செய்முறை:
பூண்டையும் இஞ்சியையும் 2 மி.மீ அளவு சன்ன மான துண்டுகளாகப் ப�ொடித்துக் க�ொள்ளவும். மிளகை உடைக்காமல் முழுதாக எடுத்துக் க�ொள்ளவும். துளசியைப் ப�ொடியாக நறுக்கிக் க�ொள்ளவும். அனைத்தையும் பாலில் ப�ோட்டு ஒரு கெட்டியான பாத்திரத்தில் சிறுதீயாக வைத்துக் கிளறிக் க�ொண்டே இருக்கவும். பால் சுண்டி க�ோவா ப�ோல் வந்ததும் சுரண்டி உருட்டி எடுத்துக் க�ொள்ளவும். இரவு சாப்பாட்டுக்குப் பின் இதைச் சாப்பிடவும்.
நாளடைவில் க�ொஞ்சம் க�ொஞ்சமாகப் பாலின் அளவைக் குறைந்துக�ொண்டே வர இஞ்சி, பூண்டு வேகிற நேரம் குறைந்து அரை வேக்காடு கால் வேக்காடு எனக் குறைத்து, சாப்பிட வாயிம் வயிறும் பழகிக் க�ொள்ளும். பிறகு சிரமமின்றி பால் சேர்த்து வேக வைக்காமலே பச்சை இஞ்சி. பூண்டு, மிளகு, துளசியை வாயிலிட்டு மென்று அப்படியே சாப்பிடப் பழகிக் க�ொள்ளலாம். பச்சையாகச் சாப்பிடுவதுதான் சரியான முறை. ஆனால் எடுத்ததும் பச்சையாகச் சாப்பிட்டால்
பலருக்கு வயிறு எரிச்சல் ஏற்பட்டு இதைச் சாப்பிடாது விட்டுவிடுவர். இதை எவரும் சிரமமின்றி சாப்பிட்டுப் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறையைச் ச�ொன்னேன். இந்தத் தயாரிப்பை 30 (அ) 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் வருமுன் காக்கும் நடவடிக்கையாக எடுத்துக் க�ொண்டு இதயத்தைப் பாதுகாத்துக் க�ொள்ளலாம். இதைத் தயாரிக்க அனைத்துப் ப�ொருட்களும் வீட்டிலேயே இருக்கிறது. இதை ஆயுள் முழுதும் எவ்வளவு காலம் சாப்பிட்டாலும் எந்த கெடுதியும் இல்லை. நடந்தால் மூச்சு வாங்குவதும், நெஞ்சு வலி வருவதும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு த�ொடர்ந்து நடந்தால் சரியாகிப்போவதும், த�ொடர்ந்து படியேறினால் நெஞ்சு வலிப்பதும், மூச்சு வாங்குவதும் இதய ந�ோயின் முன்னறிவிப்புகள். நமது இதயம் தரும் எச்சரிக்கை. இதயம் தனது பிரச்சனையைத் தெரிவிக்கும் சமிக்ஞைகள். எனது அறிவுரையின்படி இந்த நிலையில் இம்மருந்துணவால் நலம்பெற்றவர்கள் பலர்.
உலகத்தமிழ் நிகழ்வுகள்
கம்போடியா நாட்டு கலாச்சார துறை அமைச்சகத்தின் திருவள்ளுவர் விருதை
உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் அத்துறையின் இயக்குனர் ச�ொக்கையா அவர்கள் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், பத்திரிகையாளர் திரு.ரவி குணவதிமைந்தன் அவர்களுக்கு வழங்கினார். அருகில் பாடலாசிரியர் விவேகா, திரு.சித்தர் தணிகாசலம், திரு.சீனிவாசராவ்.
www.Magazine.ValaiTamil.com
அக்டோபர் 2019 37