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் அறக்கட்டளை ப�ொறுப்பில், உபயதாரர்கள் உதவியில் வழங்கப்படுகிறது. உலகெங்கும் பல நாடுகளிலிருந்து தமிழிசை கற்கும் மாணவ-மாணவிகள் சென்னை

டிசம்பர் 2019 29


வந்து பாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இவ்விழா சிறப்பாக நடைபெற ஏதுவாக எஸ்.ஆர். எம் எம் குழுமத்தின் வடபழனி விழா அரங்கத்தைக் கட்டணமின்றி தமிழிசை வளர்ச்சிக்கு வழங்குவது மிகப்பெரிய பங்களிப்பாகும்.

தமிழிசை விழாவில் இவ்வாண்டு குடும்பத்துடன் கலந்துக�ொண்டு, தமிழிசை அறிஞர்களின் இசையைக் கேட்டு , தமிழர்களின் குழந்தைகள் இசையிலும், நடனத்திலும் முறையாகப் பயிற்சி பெற ஊக்கமளிக்கும் விழா.

நிகழ்ச்சி நாட்கள்: 25-12-2019 முதல் 29-12-2019 வரை நேரம்: 25-12-2019 முதல் 27-12-2019 வரை : 3:00PM - 8:30PM 28-12-2019 முதல் 29-12-2019 வரை : 9:00AM - 9:00PM இடம்: S R M பல்கலைக்கழகம், கலையரங்கம் (A /C), 3வது தளம் எண் 1, ஜவஹர்லால் நேரு சாலை, 100 அடி சாலை, வடபழனி, சென்னை - 28 கடந்த கால நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் :

30 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


மதுரை மாநகரில் முதல் உலகத் தமிழிசை மாநாடு... உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம்,மதுரை இணைந்து வரும் டிசம்பர் 14,15 தேதிகளில் மதுரையில் நடத்தவிருக்கும் முதல் உலகத் தமிழிசை மாநாட்டின் திட்டமிடல் , ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்.க�ோ.விசயராகவன் தலைமையில், இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலரும், இணைப் பேராசிரியருமான முனைவர். கு.சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைப்பில் மிகச்சிறப்பாக நடந்துவருகிறது. இதற்காகத் தமிழிசை குறித்த தலைப்புகளில் உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, த�ொகுத்து நூலாக வெளியிடும் பணிகள் மிகவும் துரிதமாக நடந்துவருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழக்கத்தில் இருந்த த�ொன்மையான இசை வடிவங்கள், கருவிகள், கலைஞர்கள், இசை நடனங்கள், ஆய்வு நூல்கள், ஆய்வாளர்கள், இசைக்கலைஞர்கள் என்று பல்வேறு க�ோணங்களில் அடையாளம் கண்டு த�ொகுக்கக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. www.Magazine.ValaiTamil.com

இதற்காகத் த�ொடர்ந்து ஆல�ோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில் ஒரு ஆல�ோசனைக்கூட்டமும், திரு.வி.ஜி.சந்தோசம், முனைவர்.சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பலரை அழைத்து ஒரு ஆல�ோசனைக் கூட்டமும், கவிஞர்.அறிவுமதி, இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன், இசைக்கல்லூரி முதல்வர்கள், வலைத்தமிழ் ஆசிரியர் திரு.ச.பார்த்தசாரதி, பத்திரிகையாளர் திரு. அக்கினி பாரதி, இசை அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரை அழைத்து மற்றொரு ஆல�ோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அனைத்து ஆல�ோசனைக் கூட்டங்களும் இயக்குநர் முனைவர். க�ோ.விசயராகவன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சிதம்பரம் குப்புசாமி ஆகிய�ோர் முன்னிலையில் நடைபெற்றது. அதைத் த�ொடர்ந்து முனைவர்.சிதம்பரம் குப்புசாமி, திரு.அக்கினி பாரதி ஆகிய�ோர் க�ொண்ட குழு பல இசை ஆர்வலர்கள், புரவலர்களைச் சந்தித்து அழைப்பு விடுத்து

டிசம்பர் 2019 31


வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பெருமைமிகு விழா மதுரையில் ஒரு மிகப்பெரிய வெற்றிவிழாவாக, அரசு விழாவாக நடந்து இசைத்தமிழுக்கு ஏற்றம் க�ொடுக்கும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு வெற்றிபெறுவதற்குக் கடுமையாக உழைத்துவரும் , திட்டமிட்டுவரும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.க�ோ.விசயராகவன் , ஒருங்கிணைப்பு செயலர் முனைவர்.கு.சிதம்பரம், உலகத் தமிழாராய்ச்சி

32 டிசம்பர் 2019

நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு அனைவரும் இசைவரலாற்றில் இடம்பெறுவார்கள். உலகம் முழுதும் தமிழிசை வளர்ச்சியில் ஊக்கம் க�ொண்டுள்ள, முத்தமிழை ப�ோற்றும் தமிழ்ச்சங்கங்களும், தமிழ்த்தொண்டு செய்யும் அனைவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குத் தங்கள் வாழ்த்துகளையும் , ஒத்துழைப்பையும் நேரடியாகத் த�ொடர்புக�ொண்டு தெரிவிக்கவும்...

www.Magazine.ValaiTamil.com


சிரிப்பு வலை நீச்சல்காரன் திருக்குறள் எல்லாம் ம�ொழிக்கும் ச�ொந்தமானதுனு நூலகத்தில் எழுதுனது தப்பா ப�ோச்சு” "ஏன்?" "அருள்மொழினு ஒருத்தர் திருக்குறள் புத்தகத்தை எடுத்துட்டுப் ப�ோய்ட்டாராம்." "தலைக் கவசம் ப�ோட்டே ஓட்டு ப�ோடப் ப�ோறாங்களே ஏன்?" "வாக்குச்சாவடிய சுங்கச் சாவடினு நினைச்சுட்டாங்களாம்" "காற்று மாசை எதிர்த்துப் ப�ோராட்டம் பண்ணதற்குக் கைது பண்ணிட்டாங்களாமே?" "உருவ ப�ொம்மை எரித்து எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்" "நீ திருடித் தந்த க�ொஸ்டீன் பேப்பர்ல இருந்து ஒரு கேள்வியும் வரல?" "அது எப்படி வரும், நான்தான் எல்லாப் பேப்பரையும் திருடிட்டேனே" "தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்குனு டிரைவர் பையனை ஏன் வேலையை விட்டு அனுப்புனேங்க?" "அவன் கார் ஓட்டும்போதே தூங்கிறான் சார்."

கீச்சுச் சாளரம் த�ொகுப்பு: நீச்சல்காரன்

நேர்த்தியான பதில் என்பது தேவையற்ற ஆணி தான் கேள்வி கேட்பது மட்டுமே குறியாய் இருப்பவர்களுக்கு குளிர் காலத்தில் தனியார் பேருந்திலும், க�ோடை காலத்தில் அரசு பேருந்திலும் ப�ோறவன் தான் புத்திசாலி..!!

@prakasht_

@mugamoodi11

நண்பன் கிட்ட நாம கஷ்டப்படுற�ோம்னு ச�ொன்னால் வருத்தப் படுவான்!! உறவுகாரன் கிட்ட நாம் மகிழ்ச்சியாக இருக்கிற�ோம் ச�ொன்னால் வருத்தப் படுவான்!! "ப�ொறுமைய�ோடு" இருப்பவர்கள் தான் நினைத்ததை "சாதிக்கிறார்கள்"!, "ப�ொறாமைய�ோடு" இருப்பவர்கள் தன் மனசாட்சியை "சாகடிக்கிறார்கள்"... தனிக்குடித்தனம் என்பது யாதெனில், "இருவரும் தனித்தனியே ம�ொபைல் ந�ோண்டி க�ொண்டிருப்பதே"

www.Magazine.ValaiTamil.com

@Kozhiyaar

@selva_twitz #யதார்த்தம் @ItsJokker

டிசம்பர் 2019 33


ந.செல்லம்மாள் ஜானகிராமன், மிச்சிகன்,அமெரிக்கா 1. ஆறெழுத்துப் புதிர் ஆதி எழுத்து இல்லையெனில�ோர் சிறார் கதைத் த�ொகுப்பின் பின்பகுதி; ஒரு காட்டு விலங்கின் குணாதிசயத்துடனும் ஒப்பிடுவர்; இரண்டிலிருந்து நான்கு வரை சேர்ந்தது காலத்தே தேய்ந்தவ�ோர் தகவல் பரிமாற்றம்; சில இசைக் கருவிகளிலும் காணப்படும்; கடை மூன்றெழுத்து காத்தலாகும்; ஆறும் இருந்தால் அடிமைத்தனமற்ற அகிலத்தில் இதனைப் பற்றிக் க�ொண்டு க�ோல�ோச்சலாம்... இது என்ன ?

2. நான்கெழுத்துப் புதிர் ஆதி எழுத்து வருதலின் வினையைக் குறிக்கும். முதலுமிரண்டுமிணைந்தால் த�ோல்வியென்பதில்லை;

வினைச்சொல்லின்

நான்குமிருந்தால்

ஈற்றானது இரண்டிருக்கும் ஓரெழுத்துறுப்பு;

த�ொழிற்பெயர்;

மானுடப்

ஆதியுமந்தமும்

பிறப்பிலிருந்து

சங்கமித்தால்

இறப்புவரையிலுள்ள

நிகழ்வுகளின் த�ொகுப்பு. நான் யார்?

3. ஐந்தெழுத்துப் புதிர் முதல் மூன்றும் சுத்தமாக இருந்தால் வையமும் வாழ்த்தும்

வாழ்பவரை; கடையெழுத்திருந்தால்

கதாசிரியருக்குக் காப்பியக் காவியங்களும் கைகூடும்; ஐந்தும் ஐக்கியமானால் ஈகை அற்றோர்க்கும் ஈர�ொன்பது நிரம்பினால் கிடைக்கும். அது என்ன?

விடை: 3. வாக்குரிமை 2. வாழ்க்கை 1.சுதந்திரம்

34 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


உலகத் தமிழ் நிகழ்வுகள் அமெரிக்காவில் மிச்சிகனில் நூலகத்திற்கு 200 தமிழ்ப் புத்தகங்கள் நன்கொடை

பு

‘ த்தகங்கள் படிப்பதையே வழக்கம் ஆக்குங்கள்’ என்றார் அப்துல் கலாம். இத�ோ தமிழ்ப் புத்தகங்கள் படிப்பதைப் பழக்கமாக்க முயற்சி! தமிழர்கள் நாம் அறிந்து க�ொள்ள வேண்டிய அரிய முயற்சி . அமெரிக்காவில் மிச்சிகனில் பார்மிங்டன் என்ற இடத்திலுள்ள நூலகத்திற்கு 200 தமிழ்ப் புத்தகங்கள் நன்கொடையாகக் க�ொடுக்கப்பட்ட நிகழ்ச்சி. இதனுடைய ம�ொத்த மதிப்பு த�ோராயமாக 920 வெள்ளிகள். இது ஒரு சிலரின் முயற்சியாகவும் பங்களிப்பாகவுமில்லாமல், இதில் தமிழ் அன்பர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்பியபடியால் மிச்சிகன் மாகாணத்தில் த�ோராயமாக வசிக்கும் ஐயாயிரம் தமிழ்க் குடும்பங்களில் ஒரு நூறு

www.Magazine.ValaiTamil.com

குடும்பங்கள் ஆளுக்கு $10 மட்டும் க�ொடுத்தால் இந்த நூலகத்திற்குத் தேவையான த�ொகை கிடைத்துவிடும் என்ற ந�ோக்கில் நன்கொடைகள் பெறப்பட்டன. இந்த முயற்சிக்கு மிச்சிகன், அமெரிக்கா என்றில்லாமல் மாநிலம், நாடு கடந்து ஆதரவு கரம் நீண்டதால் , அவர்கள் நினைத்த த�ொகையை 4 நாட்களில் ஈட்டி உள்ளனர். மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழு இந்த நிகழ்வை எளிமையாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த முயற்சி ஒரு நூலகத்தோடு முடிந்து விடாமல் இனிவரும் காலங்களில் மிச்சிகனில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் க�ொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று தமிழ் ஆர்வலர்கள் குழு உறுதியளித்தது சிறப்பு.

டிசம்பர் 2019 35


அமெரிக்கப் பள்ளிகளில் தமிழில் அறிவிப்பு!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தமிழில் யாராவது பேசுவதைக் கேட்டாலே இன்பம். எங்கேயாவது தமிழில் பெயர்ப்பலகை வைத்திருந்தால் பேரின்பம். அதையும் தாண்டி பள்ளிகளிலிருந்து வரும் மின்னஞ்சல் அறிவிப்பு தமிழில் வந்தால் என்னவென்பது? இப்படிய�ொரு நிகழ்வு நவம்பர் பதின�ொன்றாம் தேதி நடந்தது. மிச்சிகனில் கடுமையான பனிப்பொழிவை முன்னிட்டு பள்ளிகள் சீக்கிரமே மூடப்பட்டன. அதன் அறிவிப்பு சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குத் தமிழில் கிடைத்தது என்பது எவ்வளவு பேரானந்தம். தமிழ் நமது முதல் அடையாளம். வாழ்க தமிழ்!

தமிழகத்தில் ஐந்து புதிய மாவட்டங்கள் அறிவிப்பு..

தமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்ற அருண் சுந்தர் தயாளன், கிரண் குராலா, சிவன் அருள், ஜான் லூயிஸ், திவ்யதர்ஷினி ஆகியவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

36 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


தமிழ் பேசும் மக்கள் அதிகம்

வசிக்கும் நாடுகளில் சித்தா இருக்கை

பிற நாடுகளில் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சித்தா இருக்கை அமைப்பதற்கு அரசு ஏதேனும் முயற்சி மேற்கொண்டுள்ளதா? அல்லது முன்மொழிவு ஏதேனும் உள்ளதா?அப்படி ஏதேனும் இருந்தால் அது குறித்த விபரங்களையும் எந்தக் காலத்திற்குள் சித்தா இருக்கை அமைக்க அரசு விரும்புகிறது என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் கேள்விக்கு ஆயுஷ் அமைச்சர் அளித்த பதிலின் சாரம் என்னவெனில் ITEC எனும் மத்தியத் த�ொழினுட்ப மற்றும் ப�ொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் மத்திய ஆயுஷ் துறை சித்த மருத்துவத்தை மலேசியாவில் மேம்படுத்த, மலேசியாவில் “சுங்காய் பூல�ோ மருத்துவமனையில்” ஒரு சித்த மருத்துவரை நியமித்து, வர்ம சிகிச்சை அளிக்கிறது. மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் மத்திய சித்த ஆராய்ச்சி கழகம் சிங்கப்பூர் தேசிய நல ஆய்வுக்கழகத்திலும், சிங்கப்பூர் சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பிலும், மலேசியா “மாக்சா” பல்கலைக்கழகத்திலும் த�ொடர்பு க�ொண்டு, “சித்தா இருக்கை” அமைக்க விவரங்கள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து விருப்ப க�ோரிக்கை வந்ததும் மத்திய சித்தா கவுன்சில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும். மேலும் இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்தா பிரிவிற்கு நிதி உதவி அளிக்கிறத�ோடு மட்டுமல்லாமல் மலேசிய அரசுடன்செய்து க�ொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தம் படி, சித்த

www.Magazine.ValaiTamil.com

மருந்துகளை அங்கு பதிவு செய்து விற்பனை செய்யவும்,மலேசிய மாணவர்களைச் சித்த மருத்துவம் படிக்க முழு உதவியும் செய்கிறது. அதன் மூலம் வருடத்திற்கு 5 மாணவர்களைப் படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் நிறுவனங்கள்,மற்றும் ஆயுஷ் மருந்து செய் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ப�ோன்றவை சர்வதேசக் கண்காட்சிகள் / மாநாடுகள் / பட்டறைகள் / கருத்தரங்குகள் / சாலை காட்சிகள் / வர்த்தக கண்காட்சிகள் மேலும் பலவற்றில் பங்கேற்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆயுஷ் துறை முனைப்பெடுத்து வருகிறது. கூடவே வெளி நாடுகளில் சித்த மருந்துகளை ஆயுஷ் மருத்துவமுறைகளைப் பதியவும், வெளிநாட்டிலுள்ள மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களான யு.எஸ். எஃப்.டி.ஏ / ஈ.எம்.இ.ஏ / யுகே-எம்.எச்.ஆர்.ஏ / என்.எச்.பி.டி (கனடா) / டிஜிஏ. ப�ோன்றவற்றுடன் கலந்து சித்தா தயாரிப்புகள் பதிவு செய்திட முனைப்பு எடுப்பதற்கும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் சலுகைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் துறை உலகெங்கும் ஆயுஷ் இருக்கைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. “சித்தா இருக்கை”க்கான விருப்பக் க�ோரிக்கை, இன்னும் பிற நாடுகளிடம் இருந்து இதுவரை வரவில்லை. மத்திய அரசு அதற்குத் த�ொடர்ந்து முயன்று வருகிறது என்பது தான்.

டிசம்பர் 2019 37


தங்கமழை பெய்யும் இளவேனில்.. மீண்டும் தங்கம் வென்றார்

இந்தியாவின் தங்க மங்கை என இன்று அறியப்படும் இளவேனில் வாலறிவன் அவர்கள் தமிழ் நாட்டில் கூடலூரில் பிறந்தவர். பிரேசில் உலகக் க�ோப்பை ப�ோட்டியில் தங்கம் வென்ற இவர் சீனாவில் நடந்த உலகக் க�ோப்பை துப்பாக்கி சுடும் ப�ோட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.. தமிழில் பெயர்வைத்து உலக சாதனை புரிந்துவரும் தமிழ் மகளுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

கனடா அமைச்சரவையை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப்பெண்

கனடாவில் 338 இடங்களைக் க�ொண்ட நாடாளுமன்றத்துக்குக் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட�ோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. தேர்தல் வெற்றியைத் த�ொடர்ந்து பிரதமர் ட்ரூட�ோ தனது புதிய மந்திரிசபையை நேற்று முன்தினம் அமைத்தார். இந்த மந்திரிசபையில் முதல் முறையாகத் தமிழ்நாட்டின் வேலூர் பகுதியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் எம்.பி.யாகி உள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே த�ொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ப�ொது சேவைகள் மற்றும் க�ொள்முதல் துறை மந்திரி ஆகி இருக்கிறார். இவர் கனடாவில் ந�ோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்தார். முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள ட�ொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை

38 டிசம்பர் 2019

பேராசிரியையாகப் பணியாற்றியவர் ஆவார். இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சர�ோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார். அனிதா ஆனந்த் மந்திரி ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

www.Magazine.ValaiTamil.com


ஓதுவார்களுக்கு அரசு ஊதியம்

-திருவாவடுதுறை ஆதினம் க�ோரிக்கை தமிழின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்தின் பங்கு அளப்பரியது. இன்று க�ோயில்களில் அதை ஓதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதற்குப் ப�ோதிய சம்பளம் இல்லாமையே முக்கியக் காரணம். இதனைச் சரிசெய்ய அரசே க�ோயில்களில் அவர்களை நியமித்து அவர்களுக்கு அரசு சம்பளம் கிடைக்கும்படி செய்யவேண்டும் எனத் திருவாவடுதுறை ஆதினம் க�ோரிக்கை விடுத்துள்ளது.

22 காளைகளை அடக்கிய ஜல்லிகட்டு

வீரருக்கு 8 பசு மாடு, 1 காளை மாடு -உலகத் தமிழர்கள் வழங்கினர்.

22 காளைகளை அடக்கிய ஜல்லிகட்டு வீரர் அலங்காநல்லூர் இரஞ்சித் அவர்களின் வாழ்வாதாரம் கருதி, “எழுமின்” (The Rise) உலக தமிழ் த�ொழில் முனைவ�ோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டில் எட்டு கறவை மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு வழங்கப் பல்வேறு த�ொழிலதிபர்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்கள் வெளிநாடு/உள்நாடு தமிழ் த�ொழில் அதிபர்கள் மாநாட்டில் வீரரைப் பாராட்டிச் சிறப்பித்தது சிறப்பு .

வெளிநாட்டு நன்கொடைக்குக் கட்டுப்பாடுகள் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு நன்கொடை பெறும் த�ொண்டு நிறுவனங்களின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிமுறைப்படி, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத 14 ஆயிரத்து 800 த�ொண்டு நிறுவனங்களின் பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மேலும் 1,807 த�ொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிறுவனங்கள், கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையைப் பலதடவை நினைவூட்டிய பிறகும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெறத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 74 இசையாசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த 74 காலியிடங்களுக்கு, இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இசைஆசிரியர்களுக்கு, விருப்ப இட மாறுதல் கவுன்சிலிங் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட்டது. ‘ஆன்லைன்’ வழியே, காலியிடங்கள் கண்டறியப்பட்டு, விருப்பமான ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது. பின், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 74 இசை ஆசிரியர்களுக்கு, எந்தக் கையூட்டும் இல்லாமல் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நியமனம், கவுன்சிலிங் வழியாக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். நேர்மையாக இந்தப் பணியிடங்களைத் தமிழிசையை அரசுப்பள்ளிகளில் ச�ொல்லிக்கொடுக்க நியமித்தக் கல்வித்துறையின் செயல்பாட்டைப் பலரும் பாராட்டுகிறார்கள். www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 39


நீட் தேர்வை ஏன் திரும்பப்பெறக்கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி .. மருத்துவக் கல்லூரி தகுதித் தேர்வான நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 3081 மாணவர்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள். மேலும், நீட் பயிற்சி மையத்தில் இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது .இவ்வாறு பெரும் த�ொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்களின் எட்டாக்கனியாக ஆகிவிட்ட நீட் ஏன் திரும்பப் பெறக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது

மாமன்னன் இராஜராஜ ச�ோழனின் 1034-வது சதய விழா

தஞ்சை பெரிய க�ோயிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ ச�ோழனின் 1034 ஆவது சதய விழா தஞ்சையில் க�ோலாகலமாகக் க�ொண்டாடப்பட்டது . ஒரே கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிடக் கலையிலும் இராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் க�ொண்டாடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், ப�ொதுமக்கள் உட்படப் பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜச�ோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் துவக்கி வைத்தார். இராஜராஜ ச�ோழனின் சதய விழாவால் தஞ்சை நகரமே விழாக் க�ோலம் பூண்டது.

40 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamtil.com


வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் க�ொண்டுசென்ற திரு.வைக�ோ

விமான சேவை என்பது சாதாரண மக்களும், விவசாயிகளும், த�ொழிலாளிகளாகப் பல நாடுகளுக்குச் செல்பவர்களும் பயன்படுத்தும் நிலையில் இன்று வளர்ந்திருப்பதால், இந்திய விமானங்களில் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தியில் இருப்பதும், அந்தந்த மாநில ம�ொழிகளில் இல்லாமல் இருப்பதும் அவர்களுக்கு அறிவிப்பின் ந�ோக்கம் நிறைவேறாமல் ப�ோகும் என்றும், சிங்கப்பூர், இலங்கை, லுப்டான்சா, கத்தார் உள்ளிட்ட பல விமான சேவைகள் வந்திறங்கும், புறப்படும் விமான நிலையத்திற்கு ஏற்ப மக்கள் பேசும் ம�ொழிகளில் அறிவிப்புகளைச் செய்யும் நிலையில், இந்திய விமானங்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாடாளுமன்ற அவையின் கவனத்திற்குக் க�ொண்டுசென்றார். அதை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அதை ஏற்றுக்கொண்டு ஆவனசெய்ய உரிய துறைக்கு அறிவுறுத்தினார். இது நீண்டநாள் க�ோரிக்கையாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுவந்த நிலையில், இது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிஞர் புதுவை சிவம் பிறந்தநாள் விழா மற்றும் விருதுகள்..

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிஞர் புதுவை சிவம் பிறந்தநாள் விழா நவம்பர் 16,சனிக்கிழமை க�ொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர்.வி.முத்து தலைமை வகித்து கவிஞர் புதுவை சிவத்தின் பன்முக ஆற்றல் குறித்து எடுத்துரைத்தார். துணைத்தலைவர் ந.ஆதிகேசவன் முன்னிலை வகித்தார். விழாவில் வலைத்தமிழ் ஆசிரியர் ச.பார்த்தசாரதி அயலக விருது பெற்றார். மேலும் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.முத்துவேல், வழக்குரைஞர் ப�ொன். மணிமாறன்,பேராசிரியர் ப�ொன்.திலகவதி , நல்லாசிரியர் வெ.கிருட்டிணகுமார், பேராசிரியர் க�ோ.வெற்றிச்செல்வி ஆகிய�ோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அரசு சார்புச் செயலர் ந.முருகவேல் , தமிழ்ச்சங்க அயலகச் செயலர் திரு.குணவதி மைந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக�ொண்டனர்.

ஜனவரி 16ஆம் தேதியைத் தேசிய திருவள்ளுவர் தினமாக

டாக்டர்

பாரிவேந்தர் எம்பி க�ோரிக்கை

தமிழகத்தில் ஆண்டுத�ோறும் சனவரி 16-ந் தேதி க�ொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளைத் தேசிய திருவள்ளுவர் தினமாக நாடு முழுவதும் க�ொண்டாட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி அவர்கள் மக்களவையில் க�ோரிக்கை விடுத்தார். www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 41


அண்ணா பல்கலைக் கழகம் -தமிழில் பெயர்ப் பலகை அண்ணா பல்கலைக் கழகம் என்றால் அனைவரும் அறிந்ததே. அங்கு ப�ொறியியல் பயிலவேண்டும் என்பது பல மாணவர்களின் அவா . அந்த அளவிற்குப் பிரபலமானது அண்ணா பல்கலைக் கழகம். குறிப்பாக, தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் இப்பல்கலைக் கழகம் உள்ளது. இதன் நுழைவு வாயிலாக உள்ள சிகப்புநிறக் கட்டடத்தில் COLLEGE OF ENGINEERING GUINDY என ஆங்கிலத்தில் மட்டுமே ப�ொறிக்கப்பட்டிருந்த பெயரை, தற்போது “கிண்டி ப�ொறியியல் கல்லூரி” என்று தமிழிலும் பெயர்ப் பலகை ப�ொறிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது .

யாழ்ப்பாணத்தில்

உலகத் திருக்குறள் மாநாடு

42 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவு `அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிகிச்சைப் பிரிவு த�ொடங்கப்படும்’ என முன்னதாகவே அரசு அறிவித்திருந்ததைத் த�ொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு அமைக்க தேசிய சுகாதாரத் திட்டத்தில் ரூபாய் 19 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கை சமூகத்துக்கு சிகிச்சைக்காகத் தனிப்பிரிவு த�ொடங்கப்பட்டுள்ளது. . இதற்கு `ட்ரான்ஸ்ஜெண்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஊடறு -அனைத்துலக பெண்கள் மாநாடு கீதா இரவிச்சந்திரன் ,சிங்கப்பூர்

www.Magazine.ValaiTamil.com

உலகளாவிய தமிழ்ப் பெண்கள் எதிர் ந�ோக்கும் சிக்கல்கள், வாழ்வியல் நெருக்கடிகள், ஆகியவற்றின் ஆழ அகலங்களை ஊடுருவி ந�ோக்கி அவற்றைக் குறித்து ஆர�ோக்கியமான கலந்துரையாடல்களை நடத்த ஏதுவான தளமாக “ஊடறு’ அனைத்துலகப் பெண்கள் மாநாடு 2005 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் த�ொடங்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஊடறு 2019ல் சிங்கப்பூரில் முதன்முறையாக நவம்பர் 2 , மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, இலங்கை, நியுசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 15 பெண் பேராளர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்த 15 பெண் பேராளர்களும் கலந்து க�ொண்டனர். இரு நாட்களும் காலை 10.-30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “சிங்கையில் இந்தியப் பெண்கள்”என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். கலை, கல்வி, மேடை, நாடகம், ஊடகம், விளையாட்டு, சமூக சேவை, வரலாறு, சட்டத்துறை, சிறப்புத் தேவைகளை உடைய குழந்தைகளின் வாழ்வியல், சமூக நல்லிணக்கம், த�ொழில்முனைப்பு, பெண்களின் ஆர�ோக்கியம் என்று பல்வேறு தலைப்புகளை ஒட்டி சிங்கையின் பெண் பேராளர்கள் கட்டுரைகள் படைத்தனர். மாநாட்டின் இரண்டாம் நாளின் ப�ோது,’ஊடறு’ றஞ்சியும், புதிய மாதவியும் த�ொகுத்த 33 பெண்களின் நேர்காணல்கள் அடங்கிய ‘சங்கமி-பெண்ணிய உரையாடல்கள்’ எனும் நூல் யுனிவர்செல் நிறுவனத்தின் இயக்குநரான திருமதி ஜீவிதாவால் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 2019 43


நினைவலைகள்...

நடுவயதிற்கு முன்னே மறைந்த

நற்றமிழ்ப்பரிதி -பரிதிமாற் கலைஞர் மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் க�ோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக சூலை 6, 1870 ல் இவர் பிறந்தார். வடம�ொழியை தந்தையாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார். இளவயது முதலே தமிழ் ம�ொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் க�ொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் க�ொண்ட பற்றினால் தனது பெயரை வடம�ொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்படப் பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதித் தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் நவம்பர் 2, 1903 இல் மறைந்தார்.

‘குட்டிகளின் கெட்டி ’ கவி-அழ.வள்ளியப்பா “குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் த�ொண்டு செய்வதே என் முக்கியக் குறிக்கோள்” எனக் கூறிய அழ.வள்ளியப்பா நவம்பர் 7, 1922-ல் புதுக்கோட்டை அருகே உள்ள ராயவரத்தில் பிறந்தார். குழந்தை இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர். அவரது ‘மலரும் உள்ளம்’,’சிரிக்கும் பூக்கள்’ ப�ோன்ற படைப்புகள் முக்கனி ப�ோலச் சுவை மிக்கவை. குழந்தைப் பாடல்களைப் படைப்பத�ோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களில் எளிமை, இனிமை, தெளிவு இம் மூன்று பண்புகளும் க�ொலுவிருக்கக் காணலாம். ‘வட்டமான தட்டு’ என்ற பாடலில் குழந்தைகளுக்கு வட்டத்தையும், ‘எட்டில் பாதி’, ‘எடுத்தான் மீதம்’, ‘ம�ொத்தம் எட்டு’ என்றாற் ப�ோல் வகுத்தல், கழித்தல், கூட்டல் கணக்கு-களையும் ச�ொல்லித் தருவது இப் பாடலின் சிறப்பு. தட்டு, லட்டு, எட்டு, விட்டு, கிட்டு, பட்டு, பிட்டு என்ற ஓசை நயம் வாய்ந்த ச�ொற்கள் இப் பாடலில் அணிவகுத்து வருவதும் சிறப்பு. 1982ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டம் வழங்கியது. இது எந்தக் குழந்தை இலக்கியப் படைப்பாளரும் பெறாத தனிப்பெருஞ் சிறப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து க�ொண்ட வள்ளியப்பா, ‘குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது!

44 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


“வலைத்தமிழ் ம�ொட்டு” வாசித்துவிட்டீர்களா? சிறுவர்களுக்கான இதழாக

இவ்வாண்டின்

இதழான இதழை குழு

காலாண்டு மூன்றாவது

"வலைத்தமிழ்

ம�ொட்டு"

வெளியிடுவதில்

ஆசிரியர்

மகிழ்ச்சியடைகிறது.

தலைமுறைக்கு

நம்

தமிழ்

அடுத்த ம�ொழியைக்

கற்றுக்கொடுக்க உந்துசக்தியாக இவ்விதழை வடிவமைத்துள்ளோம்.

தமிழ்ப்பள்ளிகள்

இதை வகுப்பறையில் பயன்படுத்தி உங்கள் கருத்துகளை பெற்றோர்களும் தங்களுக்குத்

எங்களுக்கு ,

எழுதுங்கள்.

ஆசிரியர்களும்

தெரிந்த

சிறுவர்களுக்கு

இவ்விதழைக் க�ொண்டுசேர்க்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிற�ோம். To go to Magazine Home page: www.Mottu.ValaiTamil.com அச்சுப் பிரதி விருப்பத்தைப் பதிவு செய்ய, த�ொடர்புக்கு

mottu@ValaiTamil.com

-க்கு

மின்னஞ்சல் அனுப்பவும்.

www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 45


46 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


www.Magazine.ValaiTamil.com

டிசம்பர் 2019 47


Dr. V.R.S. Sampath,

Founder,Madras Development Society Convener, World Tamils Economic Conference 48 டிசம்பர் 2019

www.Magazine.ValaiTamil.com


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.